Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

மாயம் - 5

ஊட்டியின் ஆகால குளிரில் நடுங்கி கொண்டிருந்த தேகத்தை தீண்டிய தென்றளின் திடீர் வரவில் தன் வலது புறம் நோக்கினாள் அந்த குட்டி புறா...

வெள்ளை நிற இடை வரை நீண்ட கூந்தலுடன்... இரண்டடி உயரத்தில் .. பச்சை நிற கண்கள் பளபளத்திட இதழ் பயத்தில் நடுங்க நின்ற குழந்தையினை சட்டென பின் இருந்து ஒரு வலிய கரம் இழுத்து கொண்டது...

கண்களை இறுக்க மூடி எதையோ இறுக்கி பிடித்திருந்த அக்குழந்தை " புறனா " என தன் நாமத்தை யாரோ அழைப்பதை கேட்டு கண்களை திறந்தவள் கண்கள் பிரகாசிக்க ஆச்சர்யமாய் " இரட்சகரே " என அழைத்தாள்...

அவளின் அழைப்பில் கண்கள் பளபளத்திட முகத்திறை அனிந்திருந்த அவன் மென்னகை புரிந்தான்...

புறனா : எம்மை தாம் காத்திட வரவளிப்பீர் என அணித்தரமாய் நம்பியே இப்புறம் வந்தேன் ...

இரட்சகர் : புறனா.. இந்நொடி நின் பாதுகாப்பு எமது பொருப்பு.. ஆயின்.. எமது சகோதரர்களோ யானோ வர இயலா நிர்ப்பந்தம் ஈடேரினால் என் செய்வாய் இக்கும்மிருட்டில்... ஆதலின் இக்கணம் முதல் எங்கும் தனியே செல்ல கூடாது... சரியா... என மென்மையாய் கேட்க...

புறனா : சரி இரட்சகரே.. இனி இச்செயலை புரிய மாட்டேன்... என அழகாய் இதழ் விரிய சிரித்தாள் குழந்தை...

இரட்சகர் : நீர் எண்ணுவதை போல் யான் இரட்சகர் இல்லை புறனா... என குழப்பம் நிறைந்த கண்களுடன் கூற...

புறனா : சிறு பிள்ளை தானே ஏமாற்றிடலாம் என எண்ணாதீர் இரட்சகரே... சிறு பிள்ளையானாலும் எம் கூட்டத்தில் யானே சிறந்தவள்... இரட்சகரை யான் அறியாதிருப்பேனா...

இரட்சகர் : ஹ்ம் இல்லையம்மா... யான் தம்மை ஏமாற்ற முனையவில்லை... நீர் எண்ணுவதை போல் யான் இரட்சகர் இல்லை...

புறனா : பின் எவ்வாறு எம்மை காக்க முன் வந்தீர்களாம் .. சில திங்கள் முன் கூட தாம் தானே எம்மை அந்த " துஷ்ரந்கள் " இடமிருந்து காத்தருளினீர்...

இரட்சகர் : துஷ்ரந்துகளா.. யாரந்த துஷ்ரந்கள்... என ஒன்றும் தெரியாமல் வினவிட...

புறனா : தமக்கு என்னானது இரட்சகரே... அனைத்தையும் மறந்து விட்டீரா... என இரு கரத்தையும் கன்னத்தில் வைத்து கண்களை அழகாய் விரித்து கேட்க...

இரட்சகர் : ஹாஹா மறந்து விட்டேனம்மா... சற்று நீரே கூறேன்...

புறனா : சரி யானே கூறுகிறேன்.. விந்வார்த்த யஷ்டிகளின் சகாயம் (சேவை , உதவி ) செய்வதும் நம் போன்றவர்களை அழித்திடவும் நியமிக்கப்பட்டவர்கள் தான் துஷ்ரந்கள்..

இரட்சகர் : விந்வார்த்த யஷ்டிகளெனில் யாரம்மா... என மீண்டும் ஒரு வினாவினை முன் வைக்க...

புறனா : ஹா... இதையும் யானே கூற வேண்டுமா... என மெதுவாய் கேட்டவளின் கண்களில் ஒரு சிறு மிரட்சி தென்பட்டது...

இரட்சகர் : ஏனம்மா கூறினால் என்ன...

புறனா : சரி தம் செவியினை அருகில் கொண்டு வாருங்கள்... என மிகவும் மெதுவாய் கூற...

இரட்சகர் : ம்ம்ம் சரி சொல்... என இவனும் கவனிக்க...

புறனா : யட்சினி சர்ப்ப வம்சத்து விந்தைகளே விந்தாவார்த்த யஷ்டிகளென போற்றப்படுவர்... என காற்றுக்கும் கேட்காதவாறு மெல்லிய ஓசையில் கூற... அவ்வம்சத்தை கேட்டவனின் உடலில் அடுத்த நொடி மின்சாரம் பாய்ந்தது....

அவ்வுணர்வினை அதிர்ச்சியோடு உணர்ந்திருந்தவன் அதே உணர்வுடன்...

இரட்சகர் : அவர்களின் நாமத்தினை கூற நீர் ஏன் அவ்வளவு தயங்கினாய்... என இவனும் மெதுவாய் கேட்க...

புறனா : தங்களுக்கு என்னவானது இரட்சகரே... துஷ்ரிகளை பற்றி மறவீரா... பத்து கற்களடி தொலைவில் இருந்தாலும் நாம் பறைவதை அச்சு பிசமாகமல் மறுநொடியே செவி சாய்த்து பெரும் ஒலி எழுப்பி துஷ்ரந்களை எழுப்பிடும்... என அதிர்ச்சியுடன் கூறினாள்...

இரட்சகர் : துஷ்ரந்களுக்கும் துஷ்ரிகளுக்கும் உள்ள வேறுபாடை அறிவாயா புறனா...

புறனா : ம்ம் ஏதோ சிலதை அறிவேன்.. துஷ்ரிகளை நாம் காண இயலும்.. இருப்பின் துஷ்ரந்களை தங்களையன்றி சிலரால் மாத்திரமே காண இயலும்... துஷ்ரிகள் வயது முதிர்ந்த தோற்றத்தில் காய்ந்த சிறகுகளுடன் ஒரு வௌவாலை போல் காட்சி அளிக்கும்... துஷ்ரந்களின் உருவம் எத்தகையதென்பதை யான் அறியேன்...

இரட்சகர் : ம்ம் உம் இருப்பிடம் எங்குள்ளது புறனா...

புறனா : ஹா.. அதையுமா மறந்துவிட்டீர்கள்...

இரட்சகர் : இல்லையம்மா மெய்யாகவே யான் இரட்சகனில்லை... யான் உம் நாமத்தை அன்றி வேறேதுவும் அறியவில்லையம்மா...

புறனா : அப்படியெனில் மெய்யாகவே தாம் இரட்சகரில்லையா... அட நின் விழிகளை யான் கவனிக்கவில்லையே... தமது விழிகள் வெண்மை நிறத்திலல்லவா காட்சி அளிக்கிறது... எம்மை மன்னித்தருளுங்கள் வானவரே... வனபயணம் மேற்கொள்ளும் எம் போன்றவரான தங்களை தவறாய் எண்ணி விட்டேன்... மன்னியுங்கள்...

இரட்சகர் : அதில் தவறில்லை புறனா... யான் நீர் கூறுவதை போல் வானவரும் இல்லை... முதல் முறை இவ்விடத்திற்கு வந்துள்ளேன்... நீ உம் இருப்பிடத்தை கூறு...

புறனா : ம்ம் தேவையன்று தமையனாரே... எம் இருப்பிடத்திற்கு யானே பாதுகாப்பாய் சென்றிடுவேன்.. தாங்கள் எம் உடன் எம் இருப்பிடத்திற்கு பயணப்பட்டால் தாம் இரட்சகரை போலுள்ளதால் நிச்சயம் தங்களுக்கு ஆபத்தாகிவிடும்....

இரட்சகர் : அதை யான் கவனித்து கொள்கிறேன் புறனா... வா செல்வோம்...

புறனா : வேண்டாம் வேண்டாம்... யான் சென்று கொள்வேன்... தாங்கள் பாதுகாப்பாய் இங்கிருந்து செல்லுங்கள்....

இரட்சகர் : ம் சரி ... ஆபத்தெனில் ஒரு குரல் கொடு புரிந்ததா...

புறனா : புரிந்தது... என கீழே இறங்கியவள் கண்கள் மூடி கொள்ள... சில நொடிகளில் ஒரு தென்றல் காற்றால் சூழ பட்டவள் நொடியில் புறாவின் உருவத்திற்கு மாறி அங்கிருந்து பறந்து சென்றாள்...

அதை மென்னகையுடன் பார்த்து கொண்டிருந்தவன் விஸ்வரூப பௌர்ணமி தினம் முடிவடைவதை புதிதாய் தோன்றிய ஆச்சர்யத்துடன் மனம் நெருட பார்த்து நின்றான்....

சந்திரன் நிலமகளடி சாய... சூரியன் தன் ஆளுமையை உச்சத்தில் நிலை நாட்ட.... பல வருடம் களித்து தங்களின் சொந்த மண்ணில் காலடி பதித்தனர் நம் அனு திவ்யா மற்றும் ப்ரியா...

மூவருக்கும் இரவு கிடைத்த எதிர்பாரா மகிழ்ச்சியும் பிறப்பிடம் வந்த உற்சாகமும் அவர்களின் வதனத்தில் தாண்டவாடியது... ஏர்போர்ட்டை விட்டு வெளியேறிய சகோதரிகள் மூவரும் தொலைவில் ஒரு உருவம் தங்களை நோக்கி கையசைப்பதை கண்டு... அண்ணா என கத்தி கொண்டே அருகில் சென்றனர்....

தன் தங்கைகளை பதினைந்து வருடங்கள் பின் கண்ட மகிழ்ச்சியில் தன்னை அணைத்து கொண்டவள்களின் தலையை வாஞ்சையாய் வருடி விட்டான் ரித்விக்...

ரித்விக் : அனுமா திவ்யாமா ப்ரியாமா ... நாழு பேரும் எப்டி டா இருக்கீங்க...

திவ்யா : எங்களுக்கு என்னண்ணா ரொம்ப சந்தோஷமா இருக்கோம்... நீ எப்டி அண்ணா இருக்க...

ப்ரியா : ஏன் டா அண்ணா இப்டி எழச்சு போய்ட்ட... மது சோறு போட மாற்றாளா...

ரித்விக் : வந்த உடனே வேலைய ஆரம்ச்சிருச்சு பாரு பிசாசு...

அனு : அவ அப்டி தான்னு உனக்கு தெலியாதா அண்ணா... சரி சரி வா வா காரெடு... நாம போலாம்... எல்லாரையும் பாக்கனும்... என அவசரப்படுத்த....

ரித்விக் : பொருமை அனுமா பொருமை....

திவ்யா : டேய் எக்ஸைட்டிங்கா இருக்கு டா அண்ணா... போகலாம்... என முகத்தை சுருக்கி சினுங்க...

ரித்விக் : அட இருங்க டி.. என கூறி கொண்டிருக்கும் போதே... ஹே மை டியர் ஸிஸ்ட்டாஸ்ஸ் என்ற முகிலின் குரலை கேட்டு ஆவலாய் திரும்பினர்...

காக்கி உடையில் கைகளை விரித்து கொண்டு ஜீப்பிலிருந்து இறங்கி வந்தான்...

ப்ரியா : ஹே முகி அண்ணா... என கத்தி கொண்டே அணைப்பதை போல் ஓடி சென்று அவன் மண்டையிலே ஒரு கொட்டு வைத்தாள்...

முகில் : அடிப்பாவி ட்யூட்டிய கூட பாக்காம ஆசை ஆசையா ஓடி வந்தா... கொற்றியா நீ என ப்ரியாவை முறைக்க ப்ரியா நாக்கை துருத்தி நகைத்தாள்...

திவ்யா : அவ கெடக்குரா அண்ணா... நீ எப்டி இருக்க... இப்டி யூனிஃபார்மோடையே வந்துருக்க...

முகில் : நல்லா இருக்கேன் திவிமா... கேஸ் டென்ஷன் டா... வீட்குக்கு கேகைட் போகல... அதான் நேரா உங்கள பாக்க இப்டியே வர வேண்டியதா போச்சு... என கூறிய நொடி அனுவை எதர்ச்சையாய் கண்டவன் அவள் தோளை தொட்டு உலுக்கினான்...

அனுவின் மணக்கண்ணில் இதே போல் கருப்பு நிற உடையில் இரவு முழுவதும் வீட்டிற்கு கூட செல்லாமல் மறுநாள் காலையில் கலைந்த கேசத்துடன் தூங்காத கண்களுடன் உடல் முழுவதும் சோர்வெழுந்தாலும் தன்னவளை கண்ட திருப்தியில் சிரித்த முகமாய் வந்த க்ரிஷ்ஷின் நிழற்படம் வந்து மறைந்தது...

தன்னை உலுக்கியதில் நிலை பெற்றவள் கண்ணீர் சட்டென ஊற்றெடுக்க முகிலை ஏறிட்டாள்... அவள் கண்ணீரில் பதறியவன் அதை துடைத்து விட்டு...

முகில் : ஹே அனுமா... என்ன டா ஆச்சு... என பதட்டமாய் கேட்க...

அனு : இல்லண்ணா அன்னைக்கு யுவாவும்... இதையே தான் சொன்னான்... கேஸ் டென்ஷன் மான்னு... என அன்றைய நினைவில் இவள் கூறிட... நாழ்வரின் முகமும் அவனின் நினைவில் நேரம் தாமதிக்காமல் மாறியது...

அவனது கோவம் வீட்டையே இரணகளமாய் வைத்திருந்தாலும் அவர்கள் மீதான அவனது அன்பு என்றும் வீட்டை பாதுகாப்பாகவும் கலகலப்பாகவும் வைத்திருக்கும்...

தன்னால் அவர்களும் அந்நினைவில் மூழ்குகின்றனர் என்பதை உணர்ந்து கொண்ட அனு உடனே பேச்சை மாற்றினாள்...

அனு : அப்ரம் வீட்ல ஒவீ பவிக்கு தோசை சுட்டு குடுக்குர வேலைலாம் எப்டி போகுது ப்ரதர்... என நக்கலாய் கேட்க...

ப்ரியா : கன்ன வச்சு அக்யுஸ்ட்ட தான் கரெக்ட்டா சுட மாற்ற... தோசையாவது சுட்டியா அண்ணா...

திவ்யா : ஹே வயசாய்டுச்சுள்ள டி... இல்லனா அண்ணா புல்லட் வேவவத்துக்கு சுற்ற மாட்டான்... என இவளும் அவள் பங்குகக்கு காலை வார...

முகில் : பாவிங்களா... என் மனசுக்கு தான் டி நாப்பெத்தேழு வயசாய்டுச்சு... ஆனா இன்னும் எனக்கு இறுவத்தி ஏழு தான்...

ப்ரியா : ஹ்ம் என்ன தான் இருந்தாலும் இது ஒரு யூனிவர்ஸல் ட்ரூத்... சோ ஐ அக்ரி வித்யு... என அவள் கூறிய விதத்தில் மற்ற நாழ்வரும் சத்தமாய் சிரித்தனர்...

ரித்விக் : சரி சரி போதும் கலாய்ச்சது... கமான் போகலாம்... அங்க எல்லாரும் வெயிட் பன்னீட்டு இருப்பாங்க....

ப்ரியா : வா வா போலாம்... என ஓடி போய் வண்டியில் ஏறி கொண்டாள்... ஒன்றரை மணி நேரம் பின் ஐவரும் அரண்மனை முன் சென்று நின்றனர்... மனம் முழுவதும் கடந்த கால நினைவுகள் வந்து அலை மோத... கண்கள் ஆனந்த கண்ணீரினில் குளமாக.. வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்தனர்...

மூவருக்கும் அது சாதாரண வீடல்லவே... அவர்களின் காதல்களை கண் கூடாக கண்டு சங்கமித்த இடம்.... அவர்களின் நட்பும் காதலும் கை கூடி பல புதிய உறவுகளை கொண்டு வந்த இடம்... அவரவர் காதலுடன் சேர்ந்த இடம்.. அவர்கள் பெற்ற முத்துக்கள் நகமும் சதையுமாய் ஊரி விளையாடிய இடம்... அதை கண் கூடாக இரசித்த இடம்... இறுதியாய் கண்ணால் கூட பார்க்காமல் விட்டு சென்ற இடமென அவர்களின் அனைத்துமாய் திகழ்ந்த இடமது...

எதையும் உணராது வந்த மூவரையும் அத்தீஸ் என கத்தி கொண்டே ஓடி வந்து அணைத்து கொண்டாள் கயல் ...

அவளது கத்தலில் தன் நிலை பெற்ற மூவரும் இறுதியாய் நேரில் பார்த்த போது தங்கள் முட்டி அளவில் கூட இல்லாதவள் இப்போது தங்களின் தோள் வரையே வளந்து பேரழகாய் காட்சியளிப்பதை கண்டு கண்கள் மின்ன அணைத்து கொண்டனர்...

மூவரும் : கயல் குட்டி... என ஒரு சேர அழைக்க...

கயல் : எப்டி இருக்கீங்க அத்தீஸ்... நா உங்க மூணு பேரையும் ரொம்ப மிஸ் பன்னேன் தெரியுமா...

அனு : தெரியும் செல்லம்... நீ எப்டி இருக்க...

கயல் : நல்லா இருக்கேன் அத்தி... என கூறி கொண்டிருக்கும் போது மச்சீஸ் என்ற கத்தலை கேட்டு மூவரும் சிரித்த முகமாய் நிமிர.... ஓடி வந்து அவளை அணைத்து கொண்டனர் வீனா ரக்ஷா மற்றும் தான்யா ...

தோழிகளின் கண்களில் நிற்காமல் கண்ணீர் வழிந்தோட... அவர்களோடு சேர்த்தே மதுவும் நிருவும் ஆறுவரையும் அணைத்து கொள்ள.... கயல் தான் அவர்களின் அணைப்பில் திண்டாடிவிட்டாள்....

ப்ரியா : ஹையோ எனக்கு சந்தோஷம் தாங்க முடியல டி...

கயல் : அச்சச்சோ என்ன உட்டுட்டு நீங்க பாசமழைய பொழியுங்கையா... என கத்தவும் அவர்கள் சிரித்து கொண்டே விலகி நின்றனர்....

" அனு திவி ப்ரியா " என அழைத்து கொண்டே ஆரத்தி தட்டுடன் அவர்களை நோக்கி முகம் கொள்ளா புன்னகையுடன் கண்களில் கண்ணீர் துளிர் விட நடந்து வந்தாள் வர்ஷி....

மூவரும் : வர்ஷிமா... என அணைக்க சென்ற மூவரும் அவளின் கண்டிப்பான பார்வையை கண்டு சிரித்த முகமாய் நிற்க... அவர்களுக்கு ஆளம் சுற்றி முடித்தவள் மதுவிடம் தட்டை கொடுத்தவள் மூவரையுடன் உடனே அணைத்து கொண்டாள்...

அனு : எப்டி டி இருக்க...

வர்ஷி : நல்லா இருக்கேன் டி... நீங்க எப்டி இருக்கீங்க...

ப்ரியா : சூப்பரா இருக்கோம் டி... அண்ணாஸ் அத்தான்ஸ்லாம் எங்க... என கேட்டு முடிப்பதற்குள் தங்கச்சிமாஸ் என்ற கூவலுடன் உள்ளே டாக்டர் கோட்டை கூட கலட்டாமல் ஓடோடி வந்தனர் அஷ்வன்த் மற்றும் வீர்.... அவர்கள் பின்னே அனுமா திவிமா ப்ரியாமா என கத்தி கொண்டே ஓடி வந்தனர்ரவியும் ரனீஷும்...

மூவரும் : அண்ணாஸ் அத்தான்ஸ் என நாழ்வரையும் அணைத்து கொண்டு கண்ணீர் விட்டனர்...

அஷ்வன்த் : என்ன பட்டுங்களா இப்டி வளந்துட்டீங்க...

ரனீஷ் : அவளுங்க எப்போடா குட்டியா இருந்தாளுங்க இப்போ வளர்ரதுக்கு...

ரக்ஷா : வந்ததும் வராததுமா கிண்டல் பன்னாதீங்க லூசுங்களா... என செல்லமாய் முறைத்தாள்...

ரவி : சந்தோஷத்துல எனக்கு பேச்சே வரல குட்டிமா...

அனு : நீ மனசுல நெனச்சிக்கோ அத்தான்... நா வெளிய சொல்லிடுறேன்... என கண்ணடித்து கூறினாள்...

வீர் : ஹாஹா இன்னும் வாலு தனம் போல அனுமா உன்ட்ட இருந்து... என வலிக்காமல் கொட்டு வைக்க...

அனு : அவ்ச் போ அண்ணா... ஆமா எங்க பவி... என கேட்கும் போதே சமையல் கட்டில் ஏதோ உடைந்து விழும் சத்தம் கேட்க... அனைவரும் சமையற்கட்டை பார்த்து " இன்னைக்கு எந்த பாத்திரம் " என கோரசாய் கேட்க... " நான் ஸ்டிக் பன் " என கத்தினாள் பவி...

நம் பவி இப்படி தான்... ஆராய்ச்சி கூடத்தில் ஒவீ அர்ஜுனுடன் செய்யும் லூட்டிகள் பத்தாதென சமையலறையில் பறக்கும் தட்டு செய்கிறேன் தானாக கிண்டும் கரண்டி செய்கிறேனென இருவது வருடமாய் எதையாவது குடைந்து கொண்டே உடைத்து வைப்பாள்...

ப்ரியா : அப்ரம் பன்னலாம் டி உன் ஆராய்ச்சிய.... வெளிய வந்து தொல...

பவி : தோ வந்துட்டேன் வந்துட்டேன் வந்துட்டேன்... என உடையில் தானாக ஒட்டி கொண்ட கரியை துடைத்து கொண்டு ஓடி வந்தாள்...

மூவரும் : பவி குட்டி... என மூவரும் கத்தவும்...

பவி : மை டியர் தங்கங்களே... என அணைத்து கொண்டாள்...

திவ்யா : இன்னும் இதெல்லாம் விடலையா டி நீ...

பவி : அதெலால்ம் விட முடியாது போ டி...

திவ்யா : ஹாஹா சரி ஏ நிரு எங்க டி உன் புருஷனையும் எங்க உடன் பிறப்பையும் காணும்... என சொல்லி முடிக்க கூட இல்லை... தடதடவென ஓடி வரும் சத்தம் கேட்க...

அர்ஜுனும் சரணும் அவசர அவசரமாய் உள்ளே ஓடி வந்தனர்...

வர்ஷி : தோ வந்துட்டாய்ங்க பாரு... என சிரிப்புடன் கூற...

இருவரும் : தங்கங்களே என கையை நீட்டி கொண்டு வந்து அணைத்து கொண்டனர்...

அனு : உடன் பிறப்பும் உடன் பிறவா பிறப்பும் எங்க போய்ட்டு வரீங்க என புருவமுர்த்தி கேட்க...

அர்ஜுன் : ஈஈஈஈஈஈ என இளித்து வைத்தான்.. சும்மா டா தங்கம்... உங்களுக்கு ட்ரவல் எப்டி இருந்துச்சு..

ப்ரியா : நல்லாவே போச்சு அண்ணா...

சரண் : ஏன் தங்கச்சிமாஸ் வாசல்லையே நிக்கிறீங்க... உள்ள போங்க ...

கயல் : எப்பா பாசமழையால பொழியிரீங்க எல்லாரும்... அத்தி நீங்க வேணா பாருங்க கூடிய சீக்கிரம் இங்க ஒரு வெள்ளம் வர போகுது... அத கூட தெரியாம உங்க அண்ணனுங்களும் அத்தானுங்களும் பாச மழைய பொழிஞ்சிட்டே இருக்க போறாங்க..

ரனீஷ் : நாங்களாம் சுனாமிலையே எதிர் நீச்சல் அடிக்கிரவங்க எங்க கிட்டையேவா... என இவனும் கெத்தாய் கூற...

திவ்யா : வாயி வாயி... காது வர வாயி... என கயலின் காதை திருக...

கயல் : ஸ் ஆ... என வலிப்பதை போல் கத்த....

அர்ஜுன் : எல்லாம் அந்த குட்டச்சியால வந்தது டா மா... அப்பவே அவ கூட சேந்துட்டால்ல... அவளால தான் இப்டி வாயாடுரா...

தீரா : இப்போ எதுக்கு டா என்ன இழுக்குர...

ப்ரியா : நாங்க இத்தன வர்ஷம் களிச்சு வந்துருக்கோம் எங்கள வெல்கம் பன்னாம நீ என்ன டி பன்ற...

தீரா : ஈஈஈஈஈ

கயல் : ஆமா யாரு நீங்க... உங்க அளவு நா வாயாடுறேன்னு சொல்றாங்க... என கண்களை சுருக்கி குழப்பமாய் கேட்க...

தீரா : ஏது யாரா... அடிப்பாவி கயல் நா தீரா டி...

கயல் : தீரா... ஓஓஓ என் அத்தீஸ் அம்மீஸ் மாமாஸ் சிச்சாஸ் சித்தாஸ் எல்லாரையும் மேச்சிக்கிட்டு இருக்குர தீரா தான...

தீரா : பாவி... நா உனக்கு ஒரு காலத்துல அக்காவா இருந்தேன்...

கயல் : இசிட் எனக்கு நியாபகம் இல்லையே இருக்கட்டும் அக்கா...

தீரா : அடிடேய் அதான் ஒரு காலம்னு சொல்லிட்டேன்ல... இப்போ என்ன நீ அக்கான்னு கூப்ட்டா ஊரே என்ன முறைக்கும்...

கயல் : ஏன் அப்டி...

முகில் : ஏன்னா இருவது வருஷத்துக்கு முன்னாடி தான் அவ உனக்கு அக்கா... இப்போ இல்ல...

கயல் : என்னா மாம்ஸ் ஏதோ கடைல டீ இருக்கான்னு கேட்டா கொஞ்ச நேரம் முன்னாடி வர இருந்துச்சு இப்போ இல்லங்குர மாரி சொல்றீங்க...

வீர் : உண்மைய சொன்னா கேட்டுக்கனும்... திருப்ப எங்க கிட்ட கேள்வி கேக்க கூடாது... என வலிக்காமல் கொட்டு வைக்க... அதை தேய்த்து கொண்டே...

கயல் : இருவது வர்ஷமாவா நீ வளரல...

அர்ஜுன் : ஆமா குட்டச்சி வளரவே இல்ல... என சிரித்து கொண்டே கூற...

தீரா : போடா லூசு.. ஒரு காலத்துல வாயில்லா பூச்சியா இருந்தவல்லாம் இபப்போ என்ன கலாய்க்கிறாளே... தீராவுக்கு வந்த சத்ரிய சோதனை...

கயல் : சத்தியசோதனை கேள்வி பற்றுக்கேன்... காந்திஜீ எழுதுன புக்கு... இது என்ன சத்ரிய சோதனை...

தீரா : அன் நா எழுதப்போற புக்கு.. இவ வேற கொஷின் கேட்டு கொல்ரா டா அண்ணாஸ் ... அப்ரம் நானே எதையாவது ஒளரி வச்சிடுவேன்... என அழுவதை போல் கூற... சுதாரித்து கொண்ட நாயகன்களும் நாயகிகளும் அனு திவ்யா ப்ரியாவை ஓய்வெடுக்க அனுப்பி வைத்தனர்...

மதிய உணவை அமர்களமாய் சமைத்து கொண்டிருந்த மோகினி தன் பின் ஏதோ ஒரு சத்தத்தை கேட்டு எதர்ச்சையாய் திரும்பியவள் பம்மி பம்மி வந்த மிதுனை கண்டு கொண்டாள்...

மோகினி : டேய் மிதுன்... என்னாச்சு டா கண்ணா... ஏன் பம்மி பம்மி வர..

மிதுன் : அது அம்மு... உங்கிட்ட கொஞ்சம் பேசனும்...

மோகினி : பேசலாமே... என்ன விஷயம்...

மிதுன் : ம்ம்ம் நா உடனே பங்லூர் போகனும் அம்மு என எடுத்த எடுப்பிலே காரணத்தை போட்டுடைத்தான்... சமையலை அப்படியே விட்டு விட்டு இவன் புறம் குழப்பமாய் திரும்பினாள் மோகினி...

மோகினி : பங்லூரா... ஏன் டா...

மிதுன் : உனக்கு தான் தெரியும்ல... ஐம் அன் டேட்டா அனலைசர்... ஒரு கேஸ்க்கு தேவையான எல்லா டேட்டாக்களையும் நான் தான கலெக்ட் பன்னனும்... இப்போ எனக்கு கிடைச்ச கேசோட ஒரிஜின் பங்லூர்....

மோகினி : ஹ்ம்ம் கேஸ் விஷயமா இருந்தா உன் கூடவே இன்னோறுத்தனும் கெளம்புவானே... என புருவம் சுருக்கி கேட்டு முடிப்பதற்குள் இளித்தவாறு மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தான் ராகவ்...

ராகவ் : நானும் தான் அத்து...

மோகினி : நீங்க இரெண்டு பேர் மட்டும் போய் எப்டி டா இருப்பீங்க...

ராகவ் : நீ ஓக்கே சொல்லிட்டா அவனுங்க கூட எங்க கூட வந்துருவாங்க அத்து..

மோகினி : ம்ம் என்ன ப்லன் போட்டு ஒன்னா எங்கையாவது எங்களுக்கு தெரியாம போக போறீங்களா.. என்றதும் மோகினி முன் நின்ற இருவருக்கும்... இவர்கள் பேசுவதையெல்லாம் மாடிபடியின் தொடக்கதில் செவுற்றில் ஒட்டி நின்று கொண்டு கேட்டு கொண்டிருந்த மித்ரன் அஷ்வித் வருண் அருண் ஆதவ் மற்றும் ராமிற்கும் மனம் ஒரு நொடி ஜெர்க்காக... அதை கச்சிதமாய் முகத்தில் நொடியேனும் காட்டி கொள்ளாத ராகவும் மிதுனும் தங்கள் உரையை தொடர்ந்தனர்...

மிதுன் : ச்ச இல்ல அம்மு... தோ பாரு கேஸ் ஃபைல் கூட இருக்கு... என ஒரு ஃபைலை நீட்ட... அதை திறந்து பார்க்காமலே அருகில் வைத்த மோகினி...

மோகினி : சரி எவ்ளோ நாள் அங்கையே இருக்க போறீங்க...

இருவரும் : மினிமம் இரெண்டு மாசம்...

மோகினி : இரெண்டு மாசமா... ஏன் டா...

ராகவ் : இது கொஞ்சம் காம்ப்ளிக்கேட்டட் ஆன கேஸ் அத்து... டைமெடுத்து தான் மிதுனால விசாரிக்க முடியும்.. அதான்...

மோகினி : ஹ்ம்ம்ம் சரி எப்டியும் கொஞ்ச நேரத்துல மாமா வந்துடுவாரு... அவர்ட்டயும் கேட்டுக்கோங்க சரியா...

ராகவ் : ஓக்கே அத்து... நாங்க போய் பக் பன்றோம்... என மோகினி சொல்ல சொல்ல கேட்காமல் மாடிக்கு ஓடி விட்டனர்...

தோழன்களுடன் ஹைஃபை போட்டு கொண்ட இருவரும்... பின் நகர்ந்து கொள்ள... அடுத்த வேலையாக மித்ரன் வருண் அருண் ஆதவ் கீழே இறங்கி மோகினி முன் பப்பி ஃபேசுடன் நின்றனர்...

மோகினி : உங்களுக்கு என்ன டா... என நாழ்வரையும் ஏற இறங்க பார்க்க...

அருண் : மாசி ஜீ நாங்கள் திருநெல்வேலி போக வேண்டும் ... எங்களை ஆசிர்வாதம் செய்து அனுப்பி வை... என சினிமா பாணியில் கை கூப்பி பணிந்தமர...

மோகினி : திருநெல்வேலிக்கா... அங்க எதுக்கு டா...

ஆதவ் : பிகாஸ்ஸாஃப் ரிசர்ச் மாத்தாஜீ...

மோகினி : அங்க போய் என்னாடா ஆராய்ச்சி பன்ன போறீங்க... என தலையில் கை வைக்க...

வருண் : அந்த கடல்ல தா நாங்க கண்டுப்புடிக்க போற மருந்துக்கான ஒரு பொருள் இருக்கு அத்துமா...

மோகினி : ஹ்ம் சரி போய்ட்டு எப்போ வருவீங்க...

மித்ரன் : ஒரு இரெண்டு மூணு மாசத்துல...

மோகினி : சரி அப்பா வந்ததும் அவர்ட்ட கேட்டுக்கோங்க போங்க...

நாழ்வரும் : தன்க்ஸ் அத்து / அம்மு என கட்டி அணைத்து விட்டு மாடிக்கு ஓடி விட்டனர்...

அடுத்த பத்து நிமிடத்தில் அஷ்வித்தும் ராமும் மோகினி முன் நின்றிருந்தனர்....

மோகினி : உங்களுக்கு என்ன டா என கை கட்டி கேட்க...

ராமு : எனக்கு ஒன்னும் இல்ல அத்து... இவன் அப்பீஷியல் மீட்டிங்க்காக டெல்ஹி போறான்... சோ வீட்ல வெட்டியா இருக்குரதால நானும் அவன் கூட போறேன்... என சமத்தாய் சிரித்து கொண்டே கூற..

மோகினி : ஹ்ம்ம்ம் நீங்க எத்தன நாள் இருந்துட்டு வருவீங்க...

அஷ்வித் : அங்க உள்ள ப்ரன்ச் ப்ராப்லம்ஸ முடிச்சிட்டு ஒரு மாசத்துலையே வந்துருவோம் அம்மு... என ஆயிரம் மடங்கு உறுதியாய் கூற...

மோகினி : ம்ம்ம் சரி டா உங்க அப்பாட்டையே கேட்டுக்கோங்க... என சலிப்பாய் கூற...

இருவரும் : ஓக்கே அம்மு அத்து என கோரஸ் பாடிவிட்டு மாடிக்கு தாவினர்...

இவன்கள் தாவி ஓடுவதை பார்த்தவாறு வீட்டிற்குள் வந்த துருவும் கார்த்திக்கும் சமையலறைக்குள் நுழைய... அவன்களை பார்த்ததும்

மோகினி : நீங்க எங்க போக போறீங்க... என புருவமுயர்த்தி கேட்க...

இருவரும் : நாங்க எங்கையும் போகலையே என தோழன்கள் இருவரும் ஒரே போல் கூற...

மோகினி : அப்ரம் ஏன் டா இங்க வந்தீங்க...

துரு : இது என்னம்மா குத்தமா இருக்கு... அஷ்வித்தும் ராமும் குரங்கு மாறி தாவி போனானுங்க... அதான் என்னான்னு கேக்க வந்தோம்...

மோகினி : அப்டியா ... அவனுங்க எட்டு பேரும் நாளைக்கு வேலைனால ஒரு ஒரு ஊருக்கும் போறானுங்க... அதான் போகட்டுமான்னு வந்து கேட்டுட்டு போனாங்க...

கார்த்திக் : அப்போ நானு... பட் அத விட ... எப்டி அத்தமா போக விட்டீங்க...

துரு : நீ எங்க கூட வருவ டா...

மோகினி : உன் கேள்வி இரெண்டுத்துக்கும் ஒரே பதில் தான் கார்த்தி...

கார்த்திக் : என்ன பதில் டா...

துரு : மாமாஸ் நினைவு நாள் வர்ரதுனால நாம வேதபுரம் போக போறோம்...

மோகினி : அந்த நேரத்துல அவனுங்க இங்க தனியா தான இருப்னுங்க... சோ போய்டு வரட்டும்...

கார்த்திக் : ம்ம்ம் சரி அத்தமா...

பெருங்கடலின் அலையோசை செவிகளை தீண்டிட.. மென்மையான மணலில் காலின் தடம் பதிய... தென்றல் காற்று தேகத்தை ஆசையாய் வந்து அணைத்து கொள்ள... நிலவை வெறித்தவாறு ஏதோ ஒரு யோசனையில் நின்று கொண்டிருந்தான் ருத்ராக்ஷ்...

கண்கள் இரண்டும் உறக்கமில்லாது பொழிவிழந்திருக்க... மனமோ எதையோ நாடி அதி வேகமாய் துடித்து கொண்டு ஏங்கி கொண்டிருந்தது... மூளையோ ஒரு ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்தது...

தலைவலிக்க நினைவலைகளில் பின்னி பிணைந்திருந்தவனை கலைத்தது " டேய் ருத்ரா " என்ற அழைப்பு....

சட்டென திரும்பியவன் கண்டதோ கடல் மணலில் கீழே அமர்ந்து விளையாடி கொண்டிருந்த ஒரு குட்டி பையன் அலைகளில் கால் பதிக்க ஆசை பட்டு கடலை நோக்கி சென்ற அவன் உயரத்திற்கு இருந்த இன்னோறு குட்டி பையனை அழைத்ததைத்தான்...

அவனுக்கு அது கேட்டடாது போக.. இன்னோறு குட்டி பையனும் அவனோடு கத்தி அழைக்க... அதற்கும் அவன் திரும்பாமல் போக... திடீரென ஐந்திற்கும் மேற்பட்ட குட்டி பையன்கள் ஓடி வந்து " டேய் ருத்ரா " என கத்தினர்...

அந்த சத்தத்தில் திரும்பிய அந்த குட்டி பையனும் நம் ருத்ராக்ஷை போல் தன்னை மீறி சிரித்தான்... அதை வாஞ்சையுடன் பார்ந்திருந்த ருந்ராக்ஷ் கண்கள் மூடி கண்களை திறக்கும் போது அக்குழந்தைள் அங்கிருந்து மாயமாய் மறைந்திருந்ததார்....

மாயம் தொடரும்...

எப்டியோ ஒரே நாள்ள ரொம்ப லேட்டா டைப் பன்ன ஸ்டார் பன்னதால என்னால முடிஞ்சது... அடுத்த யூடிய அடுத்த வாரம் குடுக்குறேன்... புது கதைகள் போட நீங்க குடுத்த ஆதரவுக்கு ரொம்ப நன்றி இதயங்களே... கதைக்கும் ஆதே ஆதரவ கொடுங்க... இன்னைக்கே ஏழாவது கதைய பதிப்பிச்சிருவேன்... தூங்குரதுக்கு முன்னாடி வாசிச்சிட்டு எப்டி இருக்குன்னு சொல்லிட்டு போங்க... டாட்டா

DhiraDhi

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro