Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

🌻 அழகி 86

ஜெயனும் வதனியும் அவர்கள் வீட்டில் இருந்து கிளம்பி ஊட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் இருக்கும் எல்க் ஹில் முருகன் கோவிலுக்கு வந்திருந்தனர்.

"ஐயோ ஜெயன்.... நீ கார்தா ஸ்மூத்தா ட்ரைவ் பண்ற.... ஆனா ஒனக்கு நல்லாவே பைக் ஓட்டவே தெரியல..... பைக்ல இப்டி எக்ஸ் எக்ஸ்ஸா போட்டு இத்தன கட் அடிக்காதடா! வாந்தி வருது எனக்கு!" என்று சொல்லி அவன் முதுகை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு தலையைப் பிடித்துக் கொண்டவளிடம்,

"இவ ஒருத்தி.... நேத்துல இருந்து வாந்தி வருது, வாந்தி வருதுன்னுட்டு! வாந்தி வந்தா வாயில இருந்து எடுறீ! வாயவும், வண்டியவும் கழுவிக்கலாம்; ஹில்ஸ்ல வண்டிய வளைக்காம எப்டி ஓட்டுறது?" என்று அவளிடம் கேட்டபடியே ஓட்டினான்.

மலையின் அழகு, பச்சை பசேல் என்ற தோற்றம், படிக்கட்டுகள், பெரிய முருகன் சிலை என ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டே வந்தவள் அவனைப் படுத்துவதை சிறிது நிறுத்தி விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டே படிகளில் ஏறத் தொடங்கி விட்டாள்.

"வர்த்தினி..... ஒனக்கு உள்ள வரப் புடிக்கலையின்னா பரவாயில்ல! நீ வெளியவே இரு; இவ்ள தூரம் ஏறி வந்ததுக்கு நான் போயி ஒருதடவ முருகன பார்த்து ஒரு கும்புடு போட்டுட்டு வாரேன்!" என்று சொன்னவனிடம்,

"இல்ல.... நானும் ஒங்கூட வருவேன்!" என்று பதிலளித்து அவன் கையைப் பற்றிக் கொண்டு கோவிலுக்குள் சென்றாள் வதனி.

சுவாமிக்கு பூக்கள் வாங்கிக் கொடுத்து, "ஒரு அர்ச்சன சாமி!" என்று சொல்லி முகுந்தன், ருத்ரன்,  கமலோத்பவன் மூவரையும் தன் பெயரில் வைத்திருக்கும் தேவர்களின் சேனாதிபதியை
மனதார எதோ ப்ரார்த்தித்துக் கொண்டிருந்தவனை வேடிக்கை பார்த்தவாறு அவனருகில் நின்று கொண்டிருந்தாள் ஜெயனுடைய தர்மபத்தினி.

அவளுக்கென்று பெரிதாக அவனைப் போல் ப்ரார்த்தனை எல்லாம் இல்லை. "எல்லாரையும் நல்லா வச்சிருங்க!" என்று ஏதோ கடமைக்கு ஒரு வேண்டுதலை வைத்தவள் அந்த முருகனின் சிலையை, கோவிலுக்குள் எரிந்து கொண்டிருந்த தீபத்தை, கோவிலின் பிரகாரத்தில் மாட்டப்பட்டிருந்த மணிகளை, ஊட்டி மலைகளின் அழகை, கோவிலுக்கு வந்திருந்த குழந்தைகளை என ஒவ்வொன்றாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளைப் பொறுத்தவரை அவள் தெய்வமாக ஏற்றுக் கொண்டது அவளுடைய சிறு வயதிலிருந்து அவள் பார்த்து பார்த்து வளர்ந்த கற்பகாம்பாளை மட்டுந்தான்..... மற்ற தெய்வங்களை எல்லாம் ஏதோ கோவிலுக்குள் வந்து விட்டதற்காக ஒருமுறை கைகூப்பி வணங்கி விட்டு செல்வாள் அவ்வளவுதான்!

தீபாராதனை முடிந்து முருகனை வணங்கி விட்டு வெளியே வந்தவர்கள் கோவிலின்  பிரகாரத்தில் அமர்ந்திருந்தனர்.

"ஓய்...... ஹெட்லைட்டு! இந்த எடம் பிடிச்சிருக்கா? கீழயே நின்னுட்டு நீ மட்டும் மலை ஏறி போயிட்டு வா ஜெயனுன்னு சொல்லுவன்னு நெனச்சேன். மாமா கூட நல்லபுள்ளயா கையப் புடிச்சுக்கிட்டு கோவிலுக்கு வந்துட்டீங்க!" என்று கேட்டவனிடம்,

"ம்ம்ம்... அமைதியா, அழகா
நல்லாயிருக்கு! நான் மட்டும்னா இங்க வர்றதுக்கு யோசிக்கலாம்.... பட் நம்ம ரெண்டு பேரும் சேந்து வர்றோம்ல?  என்னோட சேந்து கோவிலுக்குப் போகணும்னு நீ ஆசப்பட்டுருக்கலாம்..... அதான் ஒங்கூட நானும் வந்தேன்!"

"உள்ள சாமி பக்கத்துல பயபக்தியா நின்னு சீரியஸா எதையோ வேண்டிக்கிட்டு இருந்த... அந்த ஆச எதுவா இருந்தாலும், அப்டியே ஆகக்கடவது!" என்று ஒற்றை கை தூக்கி ஆசி வழங்கியவளிடம் குறுஞ்சிரிப்புடன்,

"பார்றா..... மல மேல இருக்குற வர்த்தினியம்மா நமக்கு ஆசிர்வாதமெல்லாம் தர்றாங்க! நல்ல விஷயந்தா! நான் சீக்கிரத்துல அப்பாவாகணும்னு தான் முருகங்கிட்ட மனு போட்டுக்கிட்டு இருந்தேன்!"

"அதுக்கு பைலட்டு நீ மட்டும் சரியா இருந்தா போதாதுடா மவனே..... ஒங்கூட இருக்குற கோ பைலட்டும் கொஞ்சம் சமத்தா இருக்கணும்; அவ இப்பத்தா சுச்சு எங்க இருக்குன்னு தேடி தடவி தொழாவிக்கிட்டு இருக்கா...... இந்த லச்சணத்துல நீங்க ரெண்டு பேரும் எப்ப டேக் ஆஃப் ஆகுறதுன்னு கேக்குறாம்மா!"

"அது மட்டுமில்ல.... அங்க குன்னூருல ஒக்காந்துக்கிட்டு ஒங்கம்மாகாரி என்னடான்னா பேரனோ பேத்தியோ வேணுங்குற ஆசயில ஒன்னைய ஸ்பெஷலா கவனிச்சுக்கிட்டு கெடக்கா....
அதுனால எங்கிட்ட வரங்கேட்டு ஒரு ப்ரயோசனமும் இல்ல; ஒம்பொண்டாட்டி கிட்டயே போயி நில்லுன்னு எங்கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தாரு! அதத்தான் ரொம்ப கவனமா கேட்டுக்கிட்டு இருந்தேன்!" என்று பாவமாக சொல்லி விட்டு புருவத்தை தூக்கி அவளைப் பார்த்தவனுடைய கண்கள் சிரித்துக் கொண்டு இருந்தன.

இதழ்கள் துடித்து, முகம் சுணங்கி, புடவைத் தலைப்பை கையால் இறுக்கி, கால்களை குறுக்கிக் கொண்டு அமர்ந்திருந்தாள் வதனி.

"ஓய்.... என்ன?" என்று சிரிப்புடன் கேட்டவனிடம்,

"ச்சூ..... சும்மாயிரு! கோவில்ல இருக்கோம்!" என்றாள் அதட்டலாக.

"எதுக்கு சும்மாயிருக்குறது? எந்திரி! வேற எங்கயாவது போய் பேசுவோம்!" என்று சொன்னவனிடம்,

"அதெல்லா ஒண்ணும் வேண்டா! வீட்டுக்குப் போகலாம்; முகில்ம்மா தேடுவாங்க!" என்றாள்.

"மத்தியானம் வெளிய சாப்ட்டுட்டு, சாயந்தரம் மரியம் ரிஸாட்டுக்குப் போயி நம்ம பசங்களுக்கு டீயும், பிஸ்கெட்டும் குடுத்துட்டு ராத்திரி சாப்பாட்டுக்குத்தா வீட்டுக்கு வருவோம். நீ சாப்ட்டு படு! எங்களுக்காக காத்துருக்காதன்னு சொல்லிட்டு வீட்டுச் சாவியவும் கையில எடுத்துக்கிட்டுதா வந்துருக்கேன்....!"

"அதுனால நீ இப்ப என்ன பண்ற? நா கூட்டிட்டுப் போற எடத்துக்கு ஒழுங்கா சேட்ட பண்ணாம வார!" என்று சொல்லி விட்டு சுவாமியைப் பார்த்து இன்னொரு முறை கன்னத்தில் போட்டுக் கொண்டவன் தன்னுடைய மனைவியை கைப்பிடித்து படிக்கட்டில் இறங்கிக் கொண்டிருந்தான்.

"ஒக்காரு.... நிக்கலச பாக்க
லவ்டேலுல க்ருப்பால் பங்களாவுக்கு போகப் போறோம்! இருவது நிமிஷம் ஆகும்... மொணங்கிட்டே வரக்கூடாது பாத்துக்க! எதப் பேசுறதா இருந்தாலும் வண்டிய நிப்பாட்டுன பெறவு பொறுமையா ஒக்காந்து எங்கிட்ட பேசு! வண்டிய ஓட்டுக்கிட்டு போவயில பின்னால ஒக்காந்து திட்டிக்கிட்டே வராத.... தெரியுதா? நல்லா பக்கத்துல வாயேன்டீ!" என்று சொன்னவன் தன்னுடைய வண்டியைக் கிளப்பினான்.

"வண்டி ஓட்டும் போது ஏன் பேசக்கூடாதுங்குற? நான் அப்டித்தான் பேசுவேன். இவன் ப்ரொஃபஷனுக்கு கார் ஓட்டுறதில்லாம இப்ப வாயாலயே ப்ளைட் ஓட்டப் போயிட்டான்; இதுல நான் சுவிட்ச் எங்கன்னு தெரியாம தடவிக்கிட்டு இருக்கனாம்...... பேசுவடா நீயி! இதுவும் பேசுவ.....!" 

"இதுக்கு மேலயும் பேசுவ! பேசுறதுக்கு ஒனக்கு என்ன சொல்லியா குடுக்கணும்? கல்யாணம் ஆகி ஒருநாள்தா முடிஞ்சிருக்கு! அதுக்குள்ள கொழந்த வேணுமாம்! இவ்ளோ அர்ஜெண்ட்டா ஒனக்கு குழந்த வேணும்னா எங்கயாவது கடையில தான் போயி ஆர்டர் தான் குடுத்துட்டு வரணும்!" என்று அவன் பைக்கின் பின்னால் அமர்ந்து முணங்கிக் கொண்டு வந்தவளிடம், 

"ஏய்.... பின்னால ஒக்காந்துக்கிட்டு என்னடீ மொணங்குற? எனக்கு ஒண்ணுமே கேக்கல; 
ஒரு விஷயத்த பண்ணாதன்னு சொன்னா அதத்தான்யா சரியா பண்ணி வைக்குறா!" என்று சொன்னவன் தன்னுடைய சற்றே வயதான நண்பன்
நிக்கலெஸ்ஸை பார்க்க லவ்டேலை நோக்கி வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்தான்.

அழகி வருவாள்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro