!! 12 !!
மதுரைக்கு வந்து இறங்கியே ஆதி நேரே அவள் வீட்டிற்குப் போகாமல் அவள் சென்ற இடம் மகிழினி வீடு தான்
பெருங்குடி .....சாவித்திரி இல்லம்
"ஹாய் சுசி மா எப்பிடி இருக்கீங்க என ஆதி அவர்களின் காலில் விழுந்து ஆசி பெற .."
" நல்லா இருக்கேன் ....ஆதி . நீ எப்பிடி இருக்கிறாய் , ஊருல இருந்து வந்த எப்போ ..வீட்டுல எல்லாரும் நலமா , என அவர் கேட்க ......"
"எல்லாரும் நல்லா இருக்காங்க அம்மா , எங்கம்மா லினியே காணல , வந்ததுல இருந்து பார்க்கவே முடியல என்று வீட்டுக்குள் எட்டி பார்க்க "
சுசீலா , சிரித்து விட்டு பதில் சொல்ல வாய் திறந்த பதில் சொல்லவத்துக்குள் அவன் வந்து பேச ஆரம்பித்துவிட்டான்
"ஏன் மகி கிட்ட மட்டும் தான் பேசுவீங்களா?எங்க கிட்ட எல்லாம் பேச மாட்டிங்களா மிஸ் ... ??"என்று அங்கு மகேஷ் வந்து நின்றான்.
"ஏனோ அவனைப் பார்த்த மாத்திரத்தில் ஆதிரைக்கு மகேஷை பிடிக்கவில்லை, ஏதோ ஒன்று மனதுக்குள் நெருடியது . அது என்னவென்று தான் அவளால் சரியாக சொல்ல முடியவில்லை ."
"சாரி அண்ணா, (அண்ணா என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்து) மகியைப் பார்த்து ரொம்ப நாளாச்சா அதுதான் அவளைப் பார்த்துட்டு போகலாம் வந்தேன் , உங்களை எப்படியும் கல்யாணத்தப்போ பார்த்துருப்பேன், அதுக்குள்ளே நீங்களே வந்துட்டீங்க" என்று அவனின் முகத்தில் அடித்தார் போல் பதில் பேசி விட்டு சாவித்திரிடம்
"அம்மா நான் கிளம்பனும் லினியே வர சொல்லுங்க சீக்கிரம் , அவளை பார்த்துட்டு அப்பிடியே நான் வீட்டுக்கு போகணும் " என அதிரை அவசர படுத்த
"சரி மா நீ போய் உள்ள உட்காரு இப்போ மகி வந்துடுவா பார்த்துட்டு போகலாம்" என்று ஆதியை உள்ளே அனுப்பி வைத்துவிட்டு வேற வேலையே பார்க்க சென்றார் ."
மகேஷின் முகம் கோபத்தில் சிவந்துவிட்டது, ஆதிரைக்கு எப்பிடியாவுது பதில் சொல்லி ஆக வேண்டும் என அவளை நெருங்க , அதற்குள் அவனை வழி மறைத்து தேவிகா தன்னுடைய அறைக்கு அழைத்து சென்றாள்.
சிறிது நேரம் அங்கே உட்காந்து இருந்த ஆதிரைக்கு பொழுது போகவில்லை வழக்கம் போல் ஒன்றுக்கும் தேறாத டிவி சேனலை மாற்றியே படி அமர்ந்து இருந்தாள் பொழுது போகாபோகமலைப்பிடியே எழுந்து லினியின் அறைக்குள் இருக்கும் புத்தகம் எடுத்து படிக்கலாம் என எழுந்து நேராக மகிழினியின் அறையை நெருங்கி உள்ளே போக எண்ணி அறையின் கதவில் வைக்க "ஐயோ மகேஷ் நீங்க ஏன் அவள் கிட்ட எதுக்கு பேசினீங்க?அவளும் மகியும் ரொம்ப க்ளோஸ்.. மகிக்கு ஏதாவதுன்னா இவ ஈசியா கண்டுபிடிச்சுடுவா.நீங்க உங்க பிரெண்ட வெச்சு ஒரு திட்டம் தீட்டினீங்களே என்னாச்சு? எனதேவகி கேட்க
இங்கு ஆதிரை முற்றிலும் அதிர்ந்து என்னது திட்டமா? என்ன டா நடக்குது இங்கே ? அப்போ நான் உள்ள போகலாமா? இல்லை வேண்டாம் , எது வரைக்கும் போறங்கன்னு பாப்போம். உள்ள போய் காரியத்த கெடுக்க வேண்டாம். ...வந்த சுவடு தெரியாமல் முன் ஹாலில் போய் உட்காந்து விட லினி காக காத்துகொண்டு இருந்தாள் , லினி வந்து உலுக்கவும்தான் தன்னுணர்வு பெற்றாள்.
" ஏய் ஆதிரை எப்போ வந்த ஊர்ல இருந்து , எவ்வளோ நேரம் உன்னைக் கூப்பிட்றது காதுல விழுகலையா , அப்பிடி என்ன யோசனை " என லினி கேட்க
" அதெல்லாம் ஒன்னும் இல்லை லினி ட்ராவல் டயர்ட் அவ்வளோதான் , நீ நீ எப்பிடியிருக்க என ஆதிரையும் கேட்டுவைத்தால்
" நலம் எல்லாம் விசாரித்த பின் திரு ப்ரொஜெக்ட் எல்லாம் எப்பிடி முடிச்ச , என்று கேட்ட லினிக்கு
"ம்ம்ம் அது எல்லாம் நல்ல படியா முடிஞ்சது, நாளைக்குப் பூரா ஷாப்பிங்டா ரெடி ஆக இரு , நா வரேன் என்று கிளம்ப ..
லினி அவள் கையைப் பிடித்து சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு ஆதியின் காதுகளில் இரகசியமாக "எனக்கு என்னமோ சரி இல்லாத மாதிரி இருக்குடா என்னையும் உன்னுடன் அழைச்சுட்டு போடா ப்ளீஸ்" என்று கெஞ்ச,
ஏதோ சரி இல்லை என்ற வார்த்தையில் அதிர்ந்து லினியைப் பார்த்த ஆதி ,பின் அவள் சொன்ன வார்த்தையில் சற்று நிதானித்து..
"ஹே செல்லம் அப்பிடி எல்லாம் ஒண்ணும் இருக்காதுடா நான் இருக்கேன் பார்த்துகிறேன் எல்லாம் சரி ஆகிடும், " என்னதான் வாய் லினிக்கு ஆறுதல் சொன்னாலும் ஆதியின் மூளை சற்று வேகமாக செயல்பட லினியிடம் சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்து தொலைபேசி எண்களை ஒற்றினாள்.
"ஹலோ கௌன் ஹை (யாரு அது). டேய் அரவிந்த், நான் தான் டா பேசுறேன் " என்று ஆதி சொல்ல ,
"டி ஆதி எப்படி இருக்க, என்ன ரொம்ப நாளா போன் காணோம் படிப்பு எல்லாம் எப்படி போச்சு?என்ன எனக்கு திடீர்ன்னு போன்? ஏதாவது ப்ரோப்ளமா.?"
"ஆமாண்டா என்று தான் கேட்டது ,அவளின் கேள்விகள் ,சந்தேகங்கள் , , விசாரிப்பு , குழப்பங்கள் எல்லாம் சொல்லி விட்டு , அவனிடம் ஒரு பொறுப்பை ஒப்படைத்து விட்டு வந்து சாப்பிட அமர்ந்தாள்.
மகேஷ் மகிழினி கல்யாணம் இதோ விடிந்தால் என்ற நிலையில் இங்கு திருமணத்து காண வேலைகள் வேகமா நடக்க அங்கு ஒரு மர்ம நாடகம் அரங்கேறத் துவங்க,
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro