Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

கற்பனை 11

ஷனா-7

"இன்னைக்கு நைட்டு ஒன்னு அஜய்ய உன் ரூமுக்கு வரவைக்கனும்.அத எப்படி பண்றதுன்னு நான் பார்த்துக்குவேன்ன்.அவன் உன் ரூமுக்கு வந்ததும் கத்தி கலாட்டா பண்ணிடு.மீதிய நான் பார்த்துக்கிறேன்" என்று அவன் கூற எரிச்சலுற்ற ஆகாஷனா

"அது முடியாது ,அடுத்த ஆப்சன் என்ன" என்று கேட்க அவனோ நக்கலான தொனியில்

"உன் ரூமுக்கு நான் வருவேன்.ஆனா நான் வந்தா நீ கத்தி கூச்சல்லாம் போட கூடாது" என்று கூற அவன் எதை மனதில் வைத்து பேசுகின்றான் என்பதை அறிந்து கொண்டவள்

"கடைசில உன்ன ப்ரெண்டா நினைச்சதுக்கு உன் புத்திய காட்டிடில்ல.ஹ்ம்ம் என் புத்திய செருப்பால அடிக்கனும்.என்னால ரெண்டுமே பண்ண முடியாது உன்னால முடிஞ்சத பார்த்துக்க" என்று கூற

"ஹேய் டார்லிங்க் என்ன சூசைட் ஏதும் பண்ணிக்க போறியா.உனக்கு கலங்கம் வராம இருக்கனும்னு.நீ என்ன பண்ணாலும் இந்த வீடியோவ நான் ரிலீஸ் பண்ணுவேன்.நீ இருந்தாலும் இல்லைன்னாலும் உன் குடும்பத்துக்கு கெட்ட பேரு வரும்.நீ சூசைட் வேற பண்ணிக்கிட்டா நீ கண்டிப்பா தப்பு பண்ணிருப்பேன்னுதான் ஊரு பேசும்" என்று கூற சிறிது யோசித்தவள்

"சரி என்னால தேவை இல்லாம அஜய்ய இதுல மாட்டிவிட முடியாது.அப்படியே அஜய்ய இதுல இழுத்து விட்டாலும் என் பேரும் சேர்ந்துதான் அடிபடும்.சோ நீ சொன்ன ரெண்டாவது ஆப்சனுக்கு வர்ரேன்.ஆனா நீ வீடியோவ டிலீட் பண்ணுவேன்னு நான் எப்படி நம்புறது" என்று கேட்டவளை அவன்

"நீ நம்பித்தான்மா ஆகனும் அண்ட் நான் யாருக்கும் ஏதும் ப்ராமிஸ் பண்ணா அத மீற மாட்டேன்.உங்க கிட்ட கூட ஆரம்பத்துல ப்ரெண்ட்ஸாதான் பழக நினைச்சேன்.என்ன என் புத்திக்கு பொண்ணுங்க ப்ரெண்ட்ஸ்னாலே ப்ரெண்ட்ஸ் வித் பெனிபிட்னு நினைக்கிற ஆளு.ஆனா அன்னைக்கு என்ன பத்தி கேவலமா நீயும் நேத்ராவும் பேசினீங்க பாரு....உன்மைய சொல்லனும்னா நேத்ரா எதுவுமே பேசல.நீதான் ஓவரா பேசின.... சரி பழெசெல்லாம் எதுக்கு.நான் சரியா நைட் 1 மணிக்கு வருமவேன்"என்ற்வனை அவள் வேண்டா வெறுப்பாக

"சரி" என்று கூற சந்தேகம் கொண்ட கிஷோர்

"என்னால உன்ன நம்ப முடியலயே.தமிழ் பொண்ணுங்க கற்பு அது இதுன்னு பேசுவாங்க.நீ என்னடான்னா நான் கேட்டதும் ஓக்கேன்னு சொல்லிட்ட.என்ன ரொம்ப எக்ஸ்பீரியன்ஸ் இருக்கோ" என்றவனை ஆகாஷனா

"இங்க பாரு கிஷோர் ,அஜய்ய வர வெச்சா நீ அவன பழிவாங்குவ.ஆனா என் பேரும் சேர்ந்து கெடும்.ஆனா நீ வந்தா யாருக்கும் எதுவும் தெரியாது.சத்தமில்லாம விசயம் முடிஞ்சிடும் " என்று கூற சிறிது யோசித்த அவன் எச்சரிக்கும் தொனியில்

"இங்க பாரு ஆகாஷனா ஏதும் தில்லு முல்லு பண்ணி என்ன மாட்டிவிடலாம்னு நினைச்சே.எனக்கு எந்த ப்ராப்ளமும் இல்ல.நீ பண்ண வேலைய ஐ மீன் நீ எடுத்த வீடியோவ காட்டி உன் பேர நாறடிச்சிடுவேன்"என்று கூறியவன்

"வெய்ட் பார் மீ பேபி" என்று காலை கட் செய்தான்.இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்ததை பார்த்த நேத்ரா பளாரென்று ஆகாஷனாவை அறைந்தவள்

"என்னடி நினைச்சிக்கிட்டு இருக்க உன் மனசுல.ஆரம்பத்துல இந்த கிஷோர் கிட்ட ஹெல்ப் கேட்காதேன்னு சொன்னேன்.நீ பிடிவாதமா எனக்கு அவன எப்படி சமாளிக்கிறதுன்னு தெரியும்னு சொன்ன.இப்ப பாரு எங்க வந்து நிக்கிதுன்னு.இப்பவும் அவன் கேட்ட கேடு கெட்ட செயலுக்கு நீ ஓக்கே சொல்லி அவன ரூமுக்கு வர சொல்ர" என்று சத்தமிட்ட நெத்ராவை ஆகாஷனா

"ஏண்டி உன்ப்ரெண்ட அவ்வளவு கேவலமானவன்னு நினைச்சிட்டியா?" என்று கவலையாக கேட்க

"அப்படி இல்லடி ,என்ன இருந்தாலும்" என்று தொடர்ந்து பேச முற்பட்டவளை ஆகாஷனா

"இங்க பாரு நேத்ரா நான் முன்னாடி அஜய் மேல இருந்த கோபத்துல கிஷோர் கூட பழகி அஜய்ய பழிவாங்க நினைச்சது நிஜம்தான்.அதுக்கு அப்புறமாத்தான் நான் அப்படி நினைச்சது தவறுன்னு தோனிச்சி.அதான் நான் எடுத்த வீடியோவ கூட டெலீட் பண்ணிட்டேன்.ஆனா இந்த கிஷோர் நம்மள எப்படி சரி அவன் வலைல விழ வைக்கனும்னு ரொம்ப நாளா ப்ளான் பண்ணியிருக்கான்.சரி நடந்தது நடந்துடிச்சி.இப்பவும் சொல்ரேன் இவன எப்படி ஹேண்டில் பண்ணனும்னு எனக்கு தெரியும்.நீ ஒன்னும் யோசிக்காத"என்று கூறியவளை

"இல்லடி இன்னைக்கு நைட் நான் உன்கூடவே இருக்கேன்.அவன் வந்தான்னா ரெண்டு பேரும் சேர்ந்து சமாளிக்கலாம்"என்று கூற ஆகாஷனா நக்கலாக

"என்னடி ஒரு மாதிரி பேசுற பக்கி"என்று நக்கலடிக்க அவளை முறைத்த நேத்ரா

"எரும எரும இவ்வளவு சீரியசா இருக்கும் போதும் உனக்கு என்னடி கிண்டல் பேச்சு" என்று கூறியவளை சமாதானப்படுத்தும் முகமாக

"இங்க பாருடா நம்ம எப்போமே கூல் ஆஹ் இருக்கனும்.அப்போதான் என்ன சிடுவேசன் வந்தாலும் நம்மளால ஈசியா அத ஹேண்டில் பண்ண முடியும்.இன்னைக்கு இத எவ்வளவு ஈசியா ஹேண்டில் பண்றேன்னு மட்டும் பாரு" என்று கூற நேத்ராவும் அரை மனதுடன்

"சரிடி நீ எது பண்ணாலும் கரக்ட்டா பண்ணுவேன்னு தெரியும்.ஆனால் சில நாட்களா உன்னோட முடிவுகள் தவறா இருக்கு.எதுக்கும் பார்த்து பண்ணு.உன் போன ஆன் பண்ணி வை.ஏதும்னா சொல்லு நான் உடனே வர்ரேன்" என்றவளை ஆகாஷனா

"சரிங்க ஜான்சி ரானி.எனக்கு ஏதும்னா உடனே உங்கள கூப்பிடுறேன்"என்க நேத்ராவோ

"உன்ன திருத்தவே முடியாதுடி"என்றாள்.

"திருத்துறதுக்கு நான் என்ன எக்சாம் பேப்பரா.போ போய் முதல்ல கூலா ஜூஸ் குடி.மத்த எல்லாதையும் நான் பார்த்துக்கிறேன்.இன்னையோட கிஷோர் பொண்ணுங்ககிட்ட வம்பு பண்றத ஸ்டாப் பண்ணிடுவான்"என்றாள்.

இரவு ஒரு மணியாக ஆகாஷனாவின் மொபைலுக்கு

'வெளில இருக்கேன்.கதவைத்திற'என்று கிஷோரிடம் இருந்து மெசேஜ் வர அவளும் கதவைத்திறந்ததும் கிஷோர் உள் நுழைந்தவன் அவளின் அறையை கண்டு சற்று சந்தேகமாக

"என்ன பேபி திங்க்ஸ்லாம் கலைஞ்சி கிடக்கு.என்ன ஏதும் ப்ளான் பண்றியா "என்றவனை அவளோ

"அப்படிலாம் ஏதுமில்லயே.ரூம்ம கொஞ்சம் நீட் பண்ணலாம்னு இருந்தேன் அதுக்குள்ள நீ கால் பண்ணிட்ட"என்றவளை கிஷோர்

"என்னடி கதையா விடுற ,இது என்ன உங்க அப்பன் வீடா நீட் பண்றக்கு.வந்ததே இன்னைக்குத்தான் அதுக்குள்ள உன் சொந்த வீடு மாதிரி நீட் பண்ண போறேன்னு சொல்ர"என்றவனை தான் மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து குத்த முயன்ற ஆகாஷனாவின் கையை பற்றியவன் அவளின் கையில் இருந்த கத்தியை பறித்து தூக்கி வீச திடீரென்று கரண்ட் கட்டானது.இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆகாஷனா தப்பிவிடுவால் என்று நினைத்த கிஷோர் அவன் கையில் வைத்திருந்த க்லோரோபாம் தெளித்த கைக்குட்டையால் அவளை சுவாசிக்க செய்து மயக்கமாக்கியவன் அவளை கட்டிலில் கிடத்தினான்.உணர்வற்று இருந்த ஆகாஷனாவை குரூரமாக பார்த்தவன் திடீரென்று ஆகாஷனாவின் அறைக்கதவை யாரோ திறந்து கொண்டு உள்ளே வர அந்த இருட்டில் யாரென்று தெரியாமல் தடுமாறிய கிஷோரை கட்டையால் ஒரு உருவம் தாக்கியது.தன்னை தாக்குபவன் யார் என்று தெரிவதற்கு முன்பே கிஷோர் மயக்கமானான்.

மயக்கமாகி இருந்த ஆகாஷனாவை அந்த இருட்டில் தூக்கி கொண்டு நேத்ராவின் உதவியுடன் தன் அறைக்கு சென்ற அந்த உருவம் அவளை தன் அறையில் இருந்த கட்டிலில் கிடத்தி எவ்வளவு அவளை எழுப்ப முயன்ற போதும் மயக்க மருந்தின் வீரியத்தால் அவளால் எழ முடியவில்லை.உடனே நேத்ராவை பார்த்து அந்த உருவம்

"நேத்ரா உனக்கும் ஆகாஷனாக்கும்தான் அந்த ரூம் அலார்ட் ஆகி இருக்கு.சோ நீ அந்த ரூமுக்கு போ.மீதிய நான் வந்து பார்த்துக்கிறேன்"என்று கூறிய அவன் வேறுயாருமல்ல அஜய்யேதான்.

அறைக்குள் தனியாக செல்ல பயப்பட்ட நேத்ராவை

"இங்க பாரு நேத்ரா  நீ போய் ஒரு 10 நிமிசத்துல சத்தம் போட்டு கத்து.நான் வந்துடுவேன்.எப்படியும் கிஷோர் இப்போ எழுந்திருக்க மாட்டான்"என்று கூறியவன் தன் ப்ளானில் எங்கோ ஒரு பிழை இருக்கின்றது என யோசித்த அஜய் ஆகாஷனாவை பார்த்தவன்

"நேத்ரா கண்டிப்பா எல்லோரும் உங்கூட ரூம் செயார் பண்ணிக்க இருந்த ஆகாஷனா எங்கேன்னு கேட்பாங்க,அவ டெல்லில இருக்குற அவளோட ரிலேடிவ்ஸ் வீட்டுக்கு போனவ நைட் வரலன்னு சொல்லிடு சரியா"என்றவனை

"அப்படி சொன்னா பர்மிசன் இல்லாம வெளில போனான்னு சொல்லு அவ மேல டிஸிப்லின் ஆக்சன் எடுப்பாஙக்ளே?" என்று கூற

"நீ சொல்ரது சரிதான்.ஆனா இத விட்டா ஆகாஷனாவ இதுல இன்வால்வ் இல்லாத மாதிரி காட்ட வேற வழியில்லை.உனக்கு என்மேல நம்பிக்கை இருக்குல்ல இருந்தா நான் சொன்னத பண்ணு.மத்தத அப்புறமா பார்த்துக்கலாம்" என்றான்.நேத்ரா அவனை அர்த்தமாக பார்த்தவள்

"உங்க மெல எனக்கு பூரன நம்பிக்கை இருக்கு அஜய்,அது இல்லாமலா உங்க கூட எல்லாமே செயார் பண்ணிக்கிட்டேன்"என்று கூறியவளை அஜய் வசீகரிக்கும் புன்னகையுடன்

"உன்ன மாதிரி அவளும் சொல் பேச்ச கேட்குறவளா இருந்தா இந்த ப்ராப்ளத்த ரொம்ப ஈசியா சால்வ் பண்ணி இருக்கலாம்.அவதான் எதுக்கு எடுத்தாலும் ஏட்டிக்கு போட்டியா நிட்கிறாலே.அதான் அவள இந்த சீன்ல இருந்தே தூக்க போறேன்.அப்புறம் பாரு என்ன பண்றேன்னு" என்று கூறி நேத்ராவை அவளின் அறைக்குள் அனுப்பி வைத்தான்.

-----வருவாள்--------

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro