Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

🌻 அழகி 67

"வந்ததும் ஒண்ணுமே சொல்லாமன்னா?  இப்ப நா என்ன சொல்லணும்? வர வர நீ என் பொறுமைய ரொம்ப சோதிக்குற ஹெட்லைட்டு! இதெல்லாம் ஒண்ணும் சரியில்ல பாத்துக்க!" என்று சொன்னவனிடம் ஆச்சரிய பாவத்துடன்,

"இன்னிக்கு நீ புடவையில அழகா இருக்க வர்த்தினின்னு சொல்லுவன்னு நினைச்சேன்! அதச் சொல்லாம நீ ஏதோ சரியில்லன்ற! என்ன சரியில்ல?" என்று கேட்டு அவனை வம்பிழுத்தாள் வதனி.

"ஒனக்கு அவ்ளோதான்டீ மரியாத ஏஎம் அம்மா!" என்று மூக்கினால் அனல் மூச்சு விட்டவனைப் பார்த்து உதடு பிதுக்கியவள்,

"மிஸ்டர் கடங்காரன்! ஒங்க கிட்ட நிறைய மரியாதய நான் கேக்கவேயில்லயே? எவ்ளோ குடுக்குறீங்களோ அவ்ளவே போதும் ஸார்!" என்று சொல்லி விட்டுப் புன்னகைத்தாள்.

"இப்டியெல்லாம் பேசிட்டு இருந்தா வேலைக்காகாது. நீ ரூமுக்குள்ள வா மொதல்ல!" என்று சொல்லி விட்டு அவளை அறைக்குள் தள்ளிக் கொண்டு போனவன் அறையின் கதவை மூடிவிட்டு அவளை ஒருமாதிரியாக பார்த்தான்.

"ஜெ.....யன்! நான் உங்கிட்ட இருந்து ஒரே ஒரு கிஸ் தான் கேக்கணும்னு நெனச்சேன்! வேற ஒண்ணுமில்ல!" என்று உள்ளுக்குள் போய் விட்ட குரலில் சொன்னவளிடம்,

"உங்களுக்கு ஒரே ஒரு முத்தம் வேணுமின்னா, நீங்க அந்த அளவுக்கு மட்டும் பேசியிருக்கணும் மல மேல இருக்குற மேடம்; நான் பாத்து ரசிக்கணுமுன்னு தான கஷ்டப்பட்டு இம்புட்டையும் செஞ்சீங்க? அதுக்கென்ன.... ரசிச்சுட்டாப் போச்சு!" என்று சொல்லிக் கொண்டிருந்தவன் கீழிருந்து வந்த காலிங் பெல்லின் ஒலியால் எரிச்சலுடன் உச்சுக்கொட்டினான்.

ஜெயன் மாடியை அவனது  உபயோகத்திற்காக பயன்படுத்திக் கொண்டிருந்த நேரத்தில் சவாரி இருக்கும் நேரங்களில் அவனை கீழிருந்தே முகில் எழுப்பி விடுவதற்காக வைக்கப்பட்ட அழைப்புமணி..... வெகுநாட்களுக்கு பிறகு அவனை இப்போதும் தொந்தரவு படுத்துவதற்காகவே அடிக்கப்பட்டு இருக்கிறது.

"பாத்தியா..... கீழயிருந்து அமுதாம்மா நம்மள கூப்ட்டுட்டாங்க....... நீ எப்டி பேசுனாலும் நான் இனிமே பயப்பட மாட்டேனே?" என்று சொல்லி புருவம் உயர்த்தியவளிடம் நக்கல் கலந்த சிரிப்புடன்,

"நீயே பயப்பட மாட்டியின்னா, நான் மட்டும் எதுக்குப் பயப்படணும்....? இரு அமுதாம்மாட்ட கொஞ்சம் அள்ளி உட்டுட்டு வாரேன்!" என்று சொல்லி விட்டு அவளுடைய அலைபேசியில் இருந்து முகிலமுதத்திற்கு பேசினான்.

"ஹலோ; ஆமா..... அமுதாம்மா! இவ அழுது அழுது நல்லா மூக்க தக்காளி கணக்கா சிவப்பாக்கி வச்சுருக்கா; கண்ணையே திறக்க முடியலன்னுட்டு  இப்பத்தான் நா வந்து எழுப்பி விட்டதுக்கப்புறம் அரக்கண்ண தொறந்து எழுந்திரிச்சு ஒக்காந்துருக்கா. இன்னும் பல் தேய்ச்சு, குளிச்சு..... அதுக்கொரு இருவது நிமிஷம் ஆகிரும்னு நெனைக்குறேன்! நீ சாப்டு.... சரி; மன்னிப்புத் தான? அவ கிட்ட நான் பெரிசாவே கேட்டுக்குறேன்.....!"

"....என்னது நானா? நான் மொட்டமாடியில தான் நின்னுட்டு இருந்தேன்; நீ பெல் அடிச்ச சத்தம் கேட்டு தான் உள்ள வந்தேன்! பேசிட்டு கதவ சாத்தி வச்சுட்டு வெளிய போயிடுவேன். அவ எப்ப பாத்ரூமுக்குள்ள போயிட்டு பல் தேய்ச்சு, குளிச்சுட்டு வெளிய வருவாளோ.... அதெல்லாம் எனக்கெப்டி தெரியும்? ஒரு நிமிஷம் இரு.....!"

"என்னம்மா வர்த்தினி....? நீ வெளிய வர இன்னும் கால் மணி நேரமாகுமா? சரி பொறுமையா குளிச்சு முடிம்மா.... கேட்டியா? அந்தப்புள்ள வெளிய வரவும் நான் உன் சார்பா அதுட்ட மன்னிப்பு கேட்டு, ரெண்டு வார்த்த எதமா பேசி கூட்டிட்டு வரேன். வச்சிடவா?" என்று அசராமல் அள்ளி விட்டவனின் பேச்சைக் கேட்டு அறைக்குள் இருந்தபடியே ஆவென வாயைப் பிளந்தாள் வதனி.

ஹாலில் இருந்து அறைக்குள் எட்டிப் பார்த்தவனிடம்,

"ஏய்.... என்னடா நீ? அமுதாம்மாட்ட  நீ பாட்டுல இஷ்டத்துக்கு கதையா சொல்லிட்டே போற? மணியடிச்சு சாமி கும்புட்டோமே இப்ப? அது கூடவா கேக்காது அவங்களுக்கு?" என்று  கேட்டவளை கதவின் புறமிருந்து சற்று நகர்த்தி அறைக்குள் வந்தான் ஜெயன்.

"ஆமா.... நீ அடிச்சது பெரிய ஆலயமணி பாரு..... அப்டியே அது குன்னூருல இருக்குற எல்லோரோட வீட்டுக்கும் கேக்குறதுக்கு? அதெல்லாம் ஒண்ணும் கேட்ருக்காது!"

"எப்புடி நாங்க....? சொல்ற கதையெல்லாம் சொல்லி எல்லாத்தையும் சரி பண்ணிட்டோம்ல.....? இன்னும் இருவது நிமிஷத்துக்கு பெல்லு, கில்லுன்னு எந்த தொல்லையுமில்ல; அப்புறம் நீ இந்தப் பொடவயில ரொம்ப அழகாயிருக்க....!" என்று சொன்னவன் அவளது தோளில் தன் உதட்டைக் குவித்த போதே வதனி புடவையில் குத்தியிருந்த பின்னை அவிழ்க்கும் வேலையை தன் விரல்களுக்கும்  கொடுத்தான்.

இரண்டு வேலைகளும் ஒரே சமயத்தில் நடந்ததால் அவனுடைய இரண்டாவது செய்கையை வதனி சரியாக கவனிக்காமல் போய் விட்டாள்!

புடவை முந்தானை மார்பில் இருந்து சரிந்ததும் பதறிப் போய் அதைப் பற்றிக் கொண்டவள், அருகில் கண்சிமிட்டி நின்றவனைப் பார்த்து முறைத்தாள்.

"டேய்.... ஸாரிய கழட்டுனது உன் வேல தான....?" என்று கோபமாக கேட்டவள் சற்றே சுதாரித்துக் கொள்ளும் முன்னரே அவள் இடுப்பில் கைவைத்து இழுத்து மொத்த புடவையையும் அவிழ்க்க ஆரம்பித்திருந்தான் ஜெயன்.

"ஜெயன்...... ப்ளீஸ்! ஏன் இப்டி பண்ற?
உன் முன்னால இப்டி நிக்குறதுக்கு  எம்பாரஸிங்கா இருக்கு!" என்று சொல்லி அவன் முன் தன் முதுகு காட்டி நின்று கொண்டிருந்தவளின் முதுகுத் தண்டு வடத்திலும் இரு விரல்களால் கோலம் போட்டுக் கொண்டிருந்தான்.

அவளுடைய பின்புற வெற்றுடம்பில் தன் இதழ்களை பதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன்,

"வேண்டாம் ஜெயனு... பொதகுழிக்குள்ள போயி வாய உட்ராத! பெறகு ஏடாகூடமா எதாவது ஆகிடும்..... இந்தப்புள்ள ஒம்மேல வச்ச நம்பிக்க மல்லாக்க கவுந்துடும்.....!" என்று மனம் கொடுத்த எச்சரிக்கையை ஏற்றுக் கொண்டு அவளிடம் மெல்லிய குரலில்,

"அன்னிக்கு அவேவீட்ல அவசரத்துல இத சரியாப் பாக்கல வர்த்தினி.... எவ்ளோ சூப்பரா இருக்கு ஒன்னோட இடுப்போட ஷேப்பு!" என்று சொல்லி அவள் இடையை தன் கைகளால் இறுகப் பற்றிக் கொண்டான்.

"என்ன ஆச்சு ஜெயன்? கொஞ்சம் டிஸ்டர்ப் ஆகிட்டியா?" என்று கேட்டவளிடம்

"ஆக மாட்டாய்ங்களா பெறகு?
பொம்பளப் பொறுக்கி..... ஏன் இப்டி நம்ம கிட்ட தப்பான வேலையெல்லாம் செய்யுறான்னு நீ யோசிக்கலயா வர்த்தினி?" என்று கேட்டவனிடம்,

"ஏன் இப்டி பண்றன்னு யோசிக்குறேன் தான் ஜெயன்.... ஆனா நீ சொன்ன மாதிரி தப்பால்லாம் நெனக்கல!" என்றாள் சுவரைப் பார்த்த படி.

"ஏன் அப்டி யோசிக்கல? அதான் தனியா ஒக்காந்து நெறய யோசிப்பியேமா நீ? ஒங்கிட்ட ஒண்ணு கேக்கட்டுமா?" என்று சொல்லி ஐந்தாறு நொடிகள் தயங்கியவன் அவளிடம்,

"வந்து.....ஒன்னைய கல்யாணத்துக்கு அப்புறம் நான் மட்டுமா பாக்குற மாதிரி பாக்கணும்னு ஆசையாயிருக்கு வர்த்தினி! இப்ப நா ஒங்கிட்ட இத கேக்குறது தப்பாம்மா?" என்று கேட்டவனிடம் இல்லையென தலையசைத்தாள் வதனி.

காதலிக்கும், வருங்காலத்தில் இல்லறம் நடத்தப் போகும் பெண்ணிடம் இப்படியெல்லாம் ஆசை வராமல் இருந்தால் தானே ஆச்சரியப்பட வேண்டும்? ஒரு இளைஞனாக, ஆணாக, தன் காதலனாக அவன் கேட்பதை தருவதில் என்ன தவறு இருக்கிறது என்று நினைத்தவள் திரும்பி அவன் முகத்தைப் பார்த்தாள்.

"இப்பவும் நீ எங்கிட்ட கேட்டத நெனச்சு எனக்கு கோபமோ பதட்டமோ வரலடா...... இது கொஞ்சம் புதுசா..... ஒருமாதிரி வெட்கமாயிருக்கு அவ்வளவு தான்! ஒம்மேல நம்பிக்க இல்லன்னா தான நீ கேக்குற படியெல்லாம் நடந்துக்குறதுக்கு நான் யோசிக்கணும்! ஒன்னைய நீயே ரொம்ப தப்பா நெனச்சுக்காதப்பா! கல்யாணம் பண்ணிக்கப் போற ரெண்டு பேருக்குள்ள இந்த விஷயம் ரொம்ப பெரிய தப்பில்லங்குற மாதிரி தான் எனக்குத் தோணுது!" என்று சொன்ன படி அவன் முன் திரும்பி தன்னுடைய ப்ளவுஸ், பெட்டிகோட் வரை கழற்றி விட்டு உள்ளாடைகளின் கொக்கியில் கைவைக்க அவள் செயலை வேகமாக கையைப்பற்றி நிறுத்தி, 

"போதும் வர்த்தினி!" என்று அவளிடம் கூறி தடுத்தான் ஜெயன்.

"ஒன்னோட ஒடம்பு ரொம்ப அழகாயிருக்கு வர்த்தினி..... ஆனா அது எனக்கு ஒரு மாதிரி நடுக்கத்த குடுக்குது.....! இந்த ஃபீல எப்டி ஒனக்குப் புரிய வைக்குறதுன்னா
நம்மள பாம்பு கடிச்சுட்டா அது வெஷமே இல்லாத பாம்பா இருந்தாலும் ஒரு மாதிரி கண்ணக் கட்டிக்கிட்டு வேர்த்து விறுவிறுத்து சாகப்போற மாதிரி வருமே..... அந்த மாதிரி இருக்கு!"

"இத விட ஒங்கிட்ட அழகா இருக்குறது எம்மனசுக்கு ரொம்ப இதத்த குடுக்குறது என்ன தெரியுமா?"

"ஜெயனுக்கு எதெல்லாம் சரின்னு யோசிக்குற ஒம்மூளையும்.... ஜெயனுக்காக என்ன வேணும்னா செய்யலாம், அவங்கூட சேந்து இருக்குறதுன்னா ஒரு வீட்ட தொடைக்கக் கூட செய்யலாம்னு நெனக்குற ஒம்மனசும்தா இப்டி குட்டிச்செல மாதிரி இருக்குற ஒஉடம்ப விட கொள்ள அழகு!" என்று தீர்மானமான அவனுடைய முடிவைச் சொன்னான்.

கிட்டத்தட்ட அவன் முன்னால் அவள் அரை நிர்வாணமாக நின்று கொண்டிருந்த போதும் தடுமாறாமால் அவள் கண்களைப் பார்த்து பேசினான்.  அவனுடைய கண்களில் தெரிந்த நேர்மையே வதனியை மற்றொரு முறை அவனிடம் காதலில் விழ வைத்தது.

"அழகாயிருக்கன்னு ஒரு வார்த்த சொன்னியா?" என்ற அவளின் எதிர்பார்ப்புக்கு தான் அவனுடைய இத்தனை நேர உடம்பு மூளை மனது பற்றிய இந்த ஆராய்ச்சி என்று நினைத்தவள் அவனை கர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"என்னம்மா இப்டிப் பாக்குற? நீதான உனக்காக தான் பொடவ கட்டியிருக்கேன். அத அழகா இருக்குன்னு சொன்னியான்னு கேட்ட.....?"

"என் வர்த்தினி வெளிய எப்டி இருந்தாலும் மனசால அவ ரொம்ப பெரிய அழகி தான்..... சொல்ல நெனக்குற விஷயத்த சரியா சொல்லிட்டனான்னு தெரியல ஹெட்லைட்டு.... ஆனா நா சொல்ல நெனச்ச விஷயம் இவ்ளோதான்!" என்று சொன்னவனிடம்,

"ஓ..... அப்ப அக்கார்டிங் ட்டூ ஜெயன்ஸ் ஸ்டேட்மெண்ட், நான் மனசால தான் அழகி! ஒடம்பால ஒன்னை பெரிசா இம்ப்ரஸ் பண்ணல! அப்டித்தான?"
நான் இப்டி நிக்குறத பாத்து உனக்கு ஒண்ணுமே தோணல இல்லயா ஜெயன்?" என்று சிறு சிரிப்புடன் கேட்டவளை கொலைவெறியோடு முறைத்தவன்,

"வர்ற கோவத்துல தூக்கிப் போட்டு ஏதாவது பண்ணிருவேன்டீ ஒன்ன...... ஒங்கூட இப்டி நிக்கயில சாவுற மாதிரி கண்ணக் கட்டிக்கிட்டு வருதுன்னு சொல்றேன். அதப் புரிஞ்சுக்காம இம்ப்ரெஸ் பண்ணலயா.... வெளக்கெண்ண பண்ணலயான்னு கேட்டு உயிர வாங்கிக்கிட்டு!" என்று சொன்ன படி ஒரு பெருமூச்சுடன் தன் தலையைக் கோதிக் கொண்டவன் அவளது காதுமடலில் ஒரு அவசரமுத்தத்தை பதித்து விட்டு அவளிடம், 

"சீக்கிரமா கீழ எறங்கி வா! எனக்குப் பசிக்குது!" என்று அவளிடம் சொல்லி விட்டு சென்றான்.

"ஏன்டா இப்டி ஒவ்வொரு விஷயத்துலயும் பயங்கரமா பெர்ஃபார்ம் பண்ணி ஒம்மேல
பைத்தியம் பிடிக்குற மாதிரி செய்யுற? கல்யாணத்துக்கு முன்னால நீ ஸ்டெடியா இருக்கியோ இல்லையோ.....? நான் உன் மேல விழுந்து ஒன்ன பொரண்டி வச்சு இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாம் ஜெயன்னு கேக்குற சிச்சுவேஷன் வந்துராம இருக்கணும்!" என்று முணங்கிய வதனி  தனக்குள்ளாக சிரித்துக் கொண்டு அறையில் அவன் அவிழ்த்து வீசியிருந்த புடவையை மறுபடி எடுத்துக் கட்டிக் கொண்டு முகில்ம்மாவை பார்க்க இறங்கினாள்.

அழகி வருவாள்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro