Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

தேடல் - 37

தன் கையிலிருக்கும் ஒளிரும் முட்டையை கவனிக்காது அதை ஒரு ஓரமாய் வைத்து விட்டு தன் நண்பனை தேடி மாடி ஏறினான் ஆர்வின்... அவனூடே யதீஷும் இம்முட்டையை மறந்து விட்டு மாடிக்கு ஓடினான்...

அங்கு ஃத்வருண் ஒரு அறை கதவை உடைத்தானா திறந்தானா என கேள்வி எழுப்பும் வகையில் திறந்திருந்த அறைக்குள் ஒரு மரட்ராயரை கீழே போட்டு விட்டு ஒரு க்ளஸ் கவரை வைத்து கொண்டு தீவிரமாய் அதை கண்களாலே ஆராய்ந்து கொண்டிருந்தான்...

தன் சகோதரன் ஒரு வருடம் களித்து கோமாவிலிருந்து எழுந்த மகிழ்ச்சியில் ஆட்டமாய் ஆடிக் கொண்டிருந்த சைத்தான்யா அவன் மயக்கமுறும் முன் செய்த அட்டகாசத்தையெல்லாம் பெரிதாகவே எடுத்துக் கொள்ளவில்லை... முபல்லனிற்கு தானே தெரியும் உண்மையில் என்ன நடக்க உள்ளதென்று...

அதி நவீன நிலவு

மூன்று சுவற்றிற்குள்ளே மற்றைய புறத்தை இரும்பால் அடைத்த கம்பிகளின் பின் பிணை கைதியாய் சிறை வைக்கப்பட்டிருந்தாள் ஷரூரா... அவளின் கண்கள் அவளது சிந்தனைக்கேற்ப ஓரிடத்தில் நிற்காமல் அங்குமிங்கும் அலையாடிட அவள் முன் கம்பீரமாய் நின்றிருந்த ராஜா குரோபடரானுக்கோ அவள் தப்பிக்க வழி தேடுவதை போல் தெரிந்தது போலும்...

ஷரூராவின் நீல கூந்தலும் சற்றே வித்யாசமாய் இருக்கும் அவளும் குரோபடரானை அரித்து கொண்டே இருக்க அதை உள்ளுக்குள் வைத்திருக்க இயலாமல்

குரோபடரான் : என்னமா...தப்பிக்க வழி தேடீட்டு இருக்கியோ என வினவவும் அவனை நிமிர்ந்து ஒரு புரியாத பார்வை பார்த்தாள் ஷரூரா...

குரோபடரான் : என்ன அப்பாவி மாரி இருந்தா தப்பிச்சிடலாம்னு பாக்குறியா... இரெண்டு வாரத்துக்கு (நிலவின் கணக்குப்படி 12 நாட்கள் பூமியில் ஒரு வருடம்) முன்னாடி உன்னால தான் இந்த நிலவோட ப்ரின்ஸ் ஃபாஹிர் நிரன நாங்க தொலச்சோம்

அவளின் புருவங்கள் இரண்டும் ஒன்றோடொன்று முடிச்சிட்டிருக்க கண்கள் அவர் கூறுவதை கவனிப்பதை போல் கூர்ந்திருந்தது....

குரோபடரான் : நீ மெடர்மான சேந்தவ தானே...அங்கேந்தூ தான இப்டி பூமிக்கு வந்துட்டு வந்துட்டு போற... காலைலயே உன்ன பூமிக்கு வர எதிர்பாத்தேன்... ஆனா நீ தாமதமாக்கீட்ட... எப்டி கண்டுப்புடிச்சேன் பாத்தியா... என சிறு பிள்ளையை மிரட்டுவதை போல் அவளை பயமுறுத்த இன்னும் ஷரூரா அவளின் புரியாத பார்வையிலிருந்து மாறியிருக்கவில்லை....

குரோபடரான் : ஹே உண்மைய சொல்லப் போறியா இல்லையா இப்போ... எங்க ப்ரின்ஸ் ஃபாஹிர் நிரன் எங்க...

ஷரூரா : ......

குரோபடரான் : சொல்லப் போறியா இல்ல உனக்கு மரண தண்டனை விதிக்கட்டுமா...

ஷரூரா : .........

குரோபடரான் : ஏய் நீ யாரு முன்னாடி நிக்கிரன்னு தெரியுமா... பதில் சொல்லப் போறியா இல்லையா என நரம்பு புடைக்க ஆத்திரத்தில் கத்தி தீர்த்து அனைவரது காதையும் கிளிக்க எந்த விதமான பதிலும் கூற வாயே திறக்காமல் வாயையும் கையையும் காட்டி இடவலதாய் தலையசைத்தாள் ஷரூரா...

அதை கண்டதும் இன்னும் அவரது ஆத்திரம் தலைக்கேறியது...

குரோபடரான் : உனக்கு வாயும் பேச வராது... காதும் கேட்காது அப்டி தானே... என கத்தி கேட்கவும்

ஷரூரா ம.வ : காது கேட்காது வாய் பேசத் தெரியாதுன்னு சொன்னா... அதையே திரும்ப கேக்குறாரரு பாரு... யாரு இவரெல்லாம் ராஜாவ போட்டது என உள்ளுக்குள்ளே மருகியபடி வெளியே இன்னைமும் புரியவில்லை என்னும் முகமூடியை கனக்கச்சிதமாய் அணிந்து ராஜா குரோபடரானை காண்டேத்தினாள் ஷரூரா

தமிழகம்

அனைவரும் ஃத்வருணை கண்டு பிடித்ததும் ஆவலாய் அவனை நோக்க உடனே அந்த கவரிலிருந்து ம்யோரா காகிதங்களை எடுத்து அஜிம்சனாவின் கைகளில் அவன் திணிக்க அதில் மூன்று காகிதங்கள் சரியாய் இருப்பதை கண்டு இப்போதே அனைத்து உண்மையும் தெரிவது நன்று தானா என்ற சந்தேகத்திலே அதை பிரட்டிப் பார்த்தாள் அவள்...

அனாமிக்கா : சீக்கிரம் அத படி டி... என்ன ஏதுன்னு பாரு ...

தலையை மட்டும் ஆட்டி விட்டு அந்த அறையை விட்டு வெளியேறி ஒரு வெளிச்சம் உள்ள இடமாய் பார்த்து அவள் அந்த பத்திரத்தை பிரிக்க அதிலிருந்து முதல் ஆளாக ஒரு கையடக்க நாட்குறிப்பு கீழே வந்து விழுந்தது...

குழப்பமாய் அதை குனிந்தெடுத்த யதீஷ் அதை தூசி தட்டி திருப்பித் திருப்பி பார்த்து விட்டு மற்றவர்களை ஏறிட்டான்...

ரியா : பிரிச்சு பாருங்க யதீஷ்.. என ஊக்குவிக்க அஜிம்சனாவின் மீதிருந்த அனைவரின் பார்வையும் இப்போது யதீஷிடம் சென்றது...

திக்

திக்

திக்

நிரன் தன் இதயத் துடிப்பு மற்ற இருவருக்கு கேட்டு விடுமோ என்று இதயத்தை பிடித்த படி நின்ற போது டிவின் அவன் கன்னத்தில் பளாரென்ற ஒரு அறை விட தூக்கம் கலைந்து முளிப்பதை போல் அதிர்ச்சியோடு அவர்களை நோக்கினான்...

டிவின் : என்ன டா எந்த பிரவஞ்சத்துல இருந்துட்டு வர நீ...

நிரன் : ங

லியான் : ஏதோ ஒரு உண்மைய சொல்றேன்னு சொன்னியே... அந்த உண்மைய சொல்லு டா...

நிரன் : அது வந்து... நா அத சொல்லலாமான்னு...

லியான் : மரியாதையா சொல்லீடு அப்ரம் நடக்குரதே வேற...

நிரன் : நா சொல்லீட்டா...நடக்கப் போறதும் வேறையா தான டா இருக்கும்...

இருவரும் : என்னது...

நிரன் : இல்ல டா.. அது வந்து நம்ம கிரகங்களுக்கு ஒரு பெரிய ஆபத்து காத்துக்குற்றுக்கதா சொன்னாங்க டா...

டிவின் : அது தான் அஜியே சொல்லிட்டாளே... உனக்குத் தெரிஞ்சத சொல்லு...

நிரன் : எனக்கு வேற...

லியான் : உனக்கு லயான் பத்தி எப்டி டா தெரியும் என சட்டென ஒரு பாய்ன்ட்டை பிடிக்கவும் நிரன் விழிக்க டிவின் குழப்பமாய் அவனை பார்க்க லியான் கிடைத்த துப்புக்களை ஒன்றிணைக்கத் தொடங்கினான்...

டிவின் : யார் டா அந்த லயானு...

லியான் : லியான் லயான்னு எங்க பேரு அந்த டாக்குமென்ட்ல இருக்குதுன்னா... எங்களுக்கும் மெடர் அண் மார்ன் கூட சம்மந்தம் இருக்கு...அது உனக்கும் தெரிஞ்சிருக்கு... என்னது டா அது... என இவன் இத்தனை கேள்வி கேட்டதற்கு

நிரன் : இரு இரு... எனக்கு லயான் பத்தி தெரியிரது இருக்கட்டும்... உன் பேரு சாகித்யன்னும்... அவன் பேரு லயான்னும் நீ எப்டி கண்டுப்புடிச்ச... அவன் மறு கேள்வி கேட்க

டிவின் : டேய் யார் டா அந்த லயான் என இவன் நடுவில் தலையும் புரியாமல் வாலும் புரியாமல் கத்தினான்...

லியான் : அது வந்து... எனக்கு இப்போ வர தெளிவா தெரியாது... ஆனா... இதனால தான் கண்டுப்புடிச்சேன்... என அவனின் மடிக்கணினி அருகே இருந்த சிறிய ட்ராயரில் இருந்து ஒரு சிறிய நாட்குறிப்பை எடுத்தான்...

டிவின் : இதென்னது...

லியான் : என்னையும் லயானையும் பெத்தெடுத்த எங்க அப்பாவோட கடைசி டைரி என்கவும் நிரன் ஒரு பக்கம் அதிர்ச்சியானால் டிவின் மறு பக்கம் லயான் என லியானுக்கு சகோதரனிருப்பது மட்டுமல்லாது அவன் தந்தையை வேறு கூறுகிறானே என்ற ஒரு அதிர்ச்சி

நிரன் : அதுல என்ன இருந்துச்சு...

லியான் : கடைசியா அவங்க சாகுரதுக்கு முன்னாடி இரெண்டு வயசு குழந்தைகளா இருந்த எங்கள பூமிலையும் மெடர்மான்லையும் பிரிச்சு வச்சி எனக்கு சாகித்யன்னும் அவனுக்கு சத்யன்னும் இன்னோரு பேரும் வச்சாங்கன்னு இருந்துச்சு என வெறுமையான முகத்துடன் கூறினான்...

தமிழகம்

யதீஷ் அந்த நாட்குறிப்பை திறக்கையிலே ஃத்வருணிடமிருந்த கவரில் வேறு சில காகிதங்களும் இருப்பதை கண்டு அதை வெளியிலெடுத்த சத்யா அதை பிரட்ட அதிலிருந்த பாதி அழிந்து போயிருந்த தமிழ் வார்த்தைகள் அவனை தீவிரமாக்கியது...

இவன் அனைவருக்கும் அப்பால் நின்றிருந்ததால் அனைவரும் இவனை கவனிக்கத் தவற அந்த தமிழ் எழுத்துக்களிலும் ம்யோரா எழுத்துக்களிலும் குறிப்பிடப்பட்ட ஒரே பொருளுள்ள வாக்கியத்தை சத்யா மற்றும் அஜிம்சனா ஒரே நேரத்தில் வாசித்து வாயடைத்து நின்றனர்...

...போது வந்த அப்படைத்து லெனாவிடமும் சாகித்யனை என்னும் லியான் அன்பரசியிடமும் சத்யனை என்னும் லயான்

" லயான் என்னும் சத்யனை அன்பரசியிடமும் லியான் என்னும் சாகித்யனை லெனாவிடமும் அப்படைத்து வந்த போது... "

அதிலிருந்த அந்த பெயர்களே இருவரையும் ஆட்டி வைக்க லியான் மற்றும் சத்யனை வளர்த்த லெனா மற்றும் அன்பரசியின் பெயர்களும் அவர்களை சொல்லேனா உணர்வொன்றில் மூழ்கடித்தது...

அரானா எதற்சையாய் சத்யாவை கண்டு அவன் தோளை பற்ற கண்ணீர் கடலாகியிருந்த கண்களால் அவளை ஏறிட்டான் அவன்... அரானாவின் கண்கள் தீவிரத்திலே பதட்டமடைய அவனின் கன்னத்தை பிடித்து " என்னாச்சு சத்யா " என பதறி கேட்டு அனைவரையும் பட்டென இப்புறம் திரும்ப வைத்தாள்...

அனைவரும் சத்யாவை கண்டு அதிர்ச்சியுற அவன் " லியான் " என குரல் அடைக்க உச்சரிக்க அதே நேரம் யதீஷும் அந்த நாட்குறிப்பின் முதல் தாளிலே கண்டபடி கிருக்கப்பட்டிருந்த குறிப்பை கண்டு சத்யாவை நோக்கினான்....

அரானா : லியானுக்கு என்ன டா... சத்யா என்ன பாரு என அவள் மேலும் கேள்வி கேட்பவளை நம்ப முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் இப்படிப்பட்ட ஒரு உண்மை தெரிந்த போது உடன் அவனில்லையே என்ற வலியும் அரானாவை கட்டி கொண்டு

சத்யா : நா தப்புப் பண்ணிட்டேன் அரா... பெரிய தப்புப் பண்ணிட்டேன்.. எனக்கிருந்த ஒரே சொந்தத்தையும் நானே இழந்துட்டேன்... நான் அவன அன்னைக்கு போக சொல்லீருக்கவே கூடாது என இத்தனை வருடத்திற்கும் அழுகாத கணக்கை சேர்த்து இன்று அவன் அழ

அரானா : டேய் என்ன டா ஒளறுர...அப்டிலாம் எதுவும் இல்லடா... லியான என்ன சொல்ற நீ...

சத்யா : அவன் தான் டி சாகித்யன்... நா தொலச்ச என்னோட சாகித்யன் என அவன் கூறி முடிக்கவும்

யதீஷ் : லியானும் சத்யாவும் ப்ரதர்ஸ் என முதலும் இறுதியும் இன்றி இவன் இடையில் கூற அனைவரும் இப்போது அவனை அதிர்ச்சியோடு பார்க்க

ஷ்ரவன் : என்ன டா ஒளறர

யதீஷ் : இதுல இருக்கு டா... லியானும் சத்யாவும் கூட பிறந்த ட்வின்ஸ்... இரெண்டு வயசுல அவங்கள பிரிச்சிட்டாங்க... அப்போ தான் அவங்களுக்கு சாகித்யன் சத்யன்னு இன்னோறு பேரு வச்சிர்க்காங்க... சத்யன் சாகித்யன் லயான் லியான் இரெண்டுமே இவங்க தான்... அன்பரசி அம்மா தொலஞ்சிட்டதா நெனச்சிட்டு இருக்குர சாகித்யன் லியான் தான்... அவங்க செத்துட்டதா நெனச்ச சத்யன் உண்மையாவே நம்ம சத்யா தான்....

தேடல் தொடரும்...

ஹாய் இதயங்களே... தயவு கூர்ந்து என்ன மன்னிச்சிடுங்க... ரெகுலர் யூடி போடாததுக்கு... என்னாலையும் முடியல... டெய்லி படிக்கிரதுக்கே நேரம் சரியா இருக்கு... ஞாயிறு என்ன பன்றன்னு கேக்காதீங்க... அன்னைக்கு ஒரு நாள் தான் லீவு.. கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம் காலைல... ஆனா மீதி நேரமும் படிக்கவும் எழுதவும் வேலை சரியா இருக்கு... ஹ்ம்ம் கதைக்கும் நேரம் ஒதுக்கத் தான் முயற்சி பன்றேன்.. ஆனா அரை மணி நேரம் கூட முழுசா ஒதுக்க முடியல... முடிஞ்சளவு கொஞ்ச கொஞ்சமா எழுதி போடுறேன்... என்னோட எக்ஸம் முடியிர வரைக்குமே இப்டி தான்... ரெகுலர் அப்டேட்ஸ்... என் எக்ஸம் எப்போன்னு கேட்டீங்கன்னா... எனக்கே தெரியாது.. சோ கொஞ்சம் வெயிட் பன்னுங்களேன்... நா முடிஞ்சளவு யூடீஸோட வரேன்... சரியா...

அதோட லியான் சத்யா ட்வின்ஸா... அவங்க ட்வின்ஸ் தான்... அவங்க ப்ரதர்ஸ் தான்... என மதி மர்மம் தொடங்கி காதல் மன்னவை எனைத்தேடி வாராயோ வரை சந்தேகித்த .... என்னிடம் அழகாக குறுக்கு விசாரனை செய்த அனைவருக்குமே வாழ்த்துக்கள்...  குட் நைட்... டாட்டா... .

DhiraDhi❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro