Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

பேய் :38

அந்த உருவம் கூறியதைக் கேட்ட நம் நாயகர்களின் காதுகளை அவர்களாளே நம்ப முடியாமல் கண்களை பிளந்துக் கொண்டு நின்றனர்... சட்டென வனோஜா வீனாவை விட்டாள்... கிழே விழுந்தவள் பின் நகர்ந்து சென்று தன் நண்பர்களுடன் நின்றுக் கொண்டாள்...

வனோஜா: என்ன அதுக்குள்ள ஏன் ஆட்டம் முடிஞ்சிடுச்சு ன்னு சந்தோஷப் பட்டீங்களா??? செத்தும் ஆவி யா வந்துட்டேன் பாத்தியா???? அன்னைக்கே நீ செத்து போய்ருந்தா நீ ஒருத்தி இல்லவே இல்ல ன்னு நிரூபிச்சிருப்பேன்... ஆனா உன் பொணமும் கிடைக்காம நீ செத்து தொலச்சியா இல்லை யான்னும் தெரியாம அவ்ளோ வேல பண்ணி ஏன் கைல மொத்த சொத்தும் வர போற கடைசி நேரத்துல வந்து நின்னாரு அந்த வக்கீலு... அந்த கெழவன் சாவுரதுக்கு முன்னாடி உங்க பேர்ல சொத்த மட்டும் தான் எழுதி வச்சான்னு பாத்தா எனக்கே தெரியாம... ஏன் மொத்த குடும்பத்துக்கே தெரியாம உயில் எழுதி வச்சிட்டு செத்துருக்கான்....என் பேர புள்ளைங்களுக்கு உயிர் சேதம் வந்தா மொத்த சொத்தும் சல்லி பைசா இல்லாம ஒன்னுத்க்கும் ஒதவாத ஆஷ்ரமத்துக்கு சேரும்னு... அந்த வக்கீல கொண்ணுட்டு திரும்பவும் வேர முறைல... ஆரம்பிச்சா இன்னோரு ஒருத்தன் வந்து நிக்கிறான்... உன் தாத்தா எங்கெங்கையோ இத பத்தி சொல்லி அவங்க பொருப்புன்னு ஒப்படச்சிட்டு தா செத்து போயிருக்கான்... என்று திட்டி தீர்த்தது...

வீர்: ஏய் என்ன டி? ?? தாத்தா வ அவன் இவன் ங்குர??? அவரு மட்டும் நெனச்சருந்தா பெரிமா அம்மாவ மட்டும் கூட்டீட்டு வந்துர்க்க முடியும்... ஆனா உன்னையும் பாவம் பாத்து கூட்டி வந்து 15 வர்ஷம் சோரு போட்டாருள்ள??? கொஞ்சமாவது நன்றி உணர்வு இருந்துச்சா உனக்கு???

ரவி : நீ என்ன பெரிய இவளா??? செத்து போய் ஆவியா வந்துட்டா உனக்கு கொம்பு மொலச்சிருமா??? என்ன மிஞ்சி மிஞ்சி போனா எங்கள சாகடிப்ப.... எப்பவோ போற உயிரு... இப்போ நாங்க நண்பர்கள் ஒன்னா இருக்குரப்ப போனா எங்களுக்கு சந்தோஷம் தான்... எவ்ளோ தைரியம் இருந்தா ஒரு பொண்ண துடிக்க துடிக்க கொண்ணு அவ குடும்த்தையே அழிச்சது மட்டுமில்லாம திரும்ப பணத்துக்காக அவ தங்கச்சிய சாவடிக்க வந்துர்ப்ப??? உனக்கு கொஞ்சம் ஆவது மனசுல குற்ற உணர்ச்சி இருக்கா??? இல்ல பணத்தாச புடிச்ச பணப்பேயா நீ????

ரனீஷ் : கூடப் பொறந்த பாவம் பத்தாதுன்னு உன்ன வளத்து படிக்க வச்ச ஷான்த்தி அம்மா வ எப்டி உனக்கு கொல்ல மனசு வந்துச்சு??? அவங்க உன் இரத்தம் தான??? எவ்ளோ பன்னீர்ப்பாங்க உனக்கு...

உருவம் : ஆஆஆஆஆஆஆஆ நா மட்டும் தா நல்லா வாழனும்... நா ஆசப் பட்டது கெடக்காதப்போ இந்த பணம் லாம் தேவ இல்லன்னு வாழ்ந்த ஏன் அக்காக்களுக்கு மட்டும் ஏன் அந்த வாழ்க்கை கெடக்கனும்???? ஏன் நா அவளுக கூட பொறந்தேன்னு நா யோசிக்காத நாளே இல்ல... அந்த ஆஷ்ரமத்துல கொசுக் கடி ல வளந்து அந்த கேவளமான சாப்பாட்ட திண்ணு ஒன்னுத்துக்கும் ஒதவாதவங்களுக்கு உதவி பன்ற பக்குவம் லாம் எனக்கு இல்ல...

ரனீஷ் : ஆஷ்ரமத்துல வளர்ரத பத்தி என்ன தெரியும் உனக்கு??? நீயும் அங்க தான வளந்த??? உன்னையும் ஒன்னுத்துக்கும் ஒதவாதவ ன்னு அவங்க வெளிய தொரத்தீர்ந்தா நீ இப்டி மாரி இருப்பியா????

உருவம் : எவ்ளோ வேணா பேசுங்க... எனக்கு இன்னும் முழுசா 25 மணி நேரம் இருக்கு... ஆனா உங்களுக்கு வெரும் 25 மணி நேரம் தான் இருக்கு... நா அதுக்குள்ள உங்கள துடிக்க துடிக்க சாகடிச்சி... ஏன் பலிய தீத்துக்குட்டு அந்த கடவுல் கிட்ட போவேன்... அவன் என்ன தண்டனை குடுத்தாளும் எனக்கு கவலை இல்லை...

நடந்த விபரீதத்தில் கீழே விழுந்த ரக்ஷாவின் மொபைல் அடிக்க.... அதை எடுத்த ரனீஷ் வனோஜா பேயாய் முன் நின்றும் அவளை கண்டுக் கொள்ளாமல் ஆன் செய்து காதில் வைத்தான்... அதுவோ

ரா ரா ரா
தேடி வாரா
பழைய கணக்க
முடிக்கவே வாரா....
ரா ரா ரா
ஓடி வாரா
ஸ்பீடு காட்டி
ஓட விட போறா....

என பாடிவிட்டு " இந்த பாட்டை உங்கள் காலர் ட்யூனாக செட் செய்ய எண் ஒன்றை அழுத்தவும் "..என கூறி அடுத்ததாக

ரா ரா ....
ரா ரா ...
ரா ரா
சந்தெக்கு தீரா
ஞாண தேர் தேர்ந்தினம்
தேன் தோம் ஆட தா
ஷான்த்த தோம்
ஷான்த்ததை ரா ரா.... என பாட அவனோ

ரனீஷ் : ஐ இந்த பாட்டு நல்லா இருக்கு என பாடிக்கொண்டே எண் இரண்டை அழுத்தினான்...

நம் நாயகர்கள் தலையில் அடித்துக் கொள்ள வனோஜா வோ " இங்க நா அவன சாவடிக்க வந்தா இவன் கிருக்கு வேல பண்ணி என்ன திரும்ப சாவடிச்சிடுவான் போலையே " என அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்...

வனோஜா அவனையே பார்த்துக் கொண்டிருந்ததை கண்ட ரனீஷ் : ஏய் சித்தி என்ன என்ன சைட் அடிக்கிறியா??? என் குட்டி சாத்தானுக்கு மட்டும் தெரிஞ்சிச்சு பேயா இருக்குற உன்ன திரும்ப சாவடிச்சி பிசாசா ஆக்கீருவா ....

அவன் சொன்னதில் சோகத்தை மறந்து அனைவரும் சிரிக்க தொடங்கி விட்டனர்...

வனோஜா : உன்ன தான்டா மொதல்ல சாகடிக்க போறேன் .... என்னையே கலாய்க்கிறியா????என கத்திக் கொண்டே பாய முனைய....

ரனீஷ் : ஹேய் சித்தி அதல்லா உன்னால முடியாது... நீ டையலாக் பேச தான் லாயிக்கு...

வனோஜா: என்ன சொல்ற.??? ஏன் என்னால முடியாது...????

ரனீஷ் : உனக்கு நேரம் சரி இல்ல...

வனோஜா : என்ன???

ரனீஷ் : உனக்கு நேரம் சரியா இல்ல ன்னு சொன்னேன்...

வனோஜா : ஙங வென முளிக்க... (பேயையே கொழப்பி விட்ட பெருமை ரனீஷ தா சேரும்)

ரனீஷ் : அட லூசு பேயே... நீ தான் படிச்சிர்க்கீல்ல?? ... ஒரு தடவ சொன்னா புரிஞ்சிக்க மாட்டியா??? உனக்கு 25 மணி நேரம் லாம் இல்லை.... வெரும் 1 மணி நேரம் தான் இருக்கு...

என்ன என வனோஜா அதிர்ச்சியடைய... மற்ற நாயகர்கள் அவனை புரியாமல் நோக்கினர்...

வனோஜா : எப்டி இது சாத்தியம்???? இல்ல நீ என்ன கொழப்ப பாக்குர... நா நம்ப மாட்டேன்...

ரனீஷ் : பைத்தியம் புடிச்ச நாயே... சாரி பேயே... அதா சொல்றேன்ல... உனக்கு நேரம் இல்லை ன்னு ஏன் நொய் நொய்யின்னு அதையே கேக்குற???

வனோஜா : நா செத்து மூணு நாள் எனக்கு அவகாசம் இருக்கும்... நா செத்து ஒரு நாள் தான ஆகுது...அப்போ எனக்கு முழுசா ஒரு நாள் இருக்கு...

ரனீஷ் : உனக்கு மணி பாக்க தெரியாதா??? நீ Flashback சொல்றேன்னு ஒரு நாள் புல்லுத்தையும் எப்பயோ வேஸ்ட் பன்னீட்ட... காலை ஆகி 3 மணி நேரம் ஆவுது.. நீ சொன்னப்படி பாத்தா... நாழு மணி லேந்து உனக்கு ராவு காலம் ஸ்டார்ட் ..... என ரக்ஷாவின் மொபைலை ஆட்டிக் காட்டினான்... அதில் கொட்ட எழுத்தில் காலை மணி 3:02 என தெளிவாய் காட்டியது....

வனோஜாவோ அதிர்ச்சியில் என்ன செய்வதென தெரியாமல் அப்படியே உரைந்து விட்டாள்..."உனக்கு இவ்ளோ மூளை யாடா??? " என ரக்ஷா வீர் தான்யா ரவி அவனை பார்த்து லுக்கு விட... அதை வீனா அவனிடமே கேட்டுவிட்டாள்...

வீனா : மச்சான் உனக்கு இவ்ளோ அறிவாடா???

ரனீஷ் : ஈஈஈஈ இல்ல மச்சி...எனக்கும் முன்னாடி தெரியல டி... ரக்ஷால போன்ல தா மணிய பாத்தேன்...

வீனா : இந்த லட்ச்சனத்துல நீ அந்த பேயி பக்கி கிட்ட மணி பாக்க தெரியாதா ன்னு கேக்குர? ??? என புருவம் உயர்த்தி கேட்க... அவனோ ஈஈஈஈ என இழித்து வைத்தான்...

அதற்குள் சுதாரித்துக் கொண்ட வனோஜா ..... நேரம் குறைவாக உள்ளது ..... விரைவாக செயல் பட வேண்டும் என அவர் அருகில் நெருங்க... நம் கதாநாயகர்களோ கேஷ்வலாக நின்று கொண்டிருந்தனர்.... ரனீஷ் மட்டும் "ரா ரா ரா ரா" என பாடிக்கொண்டு இருந்தான்... முதலில் இவனை தான் கொல்ல வேண்டும் என குரோதமாய் அலரியவாறு அவனை நெருங்கியது... ஆனால் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் வனோஜா அவனை நெருங்கும் முன்னே திடீரென பின் நோக்கி விழுந்தான் ரனீஷ்... அடுத்தடுத்து வரிசையாய் நின்ற மற்றவர்ளும் மடிந்து விழ... இரண்டாவதாய் அதவாது ரனீஷின் அருகில் நின்ற வீனா மட்டும் தலை குனிந்து விழாமல் நின்றுக் கொண்டிருந்தாள்...

வனோஜா அவளையே பார்த்திருக்க... தானாய் மயங்கி விழுந்த மற்ற நாயகர்கள் தள்ளி படுக்க வைக்கப் பட்டனர்... வீனா தலையை நிமிர்த்தாமேல் அப்படியே நிற்க... பத்தாத குறைக்கு அவள் கூந்தல் அவளின் முகத்தின் முன் விழுந்து அவளின் முகத்தையும் மறைத்திருந்தது...

சட்டென காற்று வீச தொடங்க.... மெல்லிய வெள்ளிச்சத்துடனே இருந்ததும் இப்போது கரியை பூசிக் கொண்டது ...... ம்ம்ம்ம் என யாரோ உருமும் சத்தம் மட்டுமே கேட்டது..... பேயாய் இருந்த வனோஜாவிற்க்கே திடீரென பயம் வந்து ஒட்டிக் கொண்டது... நான் நினைப்பது நடக்கக் கூடாது நடக்கக் கூடாது என அதையே திரும்ப திரும்ப நினைத்துப் பார்த்தாள் வனோஜா...

அவளின் நினைப்பை பொய்யாக்காமல்....

தீரா :( நீ நெக்கிறது மட்டுமே நடக்கனும்னா நா எதுக்கு இருக்கேன்... )

காற்றில் வீனாவின் முகத்தை மறைத்திருந்த கூந்தல் விலக... தலையை மெதுவாய் நிமிர்த்தினாள்... இருளிள் அவள் முகமும் தெரியவில்லை...கண்களை மூடி இருந்தாள் போலும்... சட்டென கண்களை திறந்தாள்... திக் என இருந்தது வனோஜாக்கு... அதே இரத்தம் கக்கும் கண்கள்... இன்னும் சிவப்பேரி... கொலை வெறியை பறைசாற்றியது ..... அவள் கண்ணசைவில் வெளிச்சம் வந்து வந்து செல்ல... ஒரு ஒரு முறை வரும் வெளிச்சத்திலும் அவள் ஒரு ஒரு அடி எடுத்து வைத்தாள்... ஐந்தாம் முறை வந்த வெளிச்சத்தில் வனோஜாவுக்கு இரண்டடி முன் இருந்தாள்... அடுத்த முறை ஒளி வராமல் போக.... திடீரென வந்த வெளிச்சத்தில் அவள் முன் அகோரமாய் முறைத்துக் கொண்டிருந்தாள்... வீனாவின் உடலில் இருக்கும் ஒவீ....

தொடரும்.....

DhiraDhi

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro