
என்னருகில் நீ...இடையில் ஓர் உலகம்..
கலையாத கனவுகளில்
கண்முன்னே பனித்தோட்டம்...
உன் விரல் கோர்க்கும் ஆவலினில்
தடுமாறும் மனதோட்டம்...
சிலிர்க்கவிடும் தென்றல்களில்
உதிர்ந்து வரும் இலைதனை
ஒவ்வொன்றாய் கணக்கிட்ட
கொண்டாட்ட குறுஞ்சிரிப்பை
மனதோடு பதித்துவிட்டு
தினந்தோறும் காலம் கடத்தும்
இலட்சியத்தை நிச்சயமாய்
நித்தமும் நிறைவேற்றுகிறேன்....
உன் நினைவுகளை அழகாக்க!
எண்ணற்ற எண்ணங்கள்
இங்குமங்கும் பயணிக்க
கண்களின் பிம்பங்களோ
கற்பனைகள் களவாட
எனக்கும் உனக்கும்
இடைப்பட்ட உலகில்
காகிதப்பூக்களால்
கவிதைகள் உள் வைத்து
நீ வரும் பாதையில்
நெடுநாட்கள் நிரப்புகிறேன்...
தொடரும் தூரங்கள்...
தொலைவான பயணங்கள்....
எதிர்த்திசையில் நான் சிறகடித்தும்..
என் ஒவ்வொரு நொடிப்பொழுதையும்
உன்னிடம் பறிகொடுக்கும்
புதிர் மந்திரம் உணர்ந்தேனடி...
காதலின் காவலினை
ஆவலுடன் கட்டுக்கொள்ளும்
மாயக்கலையினை
உன்னிடம் கற்றேனடி...
உன் கரம் பற்றிக்கொள்ள
இவ்வுவகம் கடப்பேனடி...
ஜே....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro