Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

சந்திப்பு - 9

முகத்தில் தற்காலிகமாக தோன்றியிருந்த மெல்லிய புன்னகையுடன்... தன் கையில் பிடித்திருந்த மொபைலின் மறுமுனையில் கேட்கும் குரலால், காது ஜவ்வு கிழிந்து வி்ட கூடாதென மொபைலை காதை விட்டு சற்று தள்ளி பிடித்தபடி பொறுமையாக கட்டிலில் அமர்ந்தான் மனோஜ்.

"ஏன்டா டேய்.. அறிவு கெட்டவனே... வீணா போனவனே... மொபைல் வாங்குன.. அதுக்கு சிம் வாங்குன... ஆனா அத ஆக்டிவேட் செஞ்சு தரனும்ன்னு தெரியாது உனக்கு?..", சுபித்ரா பொங்கி எழுந்த பின்னரே, "ஓ... அப்படி ஒரு விஷயம் இருக்கோ...?", என நினைவு கூர்ந்தான் மனோஜ்.

"என்ன அப்டி ஒன்னு இருக்கோ?.. அதுக்குள்ள என்ன மறந்துட்ட நீ?"

"ஹே.. என்ன சுபா இப்டி கேக்குற நீ?... இப்போ வர உன் கால்காக தா வெயிட் பண்ணிட்டு இருக்கேன் தெரியுமா.."

"பொய்... பொய்... எல்லாம் போய்... ஏன் இன்னும் ஒரு கால் கூட பண்ணலன்னு நெஜமாவே நீ யோசிச்சுருந்தா சிம் இன்னும் ஆக்டிவேட் ஆகலன்னு நியாபகம் வந்துருக்கும் தானே? அப்போ அவ்ளோ அஜாக்ரத... எப்டி டா நீ கவனிக்காம இருக்கலாம்?..."

"அய்யோ... ச்சாரி சுபா க்கா..", மொபைலிலேயே அசடு வழிந்தவன், "இவ்ளோ நேரமும் நீ எங்கயோ தொலஞ்சு போய்ட்டியோன்னு பயந்துட்டே தா இருந்தேன் தெரியுமா... எனக்கு இந்த சிம் விஷயம் சுத்தமா நியாபகமே இல்ல..", பாவமான குரலில் அக்காவிடம் கெஞ்சினான் மனோஜ்.

"கிறுக்கு பயலே.. நீ பாட்டுக்கு பஸ்ல ஏத்தி விட்டுட்டு போய்ட்ட... எங்க போக எங்க தங்கன்னு கேக்கலாமேன்னு ஃபோன எடுத்தா அது டவரே காட்டல... என்னடான்னு பாத்தா ஸார் சிம்ம ஆக்டிவேட் பண்ணமலே குடுத்து விட்டுறுக்கீங்க... துப்பு கெட்டவனே..."

"சரி சரி... விடு.... ஏதோ அவசரத்துல மறந்துட்டேன்.. அதுக்குன்னு இப்டியா என் காத செவுடாக்குவ நீ?

"ஏன்டா கேக்க மாட்ட.. அங்கருந்து இங்க வர்ற வரைக்கும் எப்டி பயந்துட்டு இருந்தேன் தெரியுமா.. இதுல தனியா வேற அனுப்பி விட்டுட்ட.. இப்போ இங்க உள்ள மொபைல் கடைல கேட்டா சிம் வாங்குன எடத்துல போய் கேக்க சொல்லுறாங்க... கெளம்பி ஊருக்கே வரட்டா?"

"ஐயையோ... வேணாண்டா சாமி... கஷ்ட்டபட்டு இங்க சமாலிச்சு வச்சுருக்கேன்... இன்னும் ஆறு மாசத்துக்கு இந்த பக்கம் நீ தல காட்ட கூடாது ஆமா.."

"ஆமா கேக்க மறந்துட்டேன்.. அங்க எப்டி சமாலிச்ச நீ?.. ரெண்டுபேரும் என் மேல கோபமாவா இருக்காங்க?", தம்பி கூறிய பதிலால் சண்டைப்பிடிப்பதை விடுத்து சட்டென கவனத்தை அன்னை தந்தை நினைவை நோக்கி திருப்பினாள் சுபித்ரா.

"அப்பாம்மாக்கு ஐயா மேல நம்பிக்க இருக்கு போல...", என தன்னை தானே புகழ்ந்து கொண்டவன், "பெருசாலாம் ஒன்னும் கோவம் இல்ல... அதெப்டி அவள நீ தனியா அனுப்பலாம்ன்னு கொஞ்சம் கத்துனாங்க.. அப்பறம் மம்மி என் கன்னத்துல லைட்டா ஒரு கிஸ் குடுத்தாங்க.. ..."

"ஆங் ?!?!... கிஸ்ஸா?"

"ஆமா... ஆமா... அவங்க கையாலயே குடுத்தாங்க..", இங்கு கன்னத்தை தேய்த்து கொண்டே மொபைலில் நொந்து கொள்ளும் குரலில் கூற... மனோஜின் பதில் புரிவதற்கு சில நொடிகள் எடுத்தாலும் சரியாக புரிந்துகொண்டு வாய்விட்டு சிரித்தாள் சுபித்ரா.

"ஏய்.. என்ன இளிப்பு... காலைல உனக்கு.. மதியம் எனக்கு.. அவ்ளோ தான்.. இந்த மாதிரி அதிரடி முடிவெடுக்கைல அடிதடிலாம் சகஜமப்பா.. என்ன ஒன்னு... உனக்கு கெடைக்க வேண்டியது... இன்னைக்கு எனக்கு கெடச்சுருக்கு. ", அவன் சாதாரணமாக கூற..., "ஹாஹாஹா... இன்னைக்குன்னு என்ன... இனி டெய்லி டெய்லி நீயே வாங்கிக்கோ", என கூறி தன் சிரிப்பை தொடர்ந்தாள் அவள்.

லேசாக தானும் சிரித்து கொண்டவன் அவளின் சிரிப்பொலி அடங்காமல் இருப்பதை கண்டு, "போதும் போதும் நிறுத்து... சரி... மாமாட்ட பேசிட்டியா நீ?.." இவ்வளவு நேரமும் சிரித்து கொண்டிருந்தவள் மனோஜின் கேள்வியால் முகத்தை உர்ரென வைத்து கொண்டு, "அந்த கழுத கிட்ட நா ஏன் டா பேசணும்?..", இறுக்கமான குரலில் கேட்க..., "ஓஹோ.. மேடம் ஃபோட்டோ கிட்ட மட்டும் பேசுவீங்க.. நேர்ல வந்தா பேச மாட்டீங்களா?", அக்காவை நக்கலடித்தான் மனோஜ்.

"ஹும்.. ஆமான்னே வச்சுக்கோ... அதுசரி... இப்போ தா நியாபகம் வருது... அவன் ஃபோன்ல உன் நம்பர் ஆல்ரெடி சேவ் ஆகி இருக்கு.. அப்போ எனக்கு தெரியாமலே நீ அவன் கூட கான்டேக்ட்ல இருந்துருக்க?? ஃப்ராடு பயலே.. என் கிட்டயே மறச்சுட்டல்ல நீ...", அவளின் கேள்வி காரசாரமாக வர... அதற்கு மனோஜ் பதிலளிக்கும் முன்பே தூரத்திலிருந்து விசோழன் நடந்து வருவதை சுபித்ரா கவனித்து விட்டாள்.

"தோ.. கழுதைய பத்தி பேசும்போது கழுதையே நேர்ல வருது.. அது கிட்ட நீயே பேசிக்கோ... நாலாம் பேச முடியாது", என்றவள் அருகில் நின்றிருந்த சில்வர் இனோவாவினுள் மொபைலை தூக்கி எறிந்துவிட்டு அவள் பாட்டிற்கு எங்கோ நடந்து சென்றாள்.

"ஹோய்.. சுபி.. எங்க போற நீ...", கத்திகொண்டே காரின் அருகில் வந்த விசோழன் அவள் செல்லும் திசையை பாரத்துவிட்டு, முன்பக்க கண்ணாடி வழியாக கையை விட்டு சீட்டில் கிடந்த மொபைலை எடுத்து காதில் வைத்து காரில் சாய்ந்தான். அவளோ இவனின் குரல் கேட்டும் கண்டுகொள்ளாமல் முன்னோக்கி நடந்து சென்றாள்.

"டேய் மாமா... ஏன் கத்துன.. எங்க போறா அவ...", அக்கா கோபத்தில் எங்கேனும் செல்கிறாளா என மனோஜ் மொபைலில் படபடக்க..  "அட ச்சை.. இப்டி  ஓவர் புரொடெக்டிவ்வாலாம் இருக்க கூடாது டா மச்சான்... அவ ரெஸ்ட்ரூம் போறா போல..."

"ஓ.. சரி சரி..."

"அப்பறம்?.. என்னை பத்தி என்ன சொன்னா உன் அக்கா?.."

"ஹான்??.. உன்ன கழுதன்னு சொன்னா டா மாமா..."

"அப்டியா சொன்னா அவ... ஹ்ம்ம்.. என்னத்த சொல்ல... நல்லதுக்கு காலம் இல்லாம போச்சு.. எல்லாம் என் விதின்னு நெனச்சுட்டு போக வேண்டியது தா."

"என்ன மாம்ஸ்.. இதுக்கேவா... அவ கிட்ட பேசி சமாதான படுத்துர ஐடியா இருக்கா இல்லையா..."

"எங்க.... என் மூஞ்சிய பாத்த அடுத்த செகெண்ட் லைட்டா சர்பிரைஸ் ஆனா...  அதோட அவ்ளோ தா... அப்போ மொரைக்க ஆரம்பிச்சது தா.. இப்போ வர மொரைக்குறா... இருந்தாலும் சமாதான படுத்த ட்ரை பண்ணி பாக்குறேன்.."

"ஹாஹா... பெஸ்ட் ஆஃப் லக் மாமா..."

"நன்றிகள் பல மாச்சான்..."

"சரி அத விடு.. அவள டைமுக்கு போய் பிக் பண்ணிட்டியா இல்ல லேட்டாக்கி அவள அழ விட்டியா?"

"டேய் டேய்.. ஆனாலும் என் மேல உனக்கு இந்த அளவுக்கு சந்தேகம் இருக்க கூடாது.. நா வந்து ஒரு மணி நேரம் ஆச்சு.."

"ஆனா மாமா... பஸ் இருவது நிமிஷத்துக்கு முன்னாடியே வந்திருக்குமே... எப்டியும் அவ உன் கிட்ட பேசீருக்க மாட்டா.. இன்னும் நீங்க பஸ் ஸ்டான்ட்ல இருந்தும் கெலம்பல.. அப்போ ஏன் டா மாமா கால் பண்ண லேட்?."

"பஸ் அப்போவே வந்துருச்சு தா.. ஆனா அவள இப்போ தானே நா கூட்டிட்டு வந்தேன்.."

"ஏன் டா.. இவளோ நேரமாவா அவள தேடிட்டு இருந்த?.. அவ தனியா நின்னு பயந்துருப்பால"

"ஆமா பயந்து கிழிச்சா... அதெல்லாம் ஒன்னும் இல்ல... அவ பஸ்ல இருந்து இறங்கும் போதே நா அவள பாத்துட்டேன்... இறங்கி நிப்பான்னு பாத்தா விறுவிருன்னு பக்கத்துல இருக்குற ஒரு மொபைல் கடைக்கு போய் என்னமோ கேட்டா... சரி என்ன நடக்குதுன்னு பாப்போமேன்னு நானும் பாத்தா... அடுத்து ஒரு பேக்கரில போய் என்னமோ கேட்டா... அடுத்து ஒரு பொம்ம கடைகுள்ள போய் என்னமோ கேட்டா.."

"அப்டி என்னத்த கேட்டா அவ.."

"அதானே தெரியல... இப்டியே பஸ் ஸ்டாண்ட ஒரு ரவுண்ட் வந்தா... பேக்க வேர தூக்க முடியாம தூக்கிட்டு சுத்துனா பாவம்... அப்பறம் நா தா பாவம் பாத்து அவ கிட்ட போனேன்... அங்க ஒரு ஆன்ட்டிய புடிச்சு வச்சு அவங்க மொபைல கேட்டுட்டு இருந்தா.. நா போய் கூப்டவும் அத அப்படியே குடுத்துட்டு என் நல்லா மோரச்சு பாத்துட்டு கைல இருந்து கார் சாவிய பிடுங்கிட்டு நேரா இங்க வந்து உன் கிட்ட...", என மனோஜிடம் பேசிக்கொண்டே கார் கதவு பக்கமாக திரும்பியவன், "அம்மாடி...", என நெஞ்சில் கை வைத்து விட்டான்.

அவனுக்கு மிக அருகில்.. காரின் முன்பக்க கண்ணாடியை முழுவதுமாக இறக்கி விட்டு அதில் சாய்து கன்னத்தில் கைவைத்து விசோழன் பேசுவதையே உன்னிப்பாக பார்த்து கொண்டிருந்தாள் சுபித்ரா.

"ஆத்தாடி.. இவ எப்போ வந்தா...", என விழியை விரித்தவன் மொபைலை இன்னும் காதிலேயே வைத்திருக்க..., "மாமோய் ... என்னாச்சு.??...", என்ற மனோஜின் குரல் செவியில் விழுந்தது.

"ஒன்னுமில்ல டா... பேய்...", என்றவன் வண்டியை சுற்றி வந்து ஓட்டுநர் இருக்கையில் அமர.. "ஆங்??.. பேயா???.. என்ன பேய்?", ஒன்றும் புரியாமல் தலையை சொரிந்தான் மனோஜ்.

"அது ஒரு மதுர பேய் டா.. எப்போ வந்து வண்டில ஒக்காந்துச்சுன்னே தெரியல... சரி நீ கட் பண்ணு.. அப்பரம் பேசுறேன்.. வண்டி ஓட்டைல பேசிட்டு இருந்தா அந்த பேய் என்ன கொண்ணே போட்டுரும்...", என ஓரகண்களால் அருகிலிருப்பவளை நோக்கியபடி வண்டியில் சாவியை நுழைத்தான் விசோழன்.

"ஹாஹா... இனி நீ வாழ்க்க முழுக்க அந்த பேய் கையால நல்லா வாங்கி கட்டிக்க தானே போர.. அதுக்கு ஒரு ஆறு மாசம் டிரெய்னிங் எடுத்துக்கோ..", என மாமாவை வாழ்த்திய மனோஜ், "உனக்கு அவளால என்ன ஆனாலும் பரவால்ல மாமா.. ஆனா அவளுக்கு உன்னாலையோ இல்ல வேற யாராலையோ..", என பேசிக்கொண்டு இருக்கையிலேயே அழைப்பு துண்டிக்கபட்டது.

"போடா பைத்தியமே.. பாடுன புரானத்தையே பாடிட்டு", மொபைலை அணைத்து அருகில் போட்டவன் அருகிலிருப்பவளை நோக்க... அவளோ இவை எதையும் கண்டுகொள்ளாதது போல் பாட்டு போட்டு விட்டு பார்வையை வண்டியின் முன்னே தொங்கி கொண்டிருக்கும் குட்டி குட்டி எமோஜி பொம்மைகள் மிது வைத்திருந்தாள்.

மெல்லிசை கீதம் ஒன்று இன்னிசையாக அங்கு பரவ.. அந்த மெல்லிய கீதத்துடன் இணைந்தது போல் பொம்மையை நோக்கி கொண்டிருந்த சுபித்ராவிற்கு மிக அருகில் ஒற்றை கரத்தை ஊன்றினான் விசோழன்.

அதை உணர்ந்து சட்டென அவனை நோக்கி திரும்பியவள் சிந்தையில் ஒன்றுமே இல்லாமல் வெறுமையாக இருக்க... மெல்ல அவளை நெருங்கினான் அவன்.

கொஞ்சம் கொஞ்சமாக இருவருக்கும் இடையில் இருந்த தூரம் மறைந்து கொண்டே வர.. தன்னை அறியாமலே பின்னோக்கி சாய்ந்த சுபித்ரா, சீட்டில் தலைமோதி அப்படியே இருக்க.. அவள் முகத்திற்கு நெராக வந்த விசோழன் அவளின் படபடக்கும் முகத்தை ரசித்தபடியே மற்றொரு கையை மெதுவாக அவளை நோக்கி உயர்த்தினான்.

தன் கன்னத்தை நோக்கி வரும் அவன் கரத்தை உணர்ந்தவளாய் கண்களை மூடிய சுபித்ரா அடுத்து உணர்ந்ததில் பட்டென இமைபிரித்து அவனை நோக்கினாள்.

அவனோ தான் வந்த வேலை முடிந்ததாய் சீட் பெல்ட்டை இழுத்து அதனுள் அவளை அடைத்து விட்டு தன் இருக்கையிலேயே அமர்ந்து விட.. அவன் இதழில் மட்டும் நீங்காத புன்னகை கூடாரமிட்டிருந்தது.

சுபித்ரா அவனை பார்த்தவண்ணமே இருக்க, சிரிப்புடனே அவளை நோக்கி திரும்பியவன், "என்ன பாப்பா பாக்குற... உன் சேஃப்டி முக்கியம் இல்லையா", என சீரியசாக கூறியதில் "பாப்பாவா... அப்டி கூப்புடுற உரிமைய உன் கிட்ட இருந்து பரிச்சு ஒன்ற வருஷம் ஆகுது டா எரும...", என அவளின் சீட்டில், தலையை தாங்குவதற்காக இருந்த பகுதியை கழற்றி அவனை அடிக்க தொடங்கினாள் சுபித்ரா.

"ஹே.. ஹே... வலிக்குது... சரி ஸாரி... ஸாரி சுபி மா.. பிளீஸ் பிளீஸ்.. நா சொல்லுறத கேளேன்...", என நகைப்புடன் அவள் கையில் இருந்ததை பிடுங்கி பின் சீட்டில் எரிந்தவன் அவள் கைகள் இரண்டையும் இருக்கமாக பிடித்து கொள்ள.. அப்போது தான் கவனித்தான் அவள் வலது கை விரலில் அழகாக மின்னிய தங்க மோதிரத்தை.

அதை பார்த்த கணம் அவன் முகத்தில் இருந்த மலர்ச்சி கானலாய் கரைந்திட..., "சுபி.. இத நீ இன்னும் கழட்டலையா?", என்றவன் அவள் விரலை வருடியதில் அவள் முகமும் மாறிபோனது.

சட்டென அவனிடத்தில் இருந்து தன் கரத்தை உறுவி கொண்டவள் முகத்தை வேறுபுரமாக திருப்பி கொள்ள.. அவள் கண்ணில் துளிதுளியாக நீர் சிந்தியது.
அவள் முகத்தை பார்க்காமலே அதை உணர்ந்த விசோழனின் முகமும் இறுக்கமாகவே இருக்க.. அவளிடம் எதுவும் பேசாமல் மௌனமாகவே வண்டியை இயக்கி சாலையில் செலுத்தினான்.

★★★


பொன்வானம் ஜொலிக்கும் அந்த மாலை பொழுதில், கடிகார முட்கள் மணி நான்கரையை தொட்டு முன்னோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.

பட்டு வேஷ்டி சட்டையில் முகம் கொள்ளா புன்னகையுடன் அந்த ஜமுக்காளத்தில் அமர்ந்திருந்தார் லட்சுமிதாஸ். அவருக்கு நேரெதிரே பெரிய பெரிய தாம்பூலங்களில் கவினின் குடும்பம் சார்பாக பல வகையான பழங்கள் இனிப்புகள் என அனைத்தும் நிரம்பி இருக்க.. எதிரில் கவினின் குடும்பமும் அவரை போலவே நிறைந்த புன்னகையுடன் அமர்ந்திருந்தார்கள்.

இரு குடும்பமும் நல்ல நேரத்தில் தாம்பூலத்தை மாற்றி கொள்ள... அதே நேரம் இரு குடும்பத்திற்கும் நடுநிலையாக இருந்த பெரிய மர நாற்காலியில் ஜோடியாக அமர்ந்திருந்தார்கள் கவின் வந்தானா.

தாம்பூலம் மாற்றிகொண்ட கையோடு ஒரு சரம் மல்லிபூவை கையில் எடுத்த செல்வி அதை வந்தனாவின் சிகையில் சூடிட... அடுத்த வாரம் ஒரு நன்னாளில் கவின் வந்தானா நிச்சயதார்த்த தேதி குடும்ப பெரியோர்களால் குறிக்கப்பட்டு விட்டது.

கல்வியே தனக்கு முதல் என கங்கணம் கட்டிக்கொண்டு திரிந்தவள் இப்படி மொத்தமாக கரைந்து போனதன் காரணம் என்னவாக இருப்பினும் அந்த காரணத்தின் மொத்த விடையாக அவளருகில் அமர்ந்திருந்தான் அவன்.. குறுகிய காலத்தில் அவளவனாக மாறவிருக்கும் கவின் தான்.

சந்திப்பின் காலம் வரும்

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro