4
வார இறுதியில் கவி அக்காவின் நிச்சயதார்த்தத்திற்காக வீடு சென்றிருக்க மற்ற மூவரும் Outing கிளம்பினார்கள். மதிய உணவு வெளியே எடுத்துவிட்டு அப்படியே Shopping mall, beach என்று சுத்திவிட்டு வருவதாய் முடிவு.
இவர்கள் உற்சாகமாய் வெளியே போக, தன் வீட்டில் சீலிங்கை வெறித்தபடி படுத்திருந்தான் அஜய். "பேசாம வாரத்தில் ஏழு நாட்களும் class போட்டிருக்கலாம், அப்டி இருந்தா Weekend ல இந்த அவஸ்தை இருந்திருக்காது " தனக்குத்தானே புலம்பிக் கொண்டிருந்தான். இதற்கு முன்பெல்லாம் வார இறுதியென்றாலே நன்றாய் தூங்கி எழும்பி நண்பர்களுடன் ஊர் சுற்றி Enjoy செய்பவனுக்கு இப்போது வார இறுதிகளே பிடிக்காமல் போயிருந்தது. எல்லாம் சஞ்சனாவால் தான். அவளை பார்க்காமல் ஒரு நாளை கடத்துவதே பெரும் கஷ்டமாய் இருந்தது.
அஜய்க்கு ஆரம்பத்திலிருந்தே அவளைப் பிடித்து தான் இருந்தது. ஆனால் அவள் பொதுவாக ஆண்கள் யாரிடமும் நெருக்கம் காட்டாததால் அஜய் அவளுடன் பேசத் தயங்கினான். ஆனால் இப்போது அவள் நட்பு வட்டத்தில் இடம்பிடித்துவிட அவள் அமைதியான குணமும் அவள் செயல்களும் அவனை கவர அவள் மேலிருந்த உணர்வு இன்னும் வலுப் பெற்றுப் போனது.
அவன் காதல் அவளுடன் தான் என்பது அவனுக்கு உறுதியாகி விட்டது. அவள் அருகாமையை நேசிக்கத் தொடங்கிவிட்டான். அவளின் சின்னச்சின்ன செயல்கள் முகபாவனைகளைக் கூட ரசிக்கத் தொடங்கியிருந்தான். ஏதாவது ஒரு காரணம் தேடிக் கொண்டு அவளுடன் நேரம் செலவளிக்கத் தொடங்கியிருந்தான். அவள் மனதில் என்ன இருக்கிறது என்பது இன்னும் புதிராகவே இருக்க, இன்று அவளை பார்க்கும் வழியறியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.
அக்ஷராவின் பிறந்த நாளுக்கு Greeting card வாங்க சஞ்சனா ஒரு கடைக்குள் போக மற்ற இருவரும் துணிக்கடைக்குள் நுழைந்தார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த அஜய் முடிவாக ரம்யாவுக்கு போன் செய்தான்.
ஹலோ சொல்லுடா
என்ன வெட்டி Officer நல்ல தூக்கமா? Sunday அதுவுமா நாள் Fullஆ தூங்கறது தான் வேலையா??
டேய் டேய் இப்போ எதுக்கு சம்மந்தமே இல்லாம Call பண்ணி திட்டிட்டு இருக்க?
இல்ல நானும் வெட்டியா தான் இருக்கேன், அதான் சினிமா பாக்க போலாமான்னு?
"சினிமாவா, போலாமே. இரு தீப்தி கிட்ட கேட்டுட்டு சொல்றேன் . " அவள் தீப்தியின் பக்கம் திரும்ப அவளும் சரியெனத் தலையசைத்தாள்.
அவளுக்கும் Ok அஜய் . நாங்க Mallல தான் இருக்கோம். நீ வந்துட்றியா?
"ரம்யா, தீப்தி மட்டும் தான் இருக்காலா? கவி, சஞ்சனா இவங்கல்லாம் இல்ல? "
"கவி வீட்டுக்கு போயிருக்கா, சஞ்சனா எங்க கூட தான் இருக்கா . "
"ஆஹ் Ok, நானும் ரவியும் இன்னும் 15 minutes ல அங்க இருப்போம் " என்றவன் படு உற்சாகமாய் ரவியின் வீட்டுக்கு கிளம்பினான்.
அங்கே வீட்டில் TV பார்த்துக் கொண்டிருந்த ரவியை வலுக்கட்டாயமாக கிளப்பிக் கொண்டு mall ஐ அடைந்தான்.
"திடீர்னு என்ன சினிமா? வரவர நீ சரியில்ல அஜய். எல்லாம் ஒரு Type ஆ தான் பண்ணிக்கிட்டு இருக்க. " திட்டிக் கொண்டே வந்தான் ரவி. Mall இனுள் நுழைந்ததும் அஜய் கண்கள் சஞ்சுவை தேட அங்கே மற்ற இருவரும் அவனுக்கு தரிசனம் கொடுத்தார்கள்.
வேறு வழியில்லாமல் ரம்யாவிடம் அவன் இயல்பாக இருப்பது போல் எதேதோ பேச அவனை நீண்ட நேரம் தவிக்க விடாமல் அங்கே வந்தாள் சஞ்சனா.
தூரத்தில் வரும் போதே அஜயையும் ரவியையும் கண்டுவிட்டவள் விழிகளில் ஆச்சரியம் காட்டியபடியே அவர்களை நெருங்கினாள்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro