Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

பகுதி -15

   வருணை பரிசோதித்த மருத்துவர்கள் அவனுக்கு ஹெவி டோஸ் மயக்க மருந்து கொடுத்து இருக்க வேண்டும் என கூறினார்.
ரன்னர்
      வருண் இன்னும் சில மணி நேரங்களில் கண் விழிப்பான் என் கூறினார்.

          அந்த சில மணி நேரங்களில் வருண் மீது தான் வைத்திருந்த அன்பை உணர்ந்தாள் வனிதா..
(தோழியாக சகோ'ஸ்) வருண் இன்றி தான் வாழ முடியாது என உணர்ந்தால்.
ஆனால் ஏன் என்ற கேள்விக்கு அவளிடம் பதிலில்லை...

வருண் கண் விழித்தான்.

"வனி வனிதா வனிதா எங்க வனிக்கு ஒன்னும் இல்லையே" என பதறியபடியே வருண் எழ அங்கு இருந்த விக்ரமிற்கு ஒன்று தெளிவாக புரிந்தது வருண் குற்றவாளி இல்லை என்பது.

" எனக்கு ஒன்னும் இல்லைடா உனக்கு ஒன்னும் இல்லையே .. தடியா உனக்கு தான் கராத்தே தெரியுமே உன்ன தற்காத்துக் கொள்ள தானே தற்காப்பு கலை காத்துக்கிட்ட இல்ல எனக்கு தெரியும்னு சீன் போடவா? எருமை எருமை உன்ன நம்பி நான் வேற கல்யாணம் பண்ணிக்கிட்டேன் உன்னையே காப்பாற்ற தெரியலை
என்ன எப்படி டா காப்பத்துவ?"  என தன் கணவனை திட்டி தீர்த்தாள் வனிதா அவள் என்ன பேசினால் என் அவள் உணரவில்லை. ஆனால் நம் வருணோ முதல் முறையாக அவள் தன்னிடம் கணவன் என்னும் உரிமை எடுத்துக் கொண்டால் என எண்ணி மகிழ்ந்தான்..

அனைவரும் வீடு வந்தனர். இனியும் இங்கு இருப்பது ஆபத்து என் எண்ணிய விக்ரம் பத்து நிமிடத்தில் இங்கு இருந்து கிளம்ப திட்டமிட்டான்.

தன் தந்தையிடம் வர்ஷாவை பத்திரமாக பார்த்துக் கொள்ள சொல்லி விட்டு அவளுக்கு சில பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தான்.

பின்னர்  வனிதா வருணிடம் அவர்களின் மொபைலை வாங்கி அணைத்து விட்டு புதிய மொபைல் இரண்டும் புதிய சிம் கார்டு இரண்டும் கொடுத்தான் . நான் சொல்லும் வரை நீங்கள் வேறு யாரையும் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் விக்ரமின் புதிய எண்ணையும் தந்தான்.

அவர்கள்  முவரின் பெயரிலும் மும்பைக்கு ஃப்ளைட் டிக்கெட் புக் செய்தான். ஆனால் அந்த டிக்கெட்டில் பயணிக்கபோவது அவர்கள் அல்ல.( கயவர்கள் தங்களை பின் தொடர கூடும் என்று இந்த ஏற்பாடு). இரு ஆண் காவலரும் ஒரு பெண் காவலரும் இம்மூவரின் மொபைலுடன் பயணம் செய்தனர்.

அதே நேரம் அவர்கள் தனி விமானம் மூலம் விசாகப்பட்டினம் வந்தனர். (வனிதாவின் அப்பாவிற்கு சொந்தமான விமானம் ஐந்து நபர்கள் செல்லும் வசதி உடையது) ...

பிஸியாக இருக்கும் சென்னையில் வாழ்ந்தவர்களுக்கு அமைதியான வைசாக் ஒரு சந்தோஷமான சூழ்நிலை.

அங்கு உள்ள இயற்கையின் அழகில் மை மயங்கி இருந்தால் வனிதா.

அங்கங்கே உள்ள சிலைகள் வருணை கவர்ந்தது.. சிலைகள் அல்ல அவை ஒவ்வொன்றும் நிஜமாகவே மனிதர்கள் போல் தத்துருபமாக அமைந்த சிற்பங்கள்..

அவர்கள் பீச் அருகில் உள்ள ஒரு ரிசார்ட்க்கு வந்து சேர்ந்தனர் ..
அங்கு தான் அவர்களின் தோழி சரண்யா மேனேஜராக பணிபுரிந்தாள்.
இவர்களுக்கு. என் சிறப்பு அறையை ஒதிக்கி இருந்தால். அந்த. ரிசார்டிற்கே வனிதாவின் தந்தை நாளை வர இருப்பதால் அவருக்கு சேர்ந்து இன்றே 4 அறைகள் புக் செய்தனர்.

அந்த 4 ம் அறை வனிதா வருண் பாதுகாப்புக்காக வந்த இரண்டு காவலர்களுக்காக.

அந்த ஒவ்வொரு அறையிலும் 2 படுக்கை அறை கொண்ட ஒரு அதிநவீன ஃப்லட போல இருந்தது.
ஏசி அறை தான் என்றாலும் சொன்னதை திறந்தால் குளிர் காற்று இதமாய் விசியது.. குளிர் சாதன பெட்டியில் பால் பழங்கள் வேறு சில பலகாரங்களும் இருந்தது...
இரு அறைகள் இருந்ததால் வனிதா வருண் இருவரும் ஆளுக்கொரு அறையில் புகுந்து கொண்டனர்.
பயண தலைப்பில் வருண் உறங்கி விட்டான்.

வனிதாவும் தான் ( எப்போவும் தூங்குறிங்களே உங்களுக்கு லவ் வருமா வராதா.. சரி நாம் போய் விக்ரம பாத்துட்டு வருவோம்)

விக்ரம் பாதுகாப்புக்கு வந்த காவலர்களிடம் பேசி கொண்டு இருந்தான். அந்த ரிசார்டில் பாதுகாப்பு எப்போதும் சிறப்பாகவே இருக்கும் எனும் போது கூட அவனுக்கு ஏதோ சரியில்லை என்றே பட்டது. அவன் எதையும் ரசிக்கவில்லை அவனின் ராணியின் (வர்ஷா) நினைவில் இருந்தான். வர்ஷா லுக்கு ஆபத்தோ???????...

( அடுத்த பகுதி விரைவில்.. என் குழந்தையின் உடல்நிலை காரணமாக கடந்த 10 நாட்களாக என்னால் எழுத முடியவில்லை.. மன்னிக்கவும் அவன் தேறிய பிறகு அடுத்த பகுதி.... ஜோஸ்வாவின் தாய் )

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro