Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

கதை டீசர்

"முடியாது... முடியாது... முடியாது... என்னால இன்னொரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ முடியாது... என் மனசுல அவள் தான் இருக்கிறாள். அவள் மட்டும் தான் இருக்கிறாள்... " - ஷாலிக்.

"எத்தனை வருஷம் டா? இதோட மூனு வருஷம் ஆகுது! இங்க பாரு.. உனக்கும் உன் மாமா பொண்ணு இஃப்ராக்கும் நிக்காஹ் பண்ணலாம் முடிவு பண்ணி இருக்கோம் " - ஜமீலா

"அம்மி... இன்னிக்கே அவளைத் தேடி நான் கடலூருக்கு கிளம்புறேன். அவ்ளோ தான்... " - ஷாலிக்

-------------------
"அக்கா இன்னும் எத்தனை வருஷமா நீ இப்படியே இருக்க போற? " - தாஹா

"என்னோட மவுத் வர வரைக்கும் " - சாலிஹா

"அக்கா! இப்படிலாம் பேசாத க்கா! " - தாஹா.

"நான் என்ன பண்றது கூட தெரியலை தாஹா " - சாலிஹா

"பேசாம நீ அவரைத் தேடி ஊட்டிக்கு போயேன் " - தாஹா

"இது என் மனசுல ரொம்ப நாளா ஓடிட்டு இருக்க விஷயம் தான். போகவா? " - சாலிஹா

"அப்பறம் ஏன் டி ? இதை முன்னவே பண்ணலாம்ல? " - தாஹா

"ம்ஹூம். அம்மா அப்பா! " - சாலிஹா

"அம்மா அப்பா கிட்ட பேசி சம்மதம் வாங்க வைக்க வேண்டியது என் பொறுப்பு... சரியா? " - தாஹா

----------------

'இ...இத்தனை நாளா நா..நான் யாருக்காக காத்திருந்தேனோ அ..அவரை இன்னிக்கி நான் சந்திச்சிட்டேன்... ஆனா இ..இது கனவா? இல்ல நிஜமா? ' - சாலிஹா

'அவள் ஏன் என்னே பார்த்தும் பார்க்காத மாதிரி போனா? ஒ...ஒருவேளை எ..என்னேயே ம...மறந்திருப்பாளோ? ' - ஷாலிக்.

அவளைத் தேடி இவனும் ; இவனைத் தேடி அவளும் போகும் இப்பயணத்தின் தேடலுக்கு விடை கிடைக்குமா?

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro