Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

🌻 அழகி 84

"ஏய்... என்ன? ஒழுங்கா படியில ஏறி வர மாட்டியா நீயி? அதுக்கு கூடவா வலிக்குது ஒனக்கு?" என்று முயன்று அவளிடம் சிரித்தவனிடம் ஒரு பெருமூச்சுடன்,

"ஆமா.... வலிக்குது! தூக்கிட்டுப் போ! கல்யாணத்துக்கு முன்னாடி எல்லாம் என்னைய கீழ இருந்து மேல வரைக்கும் தூக்கிட்டு வந்த..... ஏன் இப்ப செய்ய மாட்டியா?" என்றாள் விரித்த கைகளை கீழே இறக்காமல்.

"செய்ய மாட்டேன்னு யாரு சொன்னது? நான் வருத்தமா இருக்கேன்னு நெனச்சு என்னிய சமாதானம் பண்றதுக்காக தான் நீ இதக் கேக்குறியோன்னு தோணுச்சு!" என்று சொன்னவனுடைய முகத்தை ஏறிட்டவள்,

"ஷ....ப்பா! என்னைய தூக்கிட்டு நடன்னு சொல்றதுக்கு நா உங்கிட்ட இவ்ளோ நேரம் பேசணும்னா, அது எனக்கு வேண்டவே வேண்டாம். உங்கூட இப்டி போராடுறதுக்கே சாப்ட முட்டதோசையெல்லாம் டைஜெஸ்ட் ஆகிடும் போலிருக்கு! தள்ளு; நானே போய்க்குறேன் மேல.....!" என்று சொன்னவளுக்கு வழியை விடாமல் அவளருகில் வந்தவன் அவளுடைய இரு அக்குளுக்கு அடியிலும் கைகொடுத்து அவளுடைய உடலை தூக்கி தொடையை இறுக்கிப் பிடித்து தன்னுடைய வயிற்றில் இறுக்கிக் கொண்டான்.

"ஹையோ.... இது நல்லாயிருக்கே! குழந்தைங்க அவங்களோட டெட்டி பியரெல்லாம் தூக்குவாங்கல்ல... அந்த மாதிரி ரொம்ப கம்பர்டபிளா இருக்குது புருஷா! மேல போனவுடனே எறக்கி விட்ராத!" என்று சொல்லி அவனுடைய தோள்பட்டையை இறுக்கிக் கொண்டவளிடம்,

"பெறவு.... எப்ப எறக்கி உடணும்? கழுத்தப் புடிச்சு தொங்குறதுக்கு நீ இன்னொன்ன பெத்துக் குடுத்ததுக்கு அப்புறமா வேணும்னா எறக்கி உடட்டா? நெஜமா ஒனக்கு இன்னிக்கே எல்லாத்துக்கும் சம்மதந்தானா?" என்று கேட்டவனுடைய இடப்பக்க மார்பில் தன்னுடைய பற்தடத்தை பதித்தாள் வர்த்தினி.

"........ஷ்.... ஏய்.... பேசிக்கிட்டு இருக்கும் போதே எதுக்குடீ கடிச்சு வச்ச? வலிக்குது எனக்கு....!" என்று வலியில் முகத்தை சுளித்த படி மார்பை தடவிக் கொண்டவன், அவன் இடுப்பில் இடுக்கிக் கொண்டிருந்த தலையணைகள் இரண்டையும் கீழே போட்டான்.

"காதல்லயும் கடன்லயும் மிச்சம் வைக்காத! என்னத்த எடுக்கணுமோ எடுத்துக்கோ; குடுக்குறதுன்னா குடுத்துடுன்னு ஒரு பெரிய மனுஷி அட்வைஸ் பண்ணியிருக்காங்க மிஸ்டர் புருஷா! அதான் எனக்கு என்ன வேணுமோ, அத நா எடுத்துக்கப் போறேன்......!" என்றாள் அவனுடைய கண்களுக்குள் ஊடுருவி பார்த்தபடி.

"அட சரிடீ! எடுத்துக்குறதுன்னா அந்தா தட்டு நெறய தின்பண்டந்தா இருக்குதுல்ல..... அதுல எதையாவது எடுத்துக்குறது..... அத உட்டுட்டு கடிக்குறதுக்கு என் நெஞ்சு தானா கெடச்சது ஒனக்கு?" என்று கேட்டவன் அவளை மெதுவாக பெட்ஷீட்டில் அமர வைத்து தலையணையை அருகருகில் போட்டான்.

"எனக்கு உன்னை தான் டேஸ்ட் பண்ணி பாக்கணும் போல இருக்கு!அதுக்குன்னு நரமாமிசம் சாப்டுற ரேன்ஜீக்குல்லாம் இல்ல.... சும்மா அங்க இங்கன்னு செல்லமா கடி தான்.... பயந்துடாத!" என்று சொன்னவளிடம்,

"ஒரு முடிவோடத்தான்டீ இருக்க!" என்று கேட்டு சிரித்துக் கொண்டான் ஜெயன்.

அவன் நெஞ்சில் வதனியின் பற்கள் பதிந்து அவ்வளவு பலமான சேதாரம் ஒன்றும் ஏற்படவில்லை. மதியம் அனுமதியில்லாமல் அவளது உள்ளாடையில் அவன் கை வைத்திருந்ததற்கு பரிசாக இப்போது தன்னுடைய கணவனின் நெஞ்சில் ஒரு தடத்தை போட்டு விட்டிருந்தாள் வதனி. அதை ஒரு வருத்தமாக சொல்லி அவளிடம் அனுதாபம் பெற முயற்சித்துக் கொண்டிருந்தான் வர்த்தினியின் கடங்காரன்.

"பேசிக்கிட்டே இருந்தா எல்லாம் வேலைக்காகாது ஒங்கிட்ட! ஒன்னைய விட்டா சம்மதமா இல்லையா, வருத்தமா இல்லையா, கோபமா இல்லையான்னு ராத்திரி முடியுற வரைக்கும் இதுவா அதுவான்னு கேள்வி கேட்டுட்டே இருப்ப.....! ஷர்ட் பனியன எல்லாம் கழட்டு!" என்று சொன்னவளிடம்,

"ஏய்..... என்னடீ? இப்பவே சட்டைய கழட்டணுமா?" என்று திகைத்த படி கேட்டான் ஜெயன்.

"இப்பவே கழட்டாம? இட்ஸ் அவர் பர்ஸ்ட் நைட்! இங்க என்ன செய்யணும்னு ஒனக்கு தெரியுமா தெரியாதா? இல்ல ஐயப்பா ஐயப்பா ஐயோயப்பான்னு ஒருநாள் பாடிட்டே வந்து வாசல்ல விழுந்து சில்ற பொறுக்குனியே? அந்த மாதிரி பஜன எதுவும் பண்ற ப்ளான்ல இருக்கியா?" என்று கணவனிடம் கிண்டல் குரலில் கேட்டாள்.

"என்ன செய்யணுங்குறது எனக்குத் தெரியும்.... பாவம் ஒனக்குத் தான் ஒண்ணுந் தெரியாதுன்னு நெனைக்குறேன். பஜனயெல்லாம் ஒரு ஓரத்துல தள்ளி வையி.... என்னத்தயோ எடுத்துக்கப் போறேன்னு பெரிசா வாய் பேசுன..... என்ன வேணுமோ எடுத்துக்க! எனக்கு ஒண்ணும் ஒன்னைய மாதிரி ஸ்டார்ட்டிங்க் ட்ரபிள்லா இல்லப்பா!" என்று தோள் குலுக்கியவனின் முகத்தைப் பார்த்து கோப மூச்சுகளை வெளியேற்றியவள் தலையணையை கீழிருந்து எடுத்து அவனது மார்பின் மேல் போட்டுக் கொண்டு அவனுடைய உடம்பின் மேல் ஏறி தலையணையில் வாகாக தலை வைத்துக் கொண்டாள்.

"டேய்.... யாருக்குடா ஸ்டார்டிங்க் ட்ரபிள்? நா ஒனக்கு லவ் பைட்டே குடுத்துட்டேன், ஆனா நீ என்னை இன்னும் கட்டிக் கூட பிடிக்கல. அப்ப நீ சொன்ன ட்ரபிள் ஒனக்கா? எனக்கா?" என்று கேட்டவளிடம் ஒரு எரிச்சலடைந்த உச்சுக்கொட்டலுடன்,

"நல்லா சட்டவட்டமா மர பெஞ்சுல ஏறி படுக்குற மாதிரி படுத்துக்கிட்டு
பேசிக்கிட்டே இருக்கியே தவிர வேலைய பாக்க மாட்டேங்குறியேம்மா? இத்தாதன்டி வெயிட்ட ஒடம்புல தாங்கி எனக்கு ஒடம்புதா வலிக்குது! உன் ஊரு வந்துருச்சு. கீழ எறங்கிக்குறியா கொஞ்சம்?" என்று கேட்டு தலையை உலுக்கிக் கொண்டான் ஜெயன்.

ஒன்பது மணிக்கு பவர்கட் என்றால் எட்டே முக்காலில் இருந்து நிமிடத்திற்கு ஒரு முறை மணியை மணியைப் பார்த்து, எப்போது மின்சாரம் தடைப்பட்டு விடுமோ என எதிர்பார்த்து அவசர அவசரமாக வேலைகளை முடிப்பது போல, இவள் எதையோ பெரிதாக தரப்போகிறாள் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து இதோ இந்த நிமிடம் வரை வீணாக வாய் தான் பேசிக் கொண்டிருக்கிறாள்! இதில் உடம்பில் ஏறி படுத்துக் கொண்ட இம்சை வேறு!

"உடம்பு வலிக்குதா....? போனா போவுது. கொஞ்சம் மசாஜ் பண்ணி உடட்டுமா ஒனக்கு?" என்று கேட்டு வதனி தன்னுடைய மென்கரத்தால் ஜெயனுடைய உடம்பை பிடித்து விட்டாள்.

தோள்பட்டை, மார்பு, கழுத்து, இடுப்பு, தொடை என உடம்பின் ஒவ்வொரு பாகமாக அங்குலம் அங்குலமாக அழுத்தம் தர துவங்கியிருந்த மனைவியின் விரல்கள் சுகமான இதப்பிடிப்புகளாக தெரியாமல் முழு அவஸ்தையாக தெரிந்தது ஜெயனுக்கு.

"ஒனக்கு குட்டியா தொப்ப இருக்குதான்! அத ஒத்துக்கோ!" என்று அவ்வப்போது அவனை வாரி
கிண்டல் செய்து சிரித்தவள் இப்போது அவனுடையது கட்டுக்கோப்பான தேகமே என்று சூடம் கொளுத்தி சத்தியம் செய்வாள் போலிருந்தது.

சிக்ஸ் பேக் உடம்பாக இல்லாமல் அவனது சதைக் கோளங்கள் ஒவ்வொன்றும் உழைப்பால் கிண்ணென்று திடம் பெற்றிருந்தன.

"வர்த்தினி போதும்! ஒடம்புக்கு உள்ள.....எல்லாம் கைய உடாத......டீ!" என்று திணறி தன்னை கண்களால் விழுங்கிய கணவனின் கண்களை வெகு அருகில் பார்த்த வதனி பல மாத ரகசியத்தை சொல்வோமா வேண்டாமா என்று யோசித்த படி
தன்னுடைய மனதோடு போராடிக் கொண்டிருந்தாள்.

"ஜெயன்.....!"

"ம்ம்ம்.....!"

"என்னன்னு கேளுடா?"

"என்ன?"

"நான் ஒங்கிட்ட என்னைக்காவது உன் கண்ணு ரொம்ப அழகாயிருக்குன்னு சொல்லியிருக்கேனா?" என்று கேட்டவளிடம் உள்ளே தகிக்கும் உணர்வில் "ம்ஹூம்!" என்றான் ஜெயன்.

"அப்ப இன்னிக்கு சொல்லிடட்டுமா? ஒன்னோடது அழகான கண்ணுப்பா.... இந்த காலண்டர்ல கண்ணனுக்குல்லா இருக்குமே? அந்த மாதிரி..... பெரிசா, அட்ராக்டிவா.... அழகான எக்ஸ்ப்ரெஸிவ் கண்ணு ஒனக்கு!
என்னடா நான் சொல்லிக்கிட்டே இருக்கேன்; நீ பாட்டுல ம்ம்ம்.... ம்ம்ம் னு அனத்திட்டே இருக்க!" என்று கேட்டு அவன் நெஞ்சில் ஒரு குத்து குத்தினாள்.

"மனுஷனோட ஃபீலிங் என்னான்னு புரிஞ்சுக்காம கண்ணு அழகாயிருக்கு, கழுத அழகாயிருக்குன்னு கத பேசிட்டு இருக்குது பாரு! ஒன்னத்தயுமே பண்ண தெரியாட்டியும் தெளிவா இருக்குற மாதிரி என்னா ஒரு நடிப்பப் போடுறா..... ஆனா இவ பண்ற வேலையும் ஒருமாதிரி நல்லாத்தான் இருக்கு!"

"இம்புட்டு நாளா செவனேன்னு கெடந்தவள நீ என்னத்தயோ சொல்லி உசுப்பி உட்டு இவ இப்ப என்னிய படுக்கப்போட்டு ஒருமாதிரி டார்ச்சர் பண்ணிக்கிட்டு இருக்கா அமுதாம்மா....!" என்று மனதிற்குள்ளாக அவன் தாயிடம் பேசிக் கொண்டிருந்தான் ஜெயன்.

"இன்னிக்கு மட்டும் தான் வெறும் மசாஜ்! இனிமே வாரா வாரம் முகத்துக்கு பேஸ் பேக் போட்டுக்கும் போது தலைக்கு பாதாம் ஆயில் தேய்ச்சுக்கணும்! கண்ணுக்கு பஞ்சுல ரோஸ் வாட்டர் முக்கி கொஞ்ச நேரம் கட்டிக்கணும்! அப்பதான் ட்ரைவிங்னால ஒனக்கு ஒடம்பு ரொம்ப ஹீட் ஆகாது!" என்று சொன்னவளிடம்,

"வேணுங்குற சூடு இப்பவே கெளம்பிடுச்சு.... கொஞ்சம் உருண்டு கீழ போறியா?" என்று முணங்கினான் ஜெயன்.

"அதுக்குள்ளவா..... சும்மா நான் கைய தான வச்சேன்? இன்னும் எவ்ளோ வேல இருக்கு?" என்று கேட்டவள் அவனுடைய காது மடலில் பற்களால் முத்தமிட்டு கடித்து வைத்தாள்.

"அய்யய்யோ.... இந்த பிசாசு என்னைய ஒருவழியாக்குறாளே?" என்று தவித்த ஜெயன் அவளை கீழே கிடத்தி விட்டு அவர்கள் இருவரின் மேலும் போர்வையால் மூடினான்.

"ஏ....ன்டா!" என்று சலித்துக் கொண்டவளிடம்,

"ம்ம்...! மொட்டமாடியில தரையில கெடக்கோம்; அது நியாபகத்துல இருக்குதா.....? நம்ம தல மட்டும் வெளிய தெரிஞ்சா போதும். நீ
செய்றதெல்லாம் செய்யி..... ஆனா போர்வைக்கு அடியில இருந்து சரியா?" என்று சொன்னவன் அவளுடைய புறமாக பக்கவாட்டில் திரும்பி படுத்துக் கொண்டான்.

"என்ன ஜெயன் ஒருமாதிரி கெறங்கிப் போய் கெடக்க? இந்த மாதிரி டச்சிங்ஸ், ஸ்மூச்சஸ்லயே யூஸ்யுவலா ஒனக்கு மூடு வந்துடுமா?" என்று கேனத்தனமாக ஒரு கேள்வி கேட்டவளிடம், 

"ஆமா.... டெய்லி நாலு தடவ இந்த மாதிரி வேற வேற பொம்பளப்புள்ளங்கள கட்டிப் பிடிச்சிக்கிட்டு படுத்து கெடந்துருக்கேன் பாரு; யூஸ்யுவலா மூடு எப்ப வரும், எத்தன மணிக்கு வரும், என்ன செஞ்சா வரும்னு கேளு! லூசு ஹெட்லைட்டு..... நீ ஒடம்புல படுத்துட்டு ஒரசுன ஒரசுல ஒம்புருஷனுக்கு எப்பவோ  பத்திக்கிச்சு! இனிமே கொஞ்சநேரம் நான் ஒன்னைய எடுத்துக்கட்டுமா?" என்று மெல்லிய குரலில் கேட்டவனுடைய கைவிரல்களை பற்றிக் கொண்டவள் அவன் மார்பில் சாய்ந்து கொண்டு,

"கொஞ்சம் மெதுவா ஸ்டெப் பை ஸ்டெப் ஒன்னொன்...... ம்..... ம்ஹூம்!" என்று வார்த்தைகளை முடிக்க முடியாமல் அனற்றிக் கொண்டிருந்தாள் வதனி.

"என்னைய நீதான் இன்னும் கட்டிப்பிடிக்கவே இல்ல.....!" என்று குற்றம் சாட்டியவளை அணைத்து அவளுடன் உருண்டு அவளை கீழே தள்ளி அவளுடைய உடலில் அங்கங்கு குட்டி முத்தங்கள் வைத்துக் கொண்டிருந்தான் ஜெயன்.

"மனுஷனோட பொறுமைய முடிஞ்ச அளவுக்கு ஆட்டிப் பாத்துட்டு ஒனக்கு ஸ்டெப் பை ஸ்டெப்பா போணுமாடீ பொண்டாட்டி?" என்று கேட்டு அவளுடைய புடவையைக் களைந்தவன் தன்னுடைய உடைகளை எப்போதோ கழற்றி ஒரு ஓரத்தில் வைத்திருந்தான்.

அவள் அவனுடைய கண்கள் அழகாக இருப்பதை சொன்னது போல் அவனும் வதனியின் அந்தரங்க பாகங்களை முத்தமிட்டு பூக்க வைத்தான். நாணம் கொண்டு அவனுடைய இதழ்கள் தன் உடம்பில் மேற்கொண்டு மேயாமல் தடை செய்ய வந்தவளின் விரல்களுக்கும் ஐந்து முத்தங்கள் என்ற பாராட்டு சான்றிதழ் வழங்கினான்.

கட்டுக்கடங்காமல் பாய நினைத்து ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் புதுப்புனலை நான் உனக்கு நீ போகும் வழியை சரியாக காட்டுகிறேன் என்று சொல்லி அதில் குதித்து விளையாடிக் கொண்டிருந்த மீன்குட்டியின் நிலையாகிப் போனது வதனியுடைய நிலை.

"........ஹா! பொறுமையா ஜெயன்! மெதுவா.... டேய் சொல்லிக்கிட்டே இருக்..... ம்!" என்று அவள் பேசும் எதையாவது போதெல்லாம் அவனுடைய கவனம் சிதறியதால் மனைவியுடைய இதழை மொத்தமாக நானே வாய்க்குள் வைத்துக் கொள்கிறேன் என்று சொல்லி பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டான். அவன் வேகத்தால் மிரண்டவளை இதமாக நெஞ்சுக்குள் பொத்தி வைத்துக் கொண்டான்.

"என்னடா.... அதுக்குள்ள என் செல்லப் பொண்டாட்டிக்கு மொகம் சொணங்கிப் போயிடுச்சு! பர்ஸ்ட் நைட்ல என்னென்னத்தல்லாம் பண்ணனும்னு இப்பயாவது கொஞ்சமா புரியுதாடீ எம்மக்கு பொண்டாட்டி?" என்று அவள் நெற்றியில் முத்தமிட்டு கேட்டவனிடம்,

"ம்ம்ம்.... ஓகேதான்! பட் கொஞ்சமா இது வேண்டாங்குற மாதிரியும் தோணுது; முகில்ம்மா பயமா இருக்கான்னு கேட்டாங்க. அப்ப இல்லன்னு தான் சொன்னேன். ஆனா இப்ப கொஞ்சம் பயமா.....யிருக்கு ஜெயன்!" என்று சொன்னாள் வதனி.

"இது பயம் இல்லம்மா.... மொத தடவயா எம்முன்னால வெறும் உடம்பா இருக்குற அருவருப்பு! நம்ம லைஃப்ல பர்ஸ்ட் டைம் செக்ஸ எதிர்பார்த்து காத்திருந்தோம்னா இந்த விஷயத்துல ஆர்வமும் ஆசையும் இருக்கலாம்.... இல்ல இதெல்லாம் கண்டிப்பா கடந்து போகணுமாங்குற மாதிரி மனநிலையில இருந்தோம்னா அருவருப்பும், பயமும் ஏற்படுறது சகஜந்தான் வர்த்தினி....! இன்னிக்கே எல்லாம் நடக்கணும்னு  ஒரு அவசரமும் இல்ல.... நாம நீ சொன்ன மாதிரி கொஞ்சம் கொஞ்சமா ஒருத்தர ஒருத்தர் உடம்பால தெரிஞ்சுக்க முயற்சி பண்ணலாம். சரியா? டீ குடிக்குறியா?" என்று கேட்டவனிடம் ஒட்டுமொத்த திகைப்புடன்,

"யாருடா நீ? ஒனக்கு கொஞ்சங்கூட எரிச்சலோ, கோபமோ வரலையா ஜெயன்?" என்று கேட்டாள் வதனி.

"ம்ம்ம்..... எரிச்சல், கோபம் எல்லாம் வந்து? ஏற்கனவே பம்மிக்கிட்டு இருக்குற ஒன்னைய போட்டு பெராண்டி, இவனோட சங்காத்தமே வேணான்டா சாமின்னு சொல்றதுக்கா ஹெட்லைட்டு? அப்டியெல்லாம் எங்கயும் ஓடிடலாம்னு நெனைக்காத. என் லவ்வாலயே ஒனக்கு நா கேட் போடுவேன் பாத்துக்க!" என்று சொன்ன தன்னுடைய கணவனை மார்பில் அணைத்து இறுக்கிக் கொண்டாள் வர்த்தினி.

"ஏய்.... இப்பவே கொன்னுடாதடீ! மூச்சு முட்டுது எனக்கு!" என்றவனிடம் புன்னகைத்து தலையாட்டியவள், 

"வா..... டீ குடிச்சுட்டு நம்மளோட பர்ஸ்ட் டைம இன்னொருக்க முதல்ல இருந்து ப்ரெஷ்ஷா ட்ரை பண்ணலாம்!" என்றாள் தெளிவான குரலில்.

"இல்லம்மா... இன்னிக்கேன்னு நமக்கு ஒண்ணும் அவசரம் இல்ல!" என்று சொன்னவனிடம்,

"இல்ல! எனக்கு அவசரந்தான்!" என்றாள் தீர்மானமாக.

நாற்பது நிமிடங்கள் கழித்து அவளுடைய உடலின் மேல் மூச்சிரைக்க கவிழ்ந்திருந்த ஜெயன் அவளது சிவப்பேறிய கண்களின் நீரை தன் முத்தத்தினால் துடைத்துக் கொண்டிருந்தான்.

"ஸாரிடா.... நாந்தான் சொன்னேன்ல, இது கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும்னு..... ரொம்ப வலிச்சதா?" என்று கேட்டவனிடம் "அதெல்லாம் விடு.... ஜெயன்! எனக்கு ஒண்ணு கேக்கணும்? ஆம் ஐ ஸ்டில் எ வெர்ஜின்?" என்று கேட்டவளின் உதட்டில் தன் உதட்டை ஒற்றி எடுத்தவன்,

"இல்லடா தங்கமே! நீங்க இப்ப உடம்பாலயும் ஜெயனோட பொண்டாட்டி ஆகிட்டீங்க!" என்று சொல்ல புன்னகையுடன் தன்னுடைய கணவனை அணைத்துக் கொண்டாள் வதனி.

"எதுக்குடீ இந்தப்பாடு? எங்க போயிடப் போவுது நமக்கான வாழ்க்க? நெஜமா சொல்லு! ஒனக்கு பர்ஸ்ட் நைட்னா என்னன்னு ஒண்ணுமே தெரியாது தான?" என்று கேட்டு கன்னம் கிள்ளியவனிடம்,

"அதெல்லாம் நெறய தெரியும்!" என்று அரைகுறை தூக்கத்தில் பதில் சொல்லி விட்டு அசதியில் அவன் மார்பிலேயே முகம் பதித்து தூங்கியிருந்தாள் ஜனமேஜயனின் அழகி.

அழகி வருவாள்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro