Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

🌻 அழகி 65

"நான் அமுதாம்மாட்ட எதுவுமே கேக்கல வர்த்தினி. நேரா இங்க தான் வர்றேன். வெளிய இருந்தப்ப ஒனக்கு போன் போட்டேன்; அப்போ நீ போனையும் எடுக்கல..... வீட்லயும் ஒன்னைய காணும்முனதுமே ஏதோ பிரச்சனன்னு புரிஞ்சுடுச்சு! என்ன ஆச்சும்மா...? எங்கிட்ட சொன்னா தான நாம பிரச்சனைய சரி பண்ண முடியும்?"

"அத உட்டுட்டு இப்டியே விம்மிக்கிட்டு கெடந்தா...... இது ஒருமாதிரி நல்லாத்தான் இருக்கு; ஆனா நீ அப்பப்ப என் தோள்பட்டையில ஒன்னோட மூக்க மூக்க ஒரசுறியா? அதான் எனக்கு ஒருமாதிரி மூடாகுது!" என்று சொன்னவனை தன் சின்னக் கண்களால் எரித்தாள் வதனி.

"கண்ணாடி போடாம என்னைய மொறைக்கும் போது தான் நீ ரொம்ப அழகாயிருக்கடீ ஹெட்லைட்டு!" என்று சொன்னவன் தன்னுடைய கைக்குட்டையை பேண்ட் பாக்கெட்டில் இருந்து எடுத்து அவளது முகத்தை துடைத்து விட்டான்.

"விடு... நான் என்ன சின்னக் கொழந்தயா? எனக்கே மொகத்த துடைச்சுக்கத் தெரியும்!" என்று சொல்லி தன்னுடைய முகத்தை ஆட்டி நெளிந்து கொண்டு
முரண்டு புடித்தவளிடம்,

"ஆமா.....ஒனக்கு எல்லாம் தெரிஞ்சு அஞ்சாறு ஆச்சு! அங்கயும் இங்கயும் நெளியாம ஒரு எடத்துல ஒக்காருடீ..... இல்லன்னா மூக்க கடிச்சு வச்சுடுவேன்!" என்று மிரட்டி அவளை அமைதிப்படுத்தினான் ஜெயன்.

கால்களை விரித்து சுவரில் சாய்ந்து அவன் அமர்ந்திருக்க அவன் மார்பில் சாய்ந்து அவளும் கால்களை நீட்டியிருந்தாள்.

அவளைத் தேடிக் கொண்டு மாடிக்கு வந்தவனின் இடையைப் பற்றி அணைத்துக் கொண்டவள் தான்.... பதினைந்து நிமிடங்களாக ஒன்றுமே பேசாமல் அவன் மேல் வாகாக சாய்ந்து கொண்டு வாயைத் திறக்க மாட்டேன் என்று அடம்பிடித்துக் கொண்டு இருந்தாள்.

"ஒம்மேல கோபப்பட்டு அமுதாம்மா ஒன்னைய ஏதாச்சு திட்டுனாங்களா வர்த்தினி?" என்று அவள் காதின் பின்னால் சில முடிக்கற்றைகளை ஒதுக்கியபடி மென்குரலில் கேட்டவனிடம் இல்லையென தலையாட்டியவள் அவனைப் பரிதாபமாக ஒரு பார்வை பார்த்தாள்.

"சரி அமுதாம்மா திட்டல; உங்களுக்குள்ள வேற என்ன நடந்துச்சு? இப்டி தனியா இருட்டுல வந்து ஒக்கார்ற அளவுக்கு?" என்று கேட்டவனிடம் மறுபடியும் ஒருமுறை அவள் தலையாட்டவும் ஜெயனின் பொறுமை பறந்தது.

"ஏய்; இங்க பார்றீ! இப்டி தலைய ஆட்டிக்கிட்டே பாவமா லுக் உடாத.... பெறகு வர்ற கோவத்துல நானும் ஒன்னைய தான் எதாவது வஞ்சு வச்சுடுவேன் பாத்துக்க! நீ இப்டி மூஞ்சிய தூக்கி வச்சுட்டு ஒக்காந்துருக்குறத பாத்தா மனுஷனுக்கு வெறியாவுது! என்ன தான் பிரச்சனன்னு இப்ப வாயத் தொறந்து சொல்லப்போறியா இல்லையா?" என்று திடீரென குரலை உயர்த்தியவனிடமிருந்து பயந்து விலகி அமரப் போனாள் வதனி.

"எங்க போற நீ? ப்ரச்சன என்னன்னு தான் கேட்டேன். ஒன்னைய எங்கயும் எழுந்திரிக்க சொல்லல..... என்ன ஆச்சுன்னு சொல்லு?" என்று கேட்டவனிடம்,

"இல்ல ஜெயன்.... அமுதாம்மா வந்து..... உனக்கு ப்ளாஸ்டிக் சர்ஜரி பண்ணனும்னு சொல்றாங்க! ஒம்முகத்துல இருக்குற தழும்ப மறைச்சு ஒன்னைய அழகாக்கிடணும்னு..... நெனைக்குறாங்க!"

"நான் இன்னைக்கு மொதல் தடவையா அவங்க கிட்ட சண்டை போட்டேன்; எப்டி இருக்காரோ, அப்டியே உங்க புள்ள அழகு தான் முகில்ம்மா.... எதுக்கு இப்டி தேவையில்லாம ப்ளாஸ்டிக் சர்ஜரி அது இதுன்னு யோசிச்சுட்டு இருக்கீங்கன்னு கேட்டுட்டேன்!"

"முகில்ம்மா உன்னை இதுக்கு ஓகே சொல்லச் சொல்லி எவ்ளோ கன்வின்ஸ் பண்ணுனாலும் உனக்கு சர்ஜரியெல்லாம் வேணாம் ஜெயன்...... ப்ளீஸ்! நீ இப்ப எப்டி இருக்கியோ, இந்த மாதிரி தான் எனக்கு ஒன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு!" என்று சொன்னவளை பின்புறமிருந்து இறுக அணைத்துக் கொண்டவன், அவளை லேசாக அவன் புறமாக திருப்பி அவள் இதழில் தன் இதழை ஒற்றி எடுத்தான்.

இவளது இந்த பரிசுத்தமான அன்பு தனக்கு வாழ்நாள் முழுவதும் கிடைக்கப் போவதற்கு தான் ஏதோ பெரியதாய் அதிர்ஷ்டம் செய்திருக்கிறோம் என்று மட்டும் நினைத்து சிரித்துக் கொண்டான்.

"அப்ப கடைசியில ஒங்க ரெண்டு பேருக்குள்ள சண்ட வந்தது நம்மளால தானா? அது சரி... ரெண்டு பேருக்கும் பொழுது போகலையின்னா அதுக்கு எம்மூஞ்சி தானா கெடச்சது?"

"எம்பொண்டாட்டியா வரப்போற அழகி அவளா ஆசப்பட்டு எம்பக்கத்துல வர்றப்ப கெடைக்குற மொத கவனிப்பே நம்ம கன்னத்து தழும்புக்கு தான்..... அத எப்டி நான் விட்டுக்குடுப்பேன்? காயமில்லாம எனக்கு அவ அழகின்னா, காயத்தோட நான் அவளுக்கு அழகன்.....!"

"அமுதாம்மா தான் ஏதோ பயத்துல இப்டியெல்லாம் பேசுது.... நீ எதுக்குடீ அதுக்குப் போயி இப்டி ஒக்காந்து அழுதுக்கிட்டு இருக்க? ஒனக்கு எங்கிட்ட பிடிச்ச எதையும் என்னோட சம்மதமில்லாம யாரும் மாத்திடவோ அழிச்சுடவோ முடியாது புரியுதா?" என்று கேட்டவனிடம் புன்னகைத்த படி கண்ணீருடன் தலையாட்டிய வதனி,

"ஐ லவ் யூ ஜெயன்!" என்றாள் அவன் கண்களை நோக்கியபடி.

"பார்றா..... எத்தன நாளா நானும் சொல்லு சொல்லுன்னு ஒங்கிட்ட கேட்டுக்கிட்டு இருந்தேன்... அப்பல்லாம் சொன்னியாடீ? இப்ப மட்டும் வந்து சொல்லு ஐ லவ் யூ ஜெயனுன்னு!" என்று குறைபடித்தவன் அவளது தோள்களை விடாமல் பற்றி அவள் முதுகில் சாய்ந்திருந்தான்.

"இன்னும் என்னம்மா கொழப்பம் ஒனக்கு? நிமுந்து ஒக்காரு முதல்ல!
இங்க பாரு..... ம்ஹூம்; என்னையப் பாரு!" என்று சொல்லி அவள் கண்களை ஏறிட்டுப் பார்க்கச் செய்தவன் அவளிடம்,

"மொகத்துல ஒரு கோடு விழுந்துடுச்சுன்னு வருத்தப்பட்டுக்கிட்டு தன்னம்பிக்கைய எழக்குறதுக்கோ, இல்ல என்னைய விட இவ ரொம்ப அழகா இருக்காளேன்னு நெனைக்குறதுக்கோ ஒங்கடன்காரன் ஒண்ணும் கூறுகெட்டவன் இல்ல ஏஎம் அம்மா...." 

"யாரு கண்ணுக்கு வேணும்னாலும் நம்மளோட கொற பெரிய குறையா தெரிஞ்சுட்டுப் போவட்டும்.... வாழ்க்கைய வாழப்போறவங்க நம்ம ரெண்டு பேருந்தான்..... அதுனால நீ இதப்பத்தியெல்லாம் பெரிசா அலட்டிக்காத என்ன?" 

"ஒண்ணுமே இல்லாத இந்த சப்ப மேட்டருக்கு போயித்தான் இவ்ள நேரமா எம்மேல மூக்க தேய்ச்சு தேய்ச்சு அழுதீங்களாக்கும்?" என்று கேட்டவன் கன்னத்தில் இப்போதும் தன்னுடைய இதழை அழுத்தமாக பதிய வைத்தாள் வதனி.

அவளைப் பொறுத்தவரையில் அவனுடைய கன்னத்துக் காயமும் தான் அவளுடைய தலைக் காயமும் தான் ஒருவரிடம் மற்றொருவரை நெருங்கி வர வைத்த காரணிகள். அப்படிப்பட்ட நினைவுச் சின்னங்களை அழகாக இல்லையென சொல்லி அவளுடைய அவனின் முகத்தை எப்படி வேறு விதமாக மாற்ற நினைக்கலாம் என்று நினைத்து தான் முகிலமுதத்திடம் சண்டை போட்டாள்.

அவள் சொல்லாமலேயே அவளது மன உணர்வுகளை ஜெயன் புரிந்து வைத்திருக்கிறான் என்ற குதூகலம் வேறு..... எப்போதாவது
ஆசையாக அவன் கன்னத்து தளும்பை வருடி முத்தமிட்டிருக்கிறாள் தான்; ஆனால் அதை பத்தோடு பதினொன்றாக நினைக்காமல் எம்பக்கத்துல அவ வர்றப்ப கெடைக்குற மொத கவனிப்பே நம்ம கன்னத்து தழும்புக்கு தான் என்று தெளிவாக செல்கிறான் என்றால் காதலில் இவன் எவ்வளவு பெரிய வித்தகன் என்று நினைத்து அவனை கர்வமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

"இங்க பாரு ஹெட்லைட்டு; கடைசி தடவயா இதச் சொல்றேன். நான் சொல்றத நல்லாக் கேட்டு ஒங்காதுல ஏத்திக்க...... லவ் பண்றதுக்காக நாம
இந்த ஊருக்குள்ள வேற எந்த எடத்துக்குப் போயிட்டு வந்தாலும், ஏன் வேற ஊருக்கே போனாலும் நம்ம ரெண்டு பேருக்கும் நம்ம வீடும், மொட்டமாடியும் ரொம்ப ரொம்ப முக்கியமான எடம்!" 

"உங்கிட்ட முத்தம் வாங்குனது, தரையில விழுந்து மொக்க வாங்குனது, ஒம்மடியில படுத்துக்கிட்டது, ஒங்கையால சாப்டதுன்னு சந்தோஷமா ஒக்காந்து நெனச்சு பாக்குறதுக்கு நமக்கு இங்க ஆயிரம் விஷயம் இருக்கு...... சும்மா எப்பப்பாரு கண்ணுல தண்ணி விட்டுக்கிட்டு நீ அந்த நல்ல விஷயத்த எல்லாம் அழிக்கணும்னு நெனைக்காத! இப்ப வா சாப்டுறதுக்கு கீழ போலாம்!" என்றவன் ஒருநொடி நிதானித்து,

"நீ என்ன நினைக்குற? நம்ம இன்னிக்கு கோட்டாவ இப்பவே முடிச்சிட்டு கீழ போயிடுவமா? கீழ போயி மறுபடியும் இன்னொரு பஞ்சாயத்து ஆரம்பிக்காதுன்னு என்ன நிச்சயம்? திட்டு வாங்கிக்கிட்டே சாப்ட கூட செஞ்சுடலாம்..... ஆனா முத்தம் குடுக்க மூடு வராதுல்ல?" என்று கேட்டவனிடம்,

"ஒனக்கு வேற வேல இல்ல போடா.....!" என்று சொல்லி அவன் முதுகில் செல்லமாக ஒரு அடி அடித்தாள் வதனி.

தன்னுடைய காதலியின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியைக் கண்டு நிம்மதியான ஜெயன், "அதான் ஒரு வேலையும் இல்லல்ல.... அப்ப வாடா!" என்று குறும்புக்குரலில் சொல்லி அவள் கழுத்தில் கை போட்டு அவளுடைய ஜாகைக்குள் அவளை அழைத்துச் சென்றான்.

கால்மணி நேரத்திற்கு பிறகு மேலிருந்து இறங்கி வந்து சமையலறைக்குள்ளேயே தோசை ஊற்றி ஒருவருக்கொருவர் ஊட்டிக் கொண்டு சாப்பிட்டு உணவை முடிக்கும் வேளையில் அவள் வாயில் சோன்பப்டியையும் திணித்து விட்டு அதில் தன் பங்குக்கு கொஞ்சம் வேறு எடுத்துக் கொண்டு சென்றான்.

"போயி நிம்மதியா படுத்து தூங்கணும் பாத்துக்க..... தூங்காம முழிச்சுக்கிட்டு லைட்ட போட்டு போட்டு ஆஃப் பண்ணி விளையாடிக்கிட்டு இருந்த.... மறுபடியும் மேல ஏறி வருவேன்!" என்று அதட்டியவனிடம் சின்ன சிரிப்புடன் "குட்நைட்" சொல்லி விட்டு மேலே சென்றாள் வதனி.

"குருவிக்குஞ்சு கணக்கா சின்னதா வாய விரிச்சு க்யூட்டா இப்ப சிரிக்குற பாரு..... இது தான் நான் வந்தப்ப மிஸ்ஸிங்டீ ஹெட்லைட்டு; இப்ப எல்லாம் ஓகேதான்!" என்று நினைத்துக் கொண்டவன் வீட்டைப் பூட்டி விட்டு தன்னுடைய படுக்கைக்கு சென்று சாய்ந்தான்.

அழகி வருவாள்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro