Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

கற்றுக்கொள்ளும் காலங்கள்...

ஓடி விளையாடி, விழுந்து வதைபட்டு,
அழுதும் ஆனந்தமாய், எழுந்து நடைபோட்ட காலம் கடந்து...

ஒவ்வொன்றாய் கவனித்து,
உற்று நோக்கி ஆராய்ந்து,
நடைமுறையில் சரிசெய்து
நற்பணியாய் முடித்த போதும்...

காண்பவர்க்காக பூக்கும்,
தவறென்ற மலரொன்று!

நாளுக்கு நாள் புதுப்பாடம்,
வாழ்நாளில் தினந்தோறும்,
மாற்றம் காண தனிப்பயணம்,

கெடுவில்லை!
கெடுவதில்லை!

இது கற்றுக்கொள்ளும் காலங்கள்...

சுட்டிக்காட்டுபவனை கருத்தில் கொள்ளாமல்,
கற்பனைக் கண்ணியை மனதில் கொண்டு,
எழுத்துளியால் வரைகிறான் சிற்பி!

சிரிக்கின்ற சிற்பம் ஒருநாளும் உரைக்காது! சிற்பி யாரென்று..

மறைந்தவர்க்காக மரணிக்கும்
பூக்களின் வலியும்!
கழிவுகளில் ஜனனமாகும்
பசுங்கொடியின் நிலையும்!
வாடிக்கையாய் தொடர்ந்தாலும்!
வேடிக்கை பார்த்து விட்டாலும்!
உள்ளவரை உயிர்கொண்டு,
நல்வாழ்க்கை வாழும் இது
இனிமை கொண்ட துயரமே! நாம்
கவனமற்று விட்ட போதும்...

இனியாவும்..இனியாதும்...

புன்னகையை பரிசாக்கு!
புறமுதுகை புண்ணாக்குவோர்க்கு!
உன் முயற்ச்சிகளும் முன் நிறுத்தும்!
பின் வாங்காத போது!
இன்னல்களும் இனிப்பு வழங்கும்
காலப்பாடம் கற்ற பிறகு!

கல் போன்ற கரும்பிற்கு
இரும்பில் வேலி எதற்கு?
இனி நிலைகண்டு துயிலாமல்,
களைப்பின்றி கற்றுக்கொள்வோம்...

இது கற்றுக்கொள்ளும் காலங்கள்...

என்றும் அன்புடன்
ஜே...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro

Tags: