சிந்தனை 3
சகோதரிகளுக்கு,
அண்மையில் நடந்த பொள்ளாச்சி சம்பவஙகளை பார்க்கும் போது சமூகத்தில் இருக்கின்ற ஒரு சில காமுகர்களால் பெண்களின் வாழ்க்கை எப்படி வீணாகின்றது என்பது நிதர்சனமாக தெரிகின்றது. காதல் என்பது அழகான ஒரு உணர்வு.ஆனால் அந்த அழகான உணரவை அசிங்கமாக்கி அதன் மூலம் தங்களின் வக்கிர எண்ணங்களை பூர்த்தி செய்து கொள்ள ஒரு சில அசிங்கம் பிடித்த ஆண்கள் இருக்கின்றனர்.
எப்பொழுதும் போல உங்களிடம் நான் வேண்டுவது யாரும் யாருக்கும் உங்களின் மொபைல் நம்பர், போட்டோஸ், உங்களை பற்றிய தனிப்பட்ட தகவல்கள், வீட்டில இருக்கின்ற பிரச்சினைகளை தயவு செய்து பகிர்ந்து கொள்ளாதீர்கள். தூரத்தில் இருக்கும் ஒரு அண்ணனாக என்னால் இதை மட்டுமே செய்ய முடியும்.நீங்கள் யாருடனும் தொடர்பில் (மெசேஜ்.கால்)இருக்கின்றீர்கள் என்றால் தயவு செய்து உங்கள் தாய் ,தந்தை அல்லது உடன் பிறப்புக்களிடம் கூறுங்கள். குறைந்தபட்சம் அவர்களுக்கு தகவலாகவாவது தெரியட்டும். திருமணம் முடித்த பெண்கள் தங்கள் கணவரிடம் எல்லாவற்றையும் மறைக்காமல் கூறி விடுங்கள்.
இதன் பின் எக்காரணம் கொண்டும் தெரியாதவர்கள் அது பெண்ணாக இருந்தாலும் , ஆணாக இருந்தாலும் அவர்களிடம் பேச வேண்டாம்.மனதில் தோன்றியதை கூறினேன். பெண்களையும் இதில் குறிப்பிடக் காரணம் ஒரு பெண் ஒரு பிரச்சினையில் மாட்டிக்கொண்டால் அதனை வைத்து அவளை மிரட்டி மற்ற பெண்களையும் அவள் மூலம் தங்கள் வலைக்குள் விழவைப்பதில் ஆண்கள் வல்லவர்கள்.
'என்னடா இவன் இப்படி சொல்ரானே இவன் ஒழுங்கானவனா' என எண்ணுபவர்களுக்கு ,
நான் ஒன்றும் சிறந்த மகான் எல்லாம் இல்லை.எனக்கும் ஆசைகள் உண்டு.வீதியில் அழகான பெண் சென்றால் நானும் திரும்பிப் பார்ப்பேன்.நண்பர்களுடன் இருந்தால் பகடி பண்ணுவதும் உண்டு.தவறுதான் இல்லை என்று கூறவில்லை ஆனால் நான் ஒன்றும் தேவ தூதன் கிடையாது தவறே செய்யாமல் இருக்க.நான் செய்யும் தவறுகளை சொல்லிக்காட்டவோ எனது புகழ் பாடவோ இந்த பதிவு இல்லை. ஆணாக பிறந்ததற்காக வெட்கப்பட்ட பல சமயங்களில் இதுவும் ஒன்றாகி போனதே என்று வெட்கி தலைகுனிந்து நிற்பதாலேயே இந்த பதிவு.
இறுதியாக.....
என்னதான் உங்கள் வீட்டில் உள்ளவர்களிடம் உங்களுக்கு மனக்கசப்பு இருந்தாலும் அவர்கள்தான் உங்கள் பாதுகாப்பு. உங்களை யார் என்றே தெரியாதவன் உங்களிடம் அன்பாக இருக்கின்றான் என்றால் அவன் நடிக்கின்றான் என்று அர்த்தம். என்னையும் சேர்த்து.உங்களின் வாழ்க்கையை பாதுகாக்க ஒரு சில உறவுகளை இழப்பதில் ஒன்றும் தவறில்லை.
கணவன் ,உடன் பிறந்த சகோதரன், தந்தை தவிர்ந்த எந்த ஆணையும் நம்பாதீர்கள்.
உண்மையான நண்பனாக இருந்தால் அவன் உங்களின் முடிவை ஏற்றுக்கொள்வான். ஏற்றுக்கொள்ளாதவன் உள்ளத்தில் தவறு உள்ளது என்று அர்த்தம்.தோழியின் பாதுகாப்பிற்காக தோழமையை கூட இழக்க நினைப்பவன் தான் தோழன்.
ஆஷிக்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro