💞 17 💞
தூக்க மாத்திரையின் வீர்யத்தில் அனைவரும் நன்றாக உறங்கி கொண்டிருந்தனர். பௌஸியா மற்றும் அம்ரீன் தான் விழித்து கொண்டிருந்தனர்.
பௌஸியா , " ஏய் அம்ரீன் , என்னடி எல்லாரும் இப்டி தூங்குறாங்க? "
அம்ரீன் சப்தமாக சிரித்து கொண்டே , "எல்லா நான் நேத்து பாலுல கலந்த தூக்க மாத்திரையோட வேலை ம்மா! " என்றதும் பௌஸியா அதிர்ந்தார்.
யாராவது வருகிறாரா? என்று பார்த்துவிட்டு , " எதுக்கு டி இப்டி பண்ண? " என பௌஸியா கேட்க
அம்ரீன் , " எல்லா ஷாஜிதாவோட உயிரை காப்பாத தாம்மா " என்றதும்
பௌஸிதா அதிர்ச்சியுடன் , " என்னடி சொல்ற ? ஷாஜிதாவுக்கு என்ன? " என கத்திய தன் அம்மாவின் வாயை பொத்தி
" அல்லாஹு அம்மா வாயை கழுவு! ஷாஜிதாவுக்கு ஒன்னுமில்ல. அவ நல்லா இருக்கு நா என்ன சொல்றேன் முழுசா கேளு! " என கூறிய அம்ரீனை அமைதியாக பார்த்தார் , பௌஸியா.
அம்ரீன் யாராவது வருகிறாரா? என பார்த்துவிட்டு பௌஸியாவின் காதில் நேத்து நடந்த அத்தனையும் ஒன்று விடாமல் கூறி முடித்தாள். பௌஸியா அத்தனையும் கேட்டு மலைத்து போய் நின்றார்.
பௌஸியா , "அம்மான்னு ஒருத்தி இருந்தும் அவளை அநாதையா விட்டுட்டேன். எனக்கு மன்னிப்பே கிடையாது " என அழுத தன் தாயை , " அம்மா விடு. இனி நீ தைரியமா இரு ம்மா! யாருக்கும் பயப்படாத. இந்த விஷயத்தை யார்கிட்டயும் சொல்லாத சரியா! " என அம்ரீன் கூற
பௌஸியா, " கண்டிப்பா அம்மு, இனி நானும் தைரியமா இருப்பேன். இதபத்தி நா யார்கிட்டயும் சொல்ல மாட்டேன். சரியா " என்றவுடன் அம்ரீன் தன் அம்மாவின் இரண்டு கன்னங்களையும் கிள்ளி , " இது தான் என் செல்ல அம்மா உம்ம்ம்மா! நா போய் காலேஜ்க்கு கிளம்புறேன். அப்றம் எம்டன் எழுந்தாரு ஆஆஉஉஉ ன்னு கத்த ஆரம்பிச்சிடுவாரு " என கூறிவிட்டு கல்லூரிக்கு கிளம்பினாள்.
ஏழு மணிபோல் அனைவரும் எழுந்தனர். தலை ஏனோ பாரமாக இருப்பது போல் உணர்ந்தனர். நேற்று அலைந்து திரிந்த காரணத்தால் இது ஏற்பட்டிருக்கிறது என நினைத்து கொண்டனர்.
அனைவரின் நிலையையும் பார்த்து அம்ரீன் தன் அறையில் விழுந்து விழுந்து சிரித்து கொண்டிருந்தாள். சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை அம்ரீனால்.
அதன்பின் கல்லூரிக்கு கிளம்பி கொண்டு வர , ஹசன் அம்ரீனை அழைத்து கொண்டு சென்றார்.
அனைவரும் சாப்பிட அமர்ந்தனர். ஃபிர்தவுஸ் மற்றும் யாசருக்கு விருந்து பலமாக இருந்தது. இருவரையும் மனநிறைவோடு பரிமாறினார்கள்.
சாப்பிட்டு முடித்ததும் , "ஏன் மா ஃபிர்தவுஸ் நீ ஏன் கல்யாணத்தை சீக்கிரமா வச்சிக்கனும் அடம்பிடிச்ச?" என அஸ்மா கேட்க , ஃபிர்தவுஸ் சிரித்து கொண்டே அதற்கான காரணத்தை சொன்னதும் மொத்த வீடும் அமைதியானது.
அஸ்மா , "இப்ப அந்த பொண்ணு தனியா எப்டி இருக்கு? எந்த பாதுகாப்பும் இல்லாம? "
யாசர் , " அந்த புள்ளை தன்னோட தாத்தா காசுல சாப்பிட பிடிக்காம தினமும் நோன்பு வச்சிட்டு வெறும் பழங்களை மட்டும் தன்னோட உணவா எடுத்துக்கிறா "
லத்தீப், "ம்ஹ்ம் பத்தொன்பது இல்லன்னா இருபது வயசு இருக்கும் அந்த பிள்ளைக்கு... கஷ்டப்படுற வயசா அது? சந்தோஷமா துள்ளி திரிய வேண்டிய வயசுல அந்த பிள்ளை எவ்வளவு கஷ்டத்தை அனுபவிச்சுட்டு. "
யாசர் , "அவளுக்கு பாதுகாப்பு கொடுக்க தா மாமா நேத்து சமீர் கிட்ட உதவி கேட்டோம்"
சமீர் , " ஆமா ப்பா அந்த பொண்ணுக்கு நான் தான் பாதுகாப்பு கொடுக்க போறேன்.. அதை பத்தி தான் நேத்து பூரா அலைஞ்சோம் "
அஸ்மா , " டேய் தங்கம் அந்த பிள்ளையை நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வந்திருப்பா நாம பாதுகாப்பு கொடுக்கலாம். "
சமீர் , " ம்மா அவ அத்த பொண்ணு அழைச்சதுக்கே அவள் போகலை. ஏன் ம்மா நீங்க வேற? "
முஸ்கன் , " அண்ணா அந்த பொண்ணோட போட்டோ இருக்கா? "
ஃபிர்தவுஸ், " நா காமிக்கிறேன் " என ஃபிர்தவுஸ் ஷாஜிதாவின் புகைப்படத்தை காட்ட அனைவரும் பார்த்தனர்.
முஸ்கான் மனதில் சமீரையும் ஷாஜிதாவையும் வைத்து ஜோடி பொருத்தம் பார்த்தாள். முஸ்கான் மனதில் , "இந்த தடியன் பொண்ணுங்க கேஸை எடுத்தது கிடையாது. அப்றம் எப்டி? சரி பொறுத்திருந்து பாப்போம். ஜோடி பொருத்தம் நல்லா தான் இருக்கு. இவங்க ரெண்டு பேரும் சேர்ந்தா நல்லா தான் இருக்கும். அல்லாஹ் இவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வையேன் ப்ளீஸ் " என வேண்டி கொண்டாள்.
சமீர் , " சரிப்பா நான் கிளம்புறேன் " என ஸலாம் வைத்துவிட்டு தன் வண்டியை எடுத்து கொண்டு கிளம்பினான்.
நேராக கல்லூரியின் வாசலில் தன் வண்டியை நிறுத்தினான்.
வகுப்பில் அத்தனை மாணவர்களும் வந்திருந்தார்கள். பேராசிரியர் தமிழரசனுடன் சமீரும் அப்படியே கெத்தாக உள்ளே வந்தான்.
மாணவர்கள் அனைவரும் எழுந்து நிற்க , பேராசிரியர் தமிழரசன் அனைவரையும் அமர சொன்னார். மாணவர்களும் அமர்ந்தனர்.
பேராசிரியர் தமிழரசன் , " மாணவர்களே! இவர் தான் சமீர். நம்ம துறைக்கு வந்திருக்க புது பேராசிரியர். இனி என்னோட சங்க இலக்கிய பேப்பர் மற்றும் தமிழ் இலக்கியங்கள் பேப்பரையும் இவர் தான் எடுப்பாரு " என்றதும் மாணவர்கள் , " ஐயா என்னங்க அய்யா சொல்றீங்க? நீங்களே எடுக்கலாம்ல "
தமிழரசன் , " இப்ப இவரு எடுக்க வேண்டிய சூழ்நிலை. அதான். இவரும் நல்லா எடுப்பாரு " என்று மாணவர்களை சமாதானப்படுத்தி சமீரை விட்டு சென்றார்.
ஆம் ஷாஜிதாவின் பாதுகாப்பிற்காக பேராசிரியர் என்ற போர்வையை போர்த்தி கொண்டு வந்திருக்கிறான் சமீர்.
நேற்று.....
வீட்டிலிருந்து கிளம்பிய சமீரின் மனம் ஷாஜிதாவை பற்றி நினைத்து கொண்டிருக்க அப்போது அவன் மனம் , " டேய் சமீர் பேசாம அங்க பேராசிரியரா வேலைக்கு சேர்ந்திரு. அதான் நீ இளநிலை தமிழ் முடிச்சிருக்கல. கண்டிப்பா சேர்த்துப்பாங்க. உண்மையை சொல்லி தான் சேரனும் " என கூறியதும் திரும்ப தன் வீட்டை நோக்கி வண்டியை செலுத்தினான்.
வீட்டிற்கு வந்ததும் அனைத்து சர்டிபிகேட்களையும் எடுத்து கொண்டு கல்லூரிக்கு சென்றான் , சமீர்.
கல்லூரிக்கு வந்த சமீர் கல்லூரி முதல்வரை பார்க்க அனுமதி வாங்கி கொண்டு உள்ளே சென்றான்.
சமீர் , " good morning sir"
முதல்வர். , " Good morning "
சமீர் , " என் பெயர் சமீர். நான் ஒரு பிரைவேட் கம்பெனில detective ஆபிசரா வொர்க் பண்ற. உங்க மூலமா ஒரு உதவி தேவைப்படுது"
முதல்வர் , " சொல்லுங்க சார் என்ன உதவி செய்யனும் "
சமீர் , " இந்த காலேஜ்ல தமிழ் டிபார்ட்மெட்ல பைனல் இயர்ல ஷாஜிதா ஒரு பொண்ணு படிக்கிறாள். " என்றவுடன் முதல்வர் தன் கணினியில் பார்க்க இருந்தது.
முதல்வர் , " எஸ் அந்த பொண்ணுக்கு என்ன? " என்று கேட்க சமீர் உண்மைகளை கூற தொடங்கினான்.
முதல்வர் , " i can't believe this... "
சமீர் , " நம்பி தா சார் ஆகனும் "
முதல்வர் , " சரிங்க சார் , இப்ப இதுலை நான் உங்களுக்கு எப்டி உதவுறது? "
சமீர் , " சார் எனக்கு தமிழில் கொஞ்சம் ஆர்வம் அதிகம். அதனால என்ஜினியர் படிக்கும் போது பக்கத்திவ அப்டியே பிஏ தமிழையும் அண்ணாமலை பல்கலை கழகத்தில் படிச்ச, இதை வச்சி தமிழ் துறையில ஆசிரியரா போனேனா அந்த பொண்ணுக்கு கொஞ்சம் பாதுகாப்பு கொடுத்த மாதிரி இருக்கும். " என்றதும் நீண்ட நேர யோசனைக்கு பிறகு
முதல்வர் , " ஒகே சார். எங்க ஸ்டூடட் நலம் கருதி உங்களை சேர்த்திக்கிறேன் "
சமீர் , " ரொம் நன்றி சார். எனக்கு சம்பளம் எதுவும் வேணாம். அப்பறம் இது என்னோட இந்த வேலைக்கு எங்க ஆபிஸ்லேருந்து பர்மிஷன் லட்டர் " என்று நீட்டியதும் முதல்வர் வாங்கி கொண்டார். அதன்பிறகு பேராசிரியர் தமிழரசனை அழைத்து விஷயங்களை கூற அவரும் சம்மதித்தார்.
சமீர் , "இதனால உங்களுக்கு எந்தவித பிரச்சினையும் வராம பாத்துக்க வேண்டியது என்னோட பொறுப்பு சார்" என்றதும்
முதல்வர் , "எந்த பிரச்சினை வந்தாலும் நாங்க எதிர்கொள்ள தயார். இந்த மாதிரி பிள்ளைங்களை தனியா தவிக்க விடுறவங்களுக்கு ஒரு பாடமா இருக்கட்டும். "
சமீர் , " நன்றி சார். இன்னிக்கி வெளிய கொஞ்சம் வேலையிருக்கு. அதனால முடிச்சிட்டு நாளைக்கு வந்து ஜாயின் பண்ணிக்கிறேன் "
முதல்வர் , " கண்டிப்பா " என்றவுடன் மென்மையாய் புன்னகை விட்டு வெளியே வந்தான்.
இன்று பேராசியராக சமீர். சமீர் அனைவரின் முன்பும் நின்றான்.
சமீரின் கண்கள் முதலில் ஷாஜிதாவை தான் பார்த்தது. கடைசி இருக்கையில் முதல் ஆளாக அமர்ந்திருந்தாள்.
யாரையும் பார்க்காமல் தனக்கு பிடித்தது போல் செயல்பட்டு கொண்டிருந்தன ஷாஜிதாவின் கண்கள். அதை பார்த்ததும் சமீரின் மனம் அலைபாய தொடங்கியது. அதைவிட ஷாஜிதாவின் ஹிஜாப் , இன்னும் கவர்ந்தது சமீரை.
சமீர் தன்னை நிதானபடுத்திக் கொண்டு , " நாளைக்கு நாம பாடத்தை பாத்துக்கலாம். இன்னிக்கி நம்மலை பத்தி தெரிஞ்சுக்குவோம். என் பெயர் சமீர். உங்களுக்கு சங்க இலக்கியங்கள் மற்றும் தமிழ் இலக்கியங்கள் நான் தான் எடுக்க போறேன். இப்ப உங்களை நீங்களே அறிமுகம் செய்து கொள்ளுங்கள் " என்றதும் அனைவரும் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர்.
ஷாஜிதா எழுந்து , " என்னோட பெயர் ஷாஜிதா " என்று அமர செல்ல
சமீர் , "எங்கிருந்து வரீங்க? "
ஷாஜிதா , " எங்கிருந்து வந்தா உங்களுக்கு என்ன? " என்றதும் சமீர் கண்களை விரித்து ஆச்சரியமாக பார்த்தான்.
சமீர் ," எல்லாரும் சொன்னாங்க நீயும் சொன்னா தெரிஞ்சிக்கலாம் தா கேட்டேன் "
ஷாஜிதா , " தெரிஞ்சு என்ன பண்ண போறிங்க? "
சமீர் , "ஒன்னும் பண்ண போறதில்ல "
ஷாஜிதா , " அப்ப அமைதியா இருங்க! " என முறைத்துவிட்டு அமர்ந்து கொண்டாள்.
அடுத்து அஜ்மல் தன்னை அறிமுகப்படுத்தி கொள்ள சமீர் , 'ஓஓ நீங்க தானா அஜ்மல். ஷாஜிதாவோட அண்ணன். ம்ஹ்ம் உனக்கு சேத்தே பதில் கொடுக்கிற கொஞ்சம் பொறுத்திரு ' என மனதில் நினைத்து கொண்டான்.
சமீர் , "உங்களுக்கு எந்த பிரச்சினை இருந்தாலும் எங்கிட்ட சொல்லுங்க. கண்டிப்பா என்னால உதவ முடியும். " என்றதும் மாணவர்கள் தலையசைத்தனர்.
சிறிதுநேரம் மாணவர்களுடன் பேசி கொண்டிருந்தான். அன்று நாள் அப்படியே முடிந்தது.
கல்லூரி விட்டவுடன், சமீர் ஷாஜிதாவை பின்தொடர்ந்தான். ஷாஜிதா முதலில் விடுதிக்கு சென்றாள்.
அங்கு தன் தொழுகையை முடித்துவிட்டு, மறுபடியும் நூலகத்திற்கு கிளம்பினாள், ஷாஜிதா.
ஷாஜிதா, கிளம்பியதும் அவளை அகிலன் அவளுக்கு தெரியாமல் பின்தொடர தொடங்கினான்.
சமீர் , யாசர் , நஃபீஸ் மற்றும் சூரஜ் நான்கு பேரும் அந்த விடுதி உரிமையாளரிடம் பேசி ஷாஜிதாவின் அறையை காண சென்றனர்.
ஷாஜிதாவின் அறையை திறந்து உள்ளே சென்றவர்களுக்கு அதிர்ச்சி. அங்கு பொருட்கள் என்று சொல்லி கொள்ளும் அளவிற்கு எதுவும்.
அங்கிருந்த மேசையில் ஒரு ஓரத்தில் குர்ஆன் மற்றும் முஸ்ஸல்லா இருக்க , மற்றொரு ஓரத்தில் கல்லூரி பை இருந்தது.
அதற்கு கீழ், தான் உண்ண வேண்டிய உணவாக பழங்கள் இருந்தது. அதற்கு பக்கத்தில் அதற்கு பக்கத்தில் ஷாஜிதாவின் துணிகளை அடக்கிய பை. அதை எடுத்து பார்க்க உடைகள் என்று மூன்று தான் இருந்தது. அதன்மேல் ஒரேயொரு வங்கியின் கணக்கு இணைப்பு புத்தகம் இருந்தது.
அதை மெல்ல திறந்ததான் சமீர். முதல் பக்கத்தில் ஷாஜிதாவின் புகைப்படம் இருக்க , சமீர் தன்னை அறியாமல் அப்புகைப்படத்தை மெல்ல வருடினான். அதற்கு மேல் திருப்பி பார்த்தான். நாற்பது லட்சம் அதில் இதுவரை எழுபது ஆயிரம் வரை தான் செலவு செய்திருக்கிறாள். மீதி பணம் அப்டியே இருந்தது.
மற்றவர்களும் அதை வாங்கி பார்க்க , " டேய் என்னடா இவள் இந்த பணத்தை எடுத்து செலவு செய்யாம இப்டி இருக்கா? " என வேதனை பட்டான் சூரஜ்.
யாசர் , " வைராக்கியம் அவ்ளோ வைராக்கியம்... "
நஃபீஸ் , " இந்த பொண்ணை எப்டியாவது காப்பாத்தனும் டா "
சமீர் , " ஷாஜியை என் உயிரை கொடுத்தாவது அவளை காப்பாத்துவேன். அவளுக்கு நான் இருக்க. எல்லா பொருளையும் எடுத்த இடத்தில வச்சிட்டு வாங்க போலாம். " என வெளியே சென்றான்.
நஃபீஸ் , " டேய்! சமீர் சொன்னதை கேட்டியா? "
சூரஜ், " ம்ம்ம் கேட்டேன் டா. அவன் இந்த பொண்ணை விரும்ப ஆரம்பிச்சிட்டா. "
யாசர் , "அவனுக்கு ஷாஜிதாவோட போட்டோவை பாத்ததும் பிடிச்சு போச்சு. ஷாஜிதாவை பத்தி சொன்னதும் இப்ப சொன்னானே என் உயிரை கொடுத்தாவது காப்பாத்துவேன் சொன்னான். "
நஃபீஸ் , " அப்ப சந்தேகம் இல்ல கன்பார்ம் he is in love with Shajitha "
சூரஜ் , "எதுவா இருந்தாலும் நாம அவன் கூட இருப்போம். சரி வா " என அனைத்தையும் எடுத்த இடத்தில் வைத்துவிட்டு அறையை பூட்டி கொண்டு கிளம்பினார்கள்.
அகிலன் சமீரிடம் இருக்கும் இடத்தை பற்றி சொல்ல " நா கொஞ்ச நேரத்தில வந்துடுவேன். அதுவரைக்கும் அவளுக்கு தெரியாம பாத்துட்டே இரு . சரியா "
அகிலன் , " சரி டா "
சமீர், விடுதியில் ஷாஜிதாவுக்கு தேவையான அத்தனை பாதுகாப்பையும் செய்து வைத்தான்.
அதன்பின் நூலகம் சென்றான். அகிலனை அனுப்பி வைத்துவிட்டு சமீர் உள்ளே சென்றான்.
ஷாஜிதா அமர்ந்திருக்கும் இடத்தை தள்ளி அமர்ந்திருந்தான் சமீர்.
ஷாஜிதா நாவல்கள் எடுத்து படித்து கொண்டிருந்தாள். சமீரும் அமைதியாக ஒரு துப்பறியும் நாவலை எடுத்து வாசிக்க தொடங்கினான்.
சமீர் வாசித்தாலும் அவ்வப்போது ஷாஜிதாவின் மேல் கவனமும் வைத்தான். அவன் மனமெல்லாம் ஷாஜிதாவை எப்படியாவது பாதுகாக்க வேண்டும் என்று.
ஐந்து மணிபோல் ஷாஜிதா விடுதிக்கு கிளம்பினாள். சமீரும் அவளுக்கு தெரியாமல் பின்தொடர்ந்தான்.
ஷாஜிதா விடுதிக்கு சென்ற பின்பும் சமீர் அங்கேயே சுற்றி கொண்டிருந்தான்.
இரவு எட்டு மணிபோல் சமீர் , தன் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.
சமீர் , சாப்பிட கூட மனம் வரவில்லை. எதோ அறைகுறையாக சாப்பிட்டு எழுந்து தன் அறைக்கு சென்றான்.
இதை கவனித்த முஸ்கான் மனதில் சிரித்து கொண்டு அமைதியாக இருந்துவிட்டாள்.
நாட்களும் மெல்ல நகர்ந்தது. ஷாஜிதா, பாதுகாப்பாக இருந்தாள். அதேபோல் , ஹசினாவை கண்காணிப்பதை தீவிரமாக இருந்தது.
ஷாஜிதா வீட்டில் பேசுவது அத்தனையும் தங்களது அலைபேசியில் பதிவு செய்து கொண்டனர்.
அதேபோல் யாருக்கும் தெரியாமல் ஷாரூக், சல்மா, அஹமது மற்றும் ரஹிமா அலைபேசியிலும் இந்த சீப்பை செலுத்திவிட்டாள், ஃபிர்தவுஸ்.
இப்போது யார் நினைத்தாலும் எதுவும் செய்ய முடியாது அந்தளவுக்கு ஷாஜிதாவிற்கு பாதுகாப்பு பலமாக இருந்தது.
♥️ தொடரும்♥️
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro