Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

புகைப்படம்:40

My dear idhayangaleeee Namma oru saavi oru saavu 40 episodes aa reach aaiduchu... 4.8k views um 1k votes aium reach pannittom ...... me so happy guys...ithu ellathukkume neenga thaan kaaranam... ennoium oru writer aa mathichu en kathaiya padicha unga ellarukkum oscar award ee kodukkalaam.... bt unmaiyave solren... intha stry ya ivlo per padippanga nnu kooda na nenachu paakkala... na kanavula kooda nenachi paakatha oru support... itha kondadura vithama.... inge poliyum chocolate malai.....🍫🍬🍬🍭🍭🍬🍬🍫🍬🍭🍭🍬🍬🍫🍭🍭🍭🍬🍬🍫🍬🍭🍭🍭🍬🍬🍫🍫🍫🍫🍬🍬🍫🍬🍬🍬🍫🍫🍫🍫🍭🍭🍭🍭🍭🍫🍫🍫🍭🍭🍭🍬🍫🍬🍭🍭🍭🍬🍫🍬🍭🍭🍬🍫🍬🍭🍭🍬🍫🍬🍭🍭🍬🍫🍬🍭🍭🍬🍫🍭🍭🍬🍬🍫🍭🍭🍬🍫🍬🍭🍬🍭🍫🍭🍭🍫🍭🍭🍭
Chocky saapudra bc la kathaiya padikkama poidatheenga paa.....
...........................................................................................................

காக்கைகளின் சத்தம் காதை கிளிக்க.... கதிரவனின் ஒளி கற்றை முகத்தில் படற... கண்களை கசக்கியவாறு எழுந்தமர்ந்தாள் வீனா.... மெல்லிய புன்னகையுடன் கண்ணை திறந்தாள்...அவள் முன் அவளை போலவே சற்று முன்பே எழுந்திருந்த ரக்ஷாவும் தான்யாவும் கலைந்த கேசத்துடன் அவர்களின் அறையில் அமர்ந்திருந்தனர்...

வீனா : குட் மார்னிங் மச்சீஸ்...

ரக்ஷா தான்யா : குட் மார்னிங் டி...

வீனா: நல்ல தூக்கம்... இவ்ளோ நாள் இல்லாத ஒரு தூக்கம்... என்று தன் கழுத்தின் முன் கிடந்த அவளின் கூந்தலை பின் தல்ல... வீனா என்ற அலரலுடன் கண்களை விரித்தனர் ரக்ஷா தான்யா இருவரும்....

வீனா : என்ன ஆச்சு ...

தான்யா : உன் கழுத்துல....என கை வைக்க... லேசாய் வலித்தது...

வீனா : அவ்ச்...

ரக்ஷா : எப்டி டி கழுத்துல இப்டி கீருச்சு???

வீனா : தெரியல டி... அப்போதே மூவருக்கும் நேற்று நடந்தவை அனைத்தும் கண் முன் வந்து போனது... ரக்ஷா தான்யா இருவரும் தங்களுக்கு ஏற்ப்பட்டிருந்த காயங்களையும் கவனித்து...

மூவரும் : அப்ரம் என்ன டி நடந்துச்சு???என ஒரே போல் கேட்க...

தடதடவென கேட்ட சத்தத்தில் அவனுங்களும் வந்துட்டானுங்க என்று சொல்லி முடிப்பதற்குள் அறையின் கதவை திறந்து மூச்சு தினற வந்து நின்றனர் நாயகன்கள் மூவரும்....அவர்கள் வாயை திறக்கும் முன்னே...

தான்யா : அதுக்கு அப்ரம் என்ன ஆச்சுன்னு கேக்க போறீங்க அதான??? நீங்களும் எங்கள மாரியே எந்திரிச்சிட்டு காயத்த பாத்து நியாபகம் வந்து கீழ வந்துர்க்கீங்க... கரக்ட்டா???

வீர் : கரக்ட்... தான்...அப்போ உங்களுக்கும் தெரியாதா???

ரக்ஷா : தெரியல டா... அந்த வனோஜா நம்மல கொல்ல வரதுக்கு முன்னாடி வரை நியபகம் இருக்கு... ஆனா அப்ரம் என்ன நடந்துச்சு ன்னு நியாபகம் வர மாட்டுது...

ரனீஷ் : எங்களுக்கும் அது வர தான் நியாபகம் இருக்கு...

ரவி : நம்ம காயத்துக்கு யாரு மருந்து போட்டது.. நம்ம எப்டி நம்ம ரூமுக்கு வந்தோம்... இல்ல எல்லாரும் ஒரே மாரி கணவு கிணவு கண்டோமா???

வீனா : டேய் அப்டியே கணவா இருந்தாலும் காயம் எப்டிடா???

தான்யா : நேத்து நடந்ததுல நம்ம வீடே ரொம்ப அலங்கோலமாய் டுச்சு... அப்டியே இருக்கான்னு போய் பாப்போம்... அப்போ தெரிஞ்சிரும்ல???

ரக்ஷா : வாங்க போலாம்... என மெதுவாய் வெளியே சென்றனர்...

மாடி இறங்கி கிழ் சென்றவர்களுக்கு பெரும் அதிர்ச்சி... நேற்று உடைந்து சிதறிய கன்னாடி துகள்கள்... வீசி எறியப்பட்ட டேபில் சோபா மற்றும் மரப் பொருட்கள்... கிளிந்துப் போன தீரை சேலைகள் வீட்டின் உட்புறம் அனைத்தும் பழைய படி மாறி இருந்தது... சிறு கீரல் அல்லாது புதிது போல் காணப்பட்டது...

கண்களை அகல விரித்து தொப் பென சோபாவில் அமர்ந்தனர் அனைவரும்... ஒன்றுக்கூட நினைவு திரும்பவில்லை... அனைவருக்குமே ஒரே புள்ளியில் நடந்தவை அனைத்தும் மறந்து போய் இருந்தது...

ரவி : டேய் என்ன டா இது... எல்லாம் எப்பவும் போல இருக்கு... என்ன தான் நடக்குது இங்க??? அந்த வனோஜா எப்டி பேயா வந்தா???

வீர் : நம்மல மொதல்ல ஒரு பேய் தொரத்துச்சே அதுவும் வனோஜாவும் ஒன்னா??

தான்யா : டேய் அந்த வனோஜா மூணு நாள் முன்னாடி தான் பரலோகம் போய்ர்க்காங்க... ஆனா நம்மல அந்த பேய் ஒரு வாரமா தொரத்துது டா...

வீர் : ஆமா... அப்போ அது யாரு??? ஏன் கணவுல வந்தது எந்த பேய்??? மொத பேயா??? இல்ல வனோஜா பேயா???

வீனா : நம்ம கணவுல வந்தது மொத பேய் டா... ஏன்னா கணவு லாம் நமக்கு மூணு நா முன்னாடி வர வந்தது... அன்னைக்கு காட்ல ஒரு பொண்ணு வர தெல்லாம் பாத்தோமே... அது வர நம்மல அந்த மொத பேய் தா தொரத்தீர்க்கு... அப்ரம் தான் வனோஜா வந்துர்க்கா...

ரக்ஷா : யார் டி அந்த பேய்??? ஏன் நம்மல கொல்ல பாத்துச்சு??? நேத்து நம்மல கொல்ல பாத்த வனோஜா எங்க??? அவ நேரம் முடிஞ்சதும் போய்ட்டாளா??? அப்டியே போனாலும் நம்மல ஏன் உயிரோட விட்டுட்டு போனா????

ரவி : நம்ம எப்டி தூங்குனோம்??? எப்போ ரூமுக்கு போனோம்??? எப்டி போனோம்??? யாரு நம்மல காப்பாத்துனது???

தான்யா : ஒன்னுமே தெரியல...

சட்டென சோபாவில் இருந்து விழுந்தது ரக்ஷாவின் மொபைல் போன்... இது எப்படி இங்கே என யோசித்தவாறு எடுத்த ரவியின் கையில் இருந்து அதை பிடிங்கிய ரனீஷ்...

ரனீஷ் : ஏஏ மச்சான்ஸ் மச்சீஸ்... நேத்து நடந்தது உண்மையா இல்லையான்னு இப்போ தெரிஞ்சிரும்... நேத்து நா ரக்ஷா போன எடுத்தப்போ போன் வந்தது... அப்போ மணி மூணு... இப்போ கால் லாக் ல செக் பண்ணா கால் வந்ததா இல்லையான்னு தெரிஞ்சிரும்...அத வச்சி நேத்து வனோஜா பேய் வந்தத மட்டுமாவது நம்ம கன்பார்ம் பன்னிக்க முடியும்...

(அத வச்சு முழு காரணத்தையும் கண்டுபிடிக்க முடியும் டா மடயா.... )

அதை ஓப்பன் செய்தவன் போன் என்னும் அப்பை க்லிக் செய்யும் முன் கேலரியை தவறுதலாக க்லிக் செய்து விட்டான்... போன் திடீரென ஹங்காக தொடங்கியது... கடுப்பில் ஒரு அழுத்து அழுத்தி கேலரியில் இருந்து வேளியே வந்தவன் ஒரு நிமிடம் கண்களை விரித்து விட்டு படபட வென கேலரியை ஓப்பன் செய்ய முனைந்தான்... ஆனால் பாலாப்போன போன் அப்போது திரும்ப ஹங்காக தொடங்கியது... அவன் பதற்றத்தில் எதைஎதையோ அழுத்த அதுவோ பிலான்க்காக காட்டியது...இவன் என்ன செய்கிறான் என மற்றர் இவனை கேள்விக் குறியுடன் நோக்க.. அவனோ அவர்களை கவனியாது தன் கண்கனை பழய நிலைக்கு கொண்டு வராமல் அதே அதிர்ச்சி பதட்டம் ஆச்சர்யம் என்று பல்வேராக முகத்தை வைத்திருந்தான் ..... திடீரென கை தவிறி கிழே விழுந்து பேட்டரி தனியாக போன் தனியாக சிம் தனியாக மெமரி கார்ட் தனியாக என ஒரு ஒரு பக்கம் பறந்து விழுந்தது ரக்ஷாவின் போன்....

ரக்ஷா : சனியன் புடிச்சவனே அது ஏன் போன் டா... என கத்த

ரனீஷ் : அச்சச்சோ... அது வா டி முக்கியம்??? என ஒரு ஒரு பார்ட்டாய் தேடி கண்டு பிடித்தவன் ஒன்றாய் மாட்டி ஆன் செய்ய... கமான் கமான் ஓப்பன் ஓப்பன் ஓப்பன் என கத்த அன்ட்ராய்டு என்னும் தன் கம்பெனியின் பெயரை விசுவாசம் உள்ள போனாக பளிச்சிட காட்டி ஓப்பன் ஆக தாமதமாக்க... இப்ப உன் ஓனரல்லா நான் கேட்டனா???? சிக்கிரம் ஓப்பன் ஆகி தொல போனே.. ஏன் அவசரம் புரியாம.... என போன் என்பதையும் மறந்து அதனுடன் வாதாடிக் கொண்டு இருந்தான்....

அதுவோ சற்று நேரம் கடந்து ஓப்பன் ஆகியது... நடுங்கும் கைகளை அடக்கி கேலரியை ஓப்பன் செய்தான் அதில் அந்த போட்டோவை க்லிக் செய்ய... அதை பார்த்துவிட்டு செய் ஒரு நிமிஷத்துல உயிரே போய்டுச்சு... என பெருமூச்சு விட்டான்... அப்போட்டோவிலோ... வீரும் தான்யாவும் ஒருவர் மேல் ஒருவர் தலை வைத்து தூங்கும் காட்சி இருக்க... கை தவறி அடுத்த படம் தெரிய... அதை கண்டு உண்மையில் அவன் மூச்சு ஒரு நிமிடம் நின்று விட்டது...

ரனீஷ் : அடேய்.... இத பாருங்க டா

என கத்தியது மதிவாலயத்தின் ஒவ்வொரு மூளையிலும் எதிர் ஒலித்தது.... மற்றவரும் அதை பதட்டத்துடன் பார்க்க... அதில் வீரும் தான்யாவும் ஒருவர் மேல் ஒருவர் தலை வைத்து தூங்கும் காட்சி இருக்க... அருகில் பார்த்தவர்களின் கண்கள் அகல விரிந்து விட்டது...

வீரின் தோலுக்கு பின் ஒரு வெள்ளை உருவம் அவனை கண்களிள் கண்ணீர் வலிய பார்த்துக் கொண்டிருந்தது... அடுத்தடுத்து இதுவரை மறுவாழ்ப்பேட்டை வந்து அவர்கள் எடுத்த புகைப்படங்களை எல்லாம் பார்க்க... அதே வெள்ளை அனைத்து படங்களிளும் உருவம் அவர்களை பார்ப்பதைப் போல் நின்றது... முதல் நாள் இவர்கள் ஊர் வந்த அன்று உறங்க செல்லும் முன் எடுத்த புகைப் படங்களிள் முதல் படத்தில் அவ்வுருவம் அனைவரையும் குரோதமாய் முறைத்துக் கொண்டு அருகிலே நின்றது... அடுத்த படத்தில் வீனாவை கண்கள் சிவப்பு நிறத்தில் மாறி அதிலே அவளை எறிக்க முயன்றதப் போல் வெறித்து பார்த்துக் கொண்டிருந்தது....

அனைவரும் : யார் டா அது ???? என கத்த...

ரவி : இத ஏன் நம்ம கவனிக்காம போனோம்???நாம வந்த அன்னைலேந்து ஏதோ ஒரு உருவம் நம்ம கூடையே இருந்துர்க்கு... ஆனா...

வீனா : என்ன ஆனா???

ரவி : அது ஏன் வீர அழுதுக் குட்டே பாக்கனும்???

ரக்ஷா : டேய் அந்த லாக்கெட் ட எத்துட்டு வாங்க டா... அது யாருன்னு தெரிஞ்சே ஆகனும்.... ரனீஷ் ஓடிச்சென்று அதை எடுத்து வந்தான்... அது டேபிலில் தான் இருந்தது....

வீர் : இத எப்டிடா தொரக்குரது???

ரனீஷ் : தெரியலையே....

அப்போது திடீரென ரவிக்கு ஒன்று நியாபகம் வந்தது...

ரவி : இத எப்டி நா மறந்தேன்....

உடனடியாக அவனின் அந்த மரப்பெட்டியை அவன் பாக்கெட்டில் இருந்து உருவினான்... அதை வேகவேகமாக திறந்தவன்... அதன் அடியில் இருந்த ஒரு துண்டு தாளை தூக்கி எறிந்தான்... அங்கோ ஒரு சிறிய சாவி... வீனாவின் சாவியை போலவே இருந்தது.... அதை வெளியில் எடுத்தவனை மற்றவர்கள் ஆச்சர்யமாய் பார்க்க....

ரவி : இந்த சாவி எனக்கு வீனாக்கு அக்ஸிடென்ட் ஆனப்போ கெடச்சிச்சு டா... ஒரு கருப்பு கார் போச்சுன்னு சொன்னேன் ல ... அதுலேந்து கீழ விழுந்துச்சு... அத பாத்துட்டு இருந்தப்போ தான் என் ஹார்ட் பீட் எகிரி... நா வீனாவ பாத்தேன்... பதட்டத்துல அத ஏன் பாக்கெட்லையே போட்டுட்டேன்... இப்போ தா நியாபகம் வந்துச்சு........ இத வச்சு அந்த லாக்கெட் ட ஓப்பன் பன்ன ட்ரைப் பன்னுவோமா???

ரக்ஷா: பன்னலாம் டா... ஒரு வேளை கடசி நேரத்துல இது தான் அதுக்கு வழியா இருந்து நாம அத பாக்காம போய் அப்பயே பாத்துர்க்கலாமே ன்னு யோசிக்கிறதுல யூஸ் இல்லை... இபோ அத தொரக்கலன்னா கூட ட்ரை பன்னோமே ன்னு சின்ன நிம்மதி இருக்கும்.... சோ ட்ரை பன்னி பாப்போம்....

அந்த சிறிய சாவியை அந்த லாக்கெட்டில் நுழைக்க போக... அதில் மிகவும் மெல்லியதாய் சிறியதாய் " O " என்று பதிக்கப்பட்ட எழுத்தை கவனிக்கும் நிலையில் எவரும் இல்லை...

சாவி உள் நுழைய எந்த பக்கமும் மதலில் திறுப்ப யமுடியவில்லை... அடுத்த முயற்சியில் அது வலது புறமாய் திரும்பி... மீண்டும் இடுது புறமாய் திரும்பியது... ஆனால் திறக்கவில்லை... ஆவலுடன் பார்த்த கண்கள் யாவும் ஏமாற்றத்தில் சுருங்கியது.... திடீரென மதிவாலயத்தில் எங்கும் ஒரு ஒளி பரவியது.... கண்களை கூசியது.... காற்று பலமாய் வீச தொடங்க.... எங்கிருந்தோ வந்த காற்று அந்த லாக்கெட்டில் இருந்த சாவியை இருபுறமும் இருமுறை திருப்ப...." டப் " என்னும் சத்தத்துடன் திறந்தது லாக்கெட்....

அவ்வொளியில் கண்களை திறக்கமுடியாமல் இருந்த நாயகர்களுக்கு லாக்கெட் திறக்கும் சத்தம் கேட்க.... அதை பார்த்தே ஆக வேண்டும் என மற்ற ஐவரும் லாக்கெட்டை பிடித்திருந்த ரவியின் கைகளுடன் அதை ஒன்றாக பிடித்து அந்த ஒளிக்கு நேராக தூக்க.... கொஞ்சம் கொஞ்சமாய் தெரிந்தது மூன்று உருவம்.... லாக்கெட்டின் இரு பக்கத்திலும் ஒவீ ரொவீ இருக்க.... அந்த லாக்கெட்டின் பக்கவாட்டில் வீட்டின் வாயிலில் தெரிந்தாள்.....

புன்னகையுடன் நின்ற ஒவீனா....

தொடரும்.......

Hiii mere hearts.... epdi irukku ud???? Intha ud laye mudichidalaam nnu paathen...bt mudiyala.... ungalukku theertha doubts innum ethavathu iruntha comments la sollunga... nxt ud la clear pannirren.... marakkama comment pannunga guys...

DhiraDhi

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro