Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

12

அவள் தந்த இனிமையான நினைவுகளோடே வீட்டிற்கு வந்தவன் அங்கே வரவேற்பு அறையில் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அமர்ந்திருக்கும் இளவரசியை பார்த்ததும் ஆனந்த அதிர்ச்சியோடு குட்டிமா என்ற கூவலோடு உள்ளே நுழைந்தான் .ராஜா நேற்று தான் கடைசி பரீட்சை வருவதால் ஊரிற்கு சென்றிருந்தான் .மாறன் குட்டிமா என்று அழைத்ததும் அவனை பார்த்தவள் முகத்தை திருப்பிக்கொண்டு வேறு புறம் அமர்ந்துகொண்டாள் .

அவளின் செய்கையில் சிரித்தவன் அவள் அமர்ந்திருந்த கதிரையில் அவள் அருகே அமர்ந்தான் .அவள் அந்த புறம் திரும்பியபடியே இருக்க அவனோ அவள் தோலனளை தொட்டு திருப்பியவன் "என்னவாச்சு என் தங்கத்துக்கு ஏன் இப்டி உக்காந்துருக்கீங்க ?"என்க

அவளோ அவனின் கையை தட்டி விட்டவள் "நா உன்கிட்ட பேச மாட்டேன் போ "என்க

அவனோ அவள் முகத்தை தன் ஒரு கை கொண்டு திருப்பியவன் "நீங்க பேசாம இருக்குற அளவுக்கு மாமா என்ன தப்பு பண்ணேண்டா செல்லம்? சொன்னா தான தெரியும் "என்க

அவளோ "சித்திரை திருவிழா ஆரம்பிச்சு ரெண்டு நாள் ஆச்சு வருஷம் தவறாம டெய்லி கூட்டிட்டு போவ இந்த வருஷம் வரவே இல்ல என்ன மறந்துட்டா போ "என்க

அவனோ கோபித்துக்கொண்டிருக்கும் தன் முதல் குழந்தையை அந்த பன்னிரண்டு வயதிலும் தன் கையில் தூக்கியவன் "அதுக்கென்ன மஹாராணி இன்னைக்கு கூட்டிட்டு போய்ட்டா போச்சு. சாரி குட்டிமா ரெண்டு நாளா ரொம்ப அலைச்சலா இருந்துச்சா அதான் மாமா கூட்டிட்டு போகல இப்போ போலாமா? "என்க அவளோ வழக்கம் போல் அவன்

கழுத்தில் கட்டி தொங்கியவள் "அய்ய்ய் சூப்பர் மாமானா மாமா தான் வா போலாம் "என்று கூட்டி செல்ல இத்தனை நேரமாய் இவர்கள் கலாட்டாவை சமயற்கட்டிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த மகாலட்சுமியும் சாந்தியும் ஒரு அர்த்த புன்னகை செய்து கொண்டனர் .

மஹாலட்சுமி "எப்போ இந்த இளவரசி வளருவாளோனு இருக்குமா இப்போவே மாறன் அப்டி பாத்துக்குறேன் அவளை .பொண்டாட்டி ஆனா எப்படி பாத்துக்குவான் "என்க

சாந்தியோ "என் பேத்தி குடுத்து வச்சவ டி "என்க மேகலா இவர்கள் இருவரையும் கேவலமாய் ஒரு பார்வை பார்த்தாள் பன்னிரண்டு வயது சிறுமியையும் இருபத்தி இரண்டு வயது ஆடவனையும் இணைத்து பேசுகிறார்களே என்று .

மேகலா "அத்தை என்ன சொல்றீங்க நீங்க மாறன் வயசென்ன? பாப்பா வயசென்ன ?"என்க

சாந்தியோ "ஏன் என்ன ஒரு பத்து வருஷ வித்யாசம் தான எனக்கும் என் வீட்டுக்காரருக்கும்லாம் பன்னெண்டு வயசு வித்யாசம் நாங்க கட்டிக்கலயா இல்ல பெத்துக்கலயா ?"என்க

மேகலாவோ "அத்தை நீங்களும் மாமாவும் அந்நியம் ஆனா இளவரசி.... மாறன் சின்ன வயசுல இருந்து தூக்கி வளர்த்த குழந்தை அவனுக்கு எப்படி அப்டி ஒரு எண்ணம் வரும் ?நீங்க முடிவு பண்ணா போதுமா அவன் விருப்பம் வேணாமா ?"என்க

கோபமான மஹாலட்சுமியோ "மேகலா சும்மா வாய் இருக்குன்னு ஏதாச்சு பேசாத.என் புள்ள அவனை தான் கட்டிக்குவா இதுல எந்த மாற்றமும் இல்ல அவனுக்கு விருப்பம் இருந்தாலும் இல்லேன்னாலும் இளவரசி தான் அவன் பொண்டாட்டி .இதுல ஏதாச்சு தப்பி நடந்துச்சு இந்த மஹாவோட இன்னொரு முகத்தை எல்லாரும் பார்க்க வேண்டி வரும் .உன் வேலைய மட்டும் பாரு இதை அவன்கிட்ட போய் பத்த வைக்காம "என்க

மேகலாவோ அவளை அலட்சியமாய் ஒரு பார்வை பார்த்தவள் "அவன் ஒன்னும் படிக்காத முட்டாள் கிடையாது உங்க இஷ்டத்துக்கு எல்லாம் ஆட்டி வைக்க .அப்பறோம் நா பத்த வைக்க வேண்டிய அவசியமே இல்ல அவன்கிட்ட .எங்கே நீங்க ரெண்டு பேரும் இதை அவன்கிட்ட பேசி பாருங்களேன் அப்போ தெரியும் அவனோட இன்னொரு முகம் ."என்றவாறு கையை கழுவியவள் அங்கே இருக்க பிடிக்காமல் சென்றுவிட்டாள் .

மகா அவள் சென்ற திசையையே வெறிக்க சாந்தியோ "அவ கெடக்குறா கூறுகெட்டவ. டாக்டருக்கு படிக்கச் வச்சு ராசாவாட்டம் பாக்க லட்சணமா எந்த கெட்ட பழக்கமும் இல்லாத என் பையன வேற ஒருத்திய ஆள விட்ருவேனா?அவன் சம்பாத்தியம் எல்லாம் நம்ம இளவரசிக்கு தான் "என்க

மஹாவும் தலை ஆட்டினாள் "சம்பாத்தியம் இல்லேன்னாலும் மாறனுக்கு தான்மா என் பொண்ணு .நான் தான் அந்த குடிகாரனை கட்டிக்கிட்டு சீரழியுறேன் ஆனா அவ ராணியாட்டம் இருக்கனும்"என்க

வெளியே தொலைக்காட்சியில் "நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை "என்ற பாடல் கசிந்துகொண்டிருந்தது .

சித்திரை திருவிழா அப்பொழுது ஆரம்பமாகி இருந்தது .

தமிழ்நாட்டில் புகழ்பெற்ற திருவிழாக்களில் முக்கியமானது மதுரையில் நடைபெறும் சித்திரைத்திருவிழா. ஆண்டு தோறும் சித்திரை மாதம் பவுர்ணமியை முன்னிட்டு மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறும்.

தினந்தோறும் மீனாட்சி அம்மனும் சுந்தரேஸ்வரரும் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி மாசி வீதியை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பர்.கற்பக விருக்ஷ் வாகனம், சிம்ம வாகனம், பூத, அன்ன வாகனம், கைலாச பர்வதம், காமதேனு வாகனம், தங்கப்பல்லாக்கு, வேடர் பறிலீலை, தங்கக் குதிரை வாகனம், ரிஷப வாகனம், நந்திகேஷ்வரர், யாழி வாகனத்தில் அம்மனும் அப்பனும் வலம் வருகின்றனர். சித்திரை திருவிழா நடைபெறம் பத்து நாட்களும் மக்கள் கூட்டம் மதுரை வீதிகளில் அலை மோதும் .

தலை நிறைய மல்லிகை மணக்க மதுரையில் இளம் பெண்களும், திருமணமான பெண்களும் தங்கள் குடும்பத்தினருடன் அம்மை அப்பனை தரிசிக்க கூடுவார்கள்.அப்பொழுது ஆங்காங்கே சவ்வு மிட்டாய் விற்பனையும் ,ராட்டினங்களும் அம்மனும் அப்பனும் வருகையில் வரவேற்குமாறு ஒயிலாட்டமும், மயிலாட்டமும்  கரகாட்டமும் என்று மதுரையே களைக்கட்டும் .

அன்று அன்ன வாகனம் நிகழ இருந்தது .அவளை கூட்டி சென்றவன் தன் தோளின் மேல் அவளை அமர வைத்து அவளிற்கு சாமி தரிசனத்தை நல்ல வகையில் கொடுத்து .அவ்வப்போது அவள் கேட்ட சவ்வு மிட்டாய் ,ஹைட்ரஜன் பலூன் அனைத்தையும் வாங்கி கொடுத்து ஒரு மகளின் சிரிப்பில் தந்தை அடையும் ஆனந்தத்தை அடைந்தபடி இருந்தான் மாறன் .அவளிற்கு பன்னிரண்டு வயதென்ன அறுபத்தி இரண்டு வயதானாலும் அவள் அவனிற்கு செல்ல மகள் தான் .

கையில் இருந்த குச்சி ஐஸ்சை சப்புக்கொட்டி சாப்பிட்டபடி வந்தவளை கிளி ஜோசியம் பாக்களையோ கிளிஜோசியம் என்ற குரல் கவனத்தை ஈர்த்தது . அங்கே வெள்ளை சட்டை வெள்ளை வேட்டியில் கழுத்து நிறைய பாசி மணி அணிந்தபடி நெற்றி நிறைந்த திருநீர் பட்டையுடன் அமர்ந்திருந்தார் கிளிஜோசியம் பார்க்கும் ஒருவர் .

அதை கண்டவள் மாறனின் கையை சுரண்டினால் "மாமா மாமா கிளிஜோசியம் மாமா பாக்கலாம் வா "என்க

இதிலெல்லாம் சுத்தமாக நம்பிக்கை இல்லாத மாறனோ "டேய்ய் இதெல்லாம் ஏமாத்து வேலை டா சும்மா வா "என்க

இளவரசியோ கண்களை சுருக்கியவள் "மாறப்பா ப்ளீஸ் மாறப்பா"என்க மாறனோ மொத்தமாக உருகிவிடுவான் .அவன் மறுத்து அவளிற்கு காரியமாக வேண்டுமென்றால் அவள் உபயோகிக்கும் ஆயுதம் இந்த மாறப்பா என்னும் அழைப்பு. எனில் எத்தனை தேவை இருந்தாலும் தன் அன்னையின் முன்பு மட்டும் இந்த அழைப்பை உபயோகிக்கமாட்டாள்.பிறகு யார் அவளிடம் விளக்குமாறு பூஜை வாங்குவது ?

அந்த அழைப்பில் உருகியவன் அந்த கிளி ஜோசியம் பார்ப்பவரிடம் அழைத்து சென்றான் .அவரோ "வாங்க பாப்பா உக்காருங்க உங்களுக்கு பாக்கணுமா ?"என்க

இளவரசியோ "எனக்குலாம் பாக்க வேணாம் என் மாமாக்கு பாத்து சொல்லுங்க "என்க

அவரோ அந்த கிளியிடம் திரும்பியவர் "அழகான இந்த தம்பிக்கு அழகான ஒரு சீட்ட எடுத்து போடு தாயி "என்று கூறியவர் அதை எடுக்க சொல்ல கிளியோ வெளியே வந்து ஒரு சீட்டை எடுத்துக்கொடுத்தது .

அதில் வந்திருந்ததோ சீதையும் ராமனும் .அதை பார்த்தவர் "தம்பி உங்களுக்கு உங்களுக்காக பிறந்த பெண் அந்த ராமனுக்கு ஜானகி போல உறுதுணையா இருப்பா .ஆனால் நீங்க சேருவதற்கும் சேர்ந்த பின்னும் பல பல பிரெச்சனைகள் இருக்கும் .உங்கள் உறவுகளாலேயே நீங்கள் அனைத்தையும் இழப்பீர்கள்.அதை சேர்ந்து இருவரும் சமாளித்தாள் உங்கள் வாழ்வை வளமாக்கும் "என்க மாறனோ அதை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை இளவரசியின் ஆசைக்காக அழைத்து சென்றவன் அவர்கள் கூறியதை காதிலேயே வாங்கிக்கொள்ளவில்லை .எனில் கடவுளோ அந்த ஜோஸ்யக்காரனின் வாக்கை பலிக்க செய்யும் முயற்சியில் இறங்கியதை அவன் எப்படி அறிவான் .

நாட்கள் அதன் போக்கில் செல்ல ராமன் மற்றும் சௌபாக்கியலக்ஷ்மியின் திருமண ஏற்பாடுகளும் துவங்கியது .ராமனும் அவனின் அத்தை பெண்ணும் சிறு வயதிலிருந்தே ஒருவர் மீது மற்றொருவர் விருப்பம் கொண்டிருக்க பதின் வயதில் அது காதலாகவும் மாறியிருந்தது .

இருவரும் தமது காதலை கைப்பிடிக்கப் போகும் ஆனந்தத்தில் இருக்க சௌபாக்கியலக்ஷ்மியோ எதையோ பறிகொடுத்ததை போன்றே சுற்றி வந்தாள்.அவள் வீட்டை விட்டு பிரிவதால் இப்படி இருக்கிறாள் என்று எண்ணிய பெற்றோர் அவளை கண்டுகொள்ளாமல் விட்டனர் .

சௌபாக்கியலக்ஷ்மி டைப் ரைட்டிங் படித்திருந்தவள் ஒரு வழக்கறிஞரிடம் பணி புரிந்துகொண்டிருந்தாள் .அன்று பணி முடிந்து வெளியே வந்ததும் சுற்றி முற்றி யாரும் இருக்கிறார்களா என்று பார்த்தவள் தன் நடையை கூட்டி அங்கே இருந்த ஒரு டெலிபோன் பூத்திற்குள் சென்றாள்.

தன் கைப்பையிலிருந்த ஒரு சீட்டை எடுத்தவள் 1 ரூபாய் நாணையத்தை அதில் போட்டு காகிதத்தில் இருந்த எண்ணை அதில் அழுத்தினாள்.

அந்த புறம் எடுக்கப்பட இவளோ அழ ஆரம்பித்தாள் "இன்னும் எத்தனை நாளைக்கு என்ன இப்டி நடிக்க சொல்றீங்க ? என்னால முடியலைங்க தயவு செஞ்சு இப்போவாச்சு வீட்ல வந்து பேசுங்க "

என்க அந்தப்புரம் என்ன சொல்லப்பட்டதோ "அப்போ என்ன சொல்றீங்க மனசுல உங்கள நெனச்சுட்டு வேற எவனையோ கல்யாணம் பண்ணிக்கணுமா ?"என்க

அப்புறம் ஏதோ சொல்லப்பட இவளோ ஆவேசமாய் தன் கண்ணீரை துடைத்தவள் "ஒன்னு வீட்ல இருந்து வந்து பேசுங்க இல்ல வீட்ல இருந்து என்ன கூட்டிட்டு போங்க இது ரெண்டும் நடக்கலேனா அன்னைக்கு கல்யாணம் நடக்காது எனக்கு இறுதி சடங்கு தான் நடக்கும் ஞாபகம் வச்சுக்கோங்க "என்றவள் அந்த போனினை வைக்க கண்களில் வஞ்சனை இன்றி கண்ணீர் சுரந்தது .

இன்று இவள் அழ நாளை இவளால் எத்தனை பேர் அழப்போகின்றனரோ?

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro