
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு -40
இதயமே ஓ
இவளிடம் ஹோ
உருகுதே ஓ ஓ ஓ
இந்த காதல் நினைவுகள் தாங்காதேஅது தூங்கும் போதிலும் தூங்காதே
பார்க்காதே ஓப்[ me ; நானும் நீயா நானா promo பாத்தேன் என்பதால் இந்த பாடல் வரிகள் ]
தேவா சூர்யாவின் முடியை மெல்ல கோதி விட்டாள் .சூர்யா கொஞ்சம் நேரம் அப்படியே இருந்தவன் பிறகு தேவாவை கட்டிலில் அமர சொன்னான் .தேவா அமர்ந்தாள் .
தேவா நம்ம ரெண்டு பேரும் நிறைய கஷ்டத்தை பார்த்து பார்த்துதான வளந்துருக்கோம் .இந்த கஷ்டத்தை எல்லாம் நாம் அவங்களுக்கு கொடுக்க கூடாது .குழந்தைங்க இந்த உலகத்தை பாக்குறதே அம்மா அப்பா கண்ணுல இருந்துதான் அதனால நம்ம என்ன ஆனாலும் நம்ம குழந்தைக்கு அழகான ஒரு உலகத்தைதான் கொடுக்கணும் என்று சொன்னான் சூர்யா .
தேவா சரி என்று தலை அசைத்தாள் .அவளை பார்த்தவன்
நான் இன்னைக்கு கொஞ்சம் அதிகமா எமோசனல் ஆகிட்டேனோ என்று கேட்டான் சூர்யா .
அவனுடைய முடியை கோதி விட்டவள் அவனை பார்த்து அப்படி எல்லாம் இல்லை என்பது போல தலை அசைத்தாள் .
அட்லீஸ்ட் எனக்கு நீ இருக்க தேவா .நீயும் இல்லன்னா நான் என்ன அஆகி இருப்பேன் ,இப்போதான் நாம் குடும்பம் மத்த குடும்பம் மாதிரி ரொம்ப அழகா இருக்கு.நம்ம குடும்பம் பெருசாகனும் .உன்ன மாதிரி ஒரு பையன் என்ன மாதிரி ஒரு பொண்ணு சந்தோசமா அவங்கள் வளக்கணும் .நாம் கிருஷ்ணா அப்போ பெரிய பையன் ஆகிடுவன் அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும் .அவனுக்கு குழந்தை பிறக்கும் அவங்களுக்கு எல்லாம் கல்யாணம் பண்ணி வைக்கணும் என்று சொன்னவன் நிறுத்த அவனை பார்த்த தேவா சிரித்தாள்
என்ன ஆச்சு தேவா சிரிக்கிற என்று கேட்டான் சூர்யா ஒன்றும் இல்லை என்பது போல தளை அசைத்தாள் .
ச்சீ நானா வேற ஒருத்தன் குழந்தை அது இதுன்னு சொல்லிடு இருக்கேன் உனக்கு இப்போதைக்கு குழந்தை பெத்துக்க ஒகேவா .இல்ல நாம் அப்புறமா பெத்துக்கலாம் என்று சொன்னன சூர்யா .அவன் அப்படி சொன்னதும் அவனை பார்த்தாள் தேவா .
ஒ இந்த விஷயத்தை எல்லாம் கொஞ்சம் நாளுக்கு முன்னாடியே கேற்றுருக்கணுமோ என்று கேட்டான் தேவா .
அவன் அப்படி கேட்டதும் தேவா சிரித்துவிட்டாள் .
என்ன நீ எல்லாத்துக்கும் சிரிக்கிற என்று கேட்டான் சூர்யா .தேவா ஒன்றும் இல்லை என்பது போல தலை அசைத்தாள் .
அட என்ன நீ கேட்டா பதில் சொல்லாம சிரிச்சிட்டு இருக்க என்று கேட்டான் சூர்யா .தேவா அதற்கு ஒன்றும் சொல்லாமல் தலை குனிந்து கொண்டாள் .
ம்ம்ம் அப்போ நீ சொல்ல மாட்ட று நான் உன்னோட கண்ண பாத்தே கண்டு பிடிக்கிறேன் என்று சொன்ன சூர்யா அவள் கண்களை தன்னை நோக்கி பார்க்கும்படி செய்ய இருவரின் கண்களும் ஜ்நேருகு நேர் சந்தித்து கொண்டது .சூர்யாவால் ஈனோ அவள் கண்களை பார்த்து பேசவே முடியவில்லை .அவன் வார்த்தைகளின்றி மொனமாக அவனை பார்த்து புன்னகை செய்தவள் அவன் நெற்றியில் முத்தம் கொடுதிவிட்டு அவனை அணைத்துகொண்டாள் .சூர்யாவும் அவளை அணைத்துகொண்டான் .
அவர்கள் அவர்களுக்கான ஒரு உலகில் செல்ல இங்கே அனு அவளுக்கான அன்கீகாரதுக்காக வேலை தேடி கொண்டிருந்தாள் .இரவ்வும் பகலும் அவளுக்கு இப்போது இருளாகதான் இருந்தது.என்னதான் அவளுக்காக் அமிர்தா மற்றும் பிரசாத் இருந்தாலும் அவர்களை மட்டும் நம்பி அவள் வாழ விருப்பம் கொள்ளவில்லை எனவே வேலை தீடேய் கொண்டு இருந்தாள் .அப்போது அவள் அருகில் வந்தாள் அமிர்தா .
'என்ன அணு உனக்கு செட் ஆகுற மாதிரி வேலை எதாவது கிடைச்சிருக்கா என்ன என்று கேட்டாள் அமிர்தா .
நாலு அஞ்சு வேலைக்கு அப்ளை பண்ணி இருக்கேன் ஏதாவது கிடைசிசின்ன்னா நல்லா இருக்கும்னு பாக்குறேன் .என்று சொன்னாள் அனு .
உனக்கு டேலேன்ட் இருக்கு அனு நிச்சயம், வேலை கிடைக்கும் .உனக்கு வேலை கிடைச்சிசின்னா உனக்கும் புது நம்பிக்கை கிடைச்ச மாதிரி இருக்கும் .சரி வா அணு கொஞ்சம் நேரம் தூங்கு என்று சொன்னனாள் அமிர்தா .
இல்ல அண்ணி இன்னும் கொஞ்சம் நேரம் வேற எதாவது வேலை இருக்கான்னு சர்ச் பண்ணி பாக்குறேன் என்று சொன்னாள் அனு .
ம்ம்ம் அப்போ சரி அனு நீ சர்ச் பண்ணு நான் போய் காபி போட்டு கொண்டு வர்றேன் என்று சொன்னவள் எழூந்து சென்றாள் .
அப்போதுதான் குழந்தைகள் எல்லோரையும் உறங்க வைத்துவிட்டு வந்தான் பிரசாத் .அவன் நேராக அனு அருகில் வந்தான் .
என்ன அனு இன்னும் தூங்காம என்ன பண்ணுற என்று கேட்டான் .அவன் அப்படி கேட்டதும் அனு நிம்மதியா தூங்குற நிலமையிலையா நானா இருக்கேன் என்று கேட்டாள் .
மறுபடியும் சோகமா ஆற்ம்பிகாத் அனு .நீ எவ்ளோ பிடிவாதம் பிடிக்கிற பொண்ணு உனக்கு ஒண்ணு வேம்னும்னா அதை என்ன ஆனாலும் வாங்கியே தீருவ அப்படி இருக்குறப்போ எதுக்காக நீ இப்போ இவ்ளோ சோகமா இருக்க .நீ தைரியமா இரு வேலை நிச்சயம் கிடைக்கும் என்றான் பிரசாத் .அவன் சொன்னதை கேட்டவள் .
ஆமா நீ எப்போல இருந்து இவ்ளோ நல்ல அண்ணன் ஆன.எபோஎப்போவும் சண்டை போட்டு தான இருப்போம் என்று கேட்டாள் அனுய் .
ஆமா சண்டை போடுவோம்தான் இனியும் போடுவோம்தான் . ஆனால் அதுக்காக உன்ன எவனோ ஒருத்தன் கஷ்ட படுத்துறப்போ எல்லாம் என்னால பாத்துட்டு சும்மா இருக்க முடியாதுல்ல. விடு பாத்துக்கலாம் என்றான் பிரசாத். அவனை பார்த்து சிரித்தாள் அனு. அவர்கள் எல்லோருக்கும் சேர்த்து காஃபி கொண்டு வந்து கொடுத்தாள் அமிர்தா எல்லோரும் பேசியப்படி சந்தோசமாக காஃபி குடித்தார்கள்..
அதே நேரம் இங்கே அனுவின் அம்மாவும் அப்பாவும் அமைதியாக அமர்ந்து இருந்தார்கள்.
என்னங்க நாளைக்கு மாப்பிள்ளை இவள கூட்டிட்டு போக வர்றேன்னு போன் பண்ணி சொல்லறாரு. ஆனால் இவங்க எல்லாம் பண்ணுறத பாத்தா இவள விட மாட்டாங்க போலயே. இப்போ என்ன பண்ணுறது. நாளைக்கு அவர் வர்றப்போ இவங்க எதாவது பிரச்சனை பண்ணா என்ன பண்ணுறது என்று குழப்பத்துடன் கேட்டார் அனுவின் அம்மா.
நாளைக்கு கதை அதை நாளைக்கு பாத்துக்கலாம். நம்ம நினைச்ச மாதிரி எல்லாம் நடக்கல இல்லையா. நம்ம நாளைக்கு பாத்துக்கலாம் என்று சொன்னார் அனுவின் அப்பா.
என்னங்க நீங்க இப்படி சொல்றிங்க. இது நம்ம பொண்ணு வாழ்க்கை நம்ம தெளிவா ஒரு முடிவுக்கு வந்தாதான அவ வாழ்க்கை நல்லா இருக்கும் என்று கேட்டார் அனுவின் அம்மா.
நம்ம அம்மா அப்பாதான் அதனால நம்ம சொல்றது எல்லாம் அவளுக்கு நல்லதா இருக்கணும்னு அவசியம் இல்லையே என்று சொன்னார் அனுவின் அப்பா.
என்னங்க இப்போ இப்படி பேசுறீங்க. அப்போ நம்ம பொண்ண நீங்க திரும்ப அனுப்ப போறது இல்லையா என்று கேட்டார் அனுவின் அம்மா.
அதை நம்ம நாளைக்கு பேசுவோம். ஆனால் என்னோட மனசு என்னவோ என் பொண்ணுக்கு அப்பாவா இரு. அதைவிட்டுட்டு ஊருக்கு உத்தமனா இருக்காதன்னு சொல்லுது. நாளைக்கு பாப்போம். அவர் என்ன சொல்றாருன்னு கேட்டுட்டு மத்த விஷயத்தை பத்தி பேசலாம் என்றார் அனுவின் அப்பா.
என்னங்க நீங்க இப்படி எல்லாம் சொல்றிங்க என்று குழப்பதுடன் அனுவின் அம்மா பேச ஆரம்பிக்க
என்ன இருந்தாலும் அதை நாளைக்கு பேசிக்கலாம். என்று சொன்னார் அனுவின் அப்பா. அனுவின் அம்மா அமைதி ஆனார்.
அதே நேரம் இங்கே பூஜாவும் ஜெய்யும் பேசிக்கொண்டு இருந்தார்கள்.
ஒரு இரவில் பலரும் பல நிலைமையில் இருக்கிறார்கள்.அப்படித்தான் நிஜத்திலும் இருக்கிறார்கள். என்ன ஆனாலும் கதை அடுத்த கட்டத்தை நோக்கி செல்லும் அதுபோலதான் நாட்களும். அதனால்
அடுத்த நாள் காலை அழகாக விடிந்தது. காலையில் எல்லோரும் சென்றுவிட தேவா மட்டும் வீட்டில் இருந்தாள். அப்போது அமிர்தா வீட்டுக்கு வந்தாள்.
தேவா அவளை வரவேற்றாள்.
தேவா அது ஒரு பிளவுஸ் தைக்கணும் நீ பிரியா என்று கேட்டாள் அமிர்தா.
ஆமாம் என்பது போல தலை அசைத்தாள் தேவா.
ம்ம் சரி நான் மத்தியானம் கொண்டு வர்றேன். எனக்கு ரெண்டு நாள்ல அந்த துணி வேணும். நீ பாத்து பண்ணி குடு நான் என்ன ரேட்ன்னு பாத்து சொல்றேன் என்றாள் அமிர்தா சரி என்பது போல தலை அசைத்தாள் தேவா.
சரி தேவா எனக்கு கடையில கொஞ்சம் வேலை இருக்கு நான் போறேன் என்று சொன்னாள் அமிர்தா. சரி என்று தலை அசைத்தாள் தேவா..
அமிர்தா வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். அவள் வரும்போது அனு யாரிடமோ போனில் பேசிக்கொண்டு இருந்தாள்.
அமிர்தா கடைக்கு செல்ல தயாராகி வந்தாள்.
அப்போது அனு அவளிடம் மகிழ்ச்சியாக வந்து அண்ணி எனக்கு இன்டெர்வியூ கால் வந்துருக்கு. இன்னும் 3 நாள் கழிச்சு இன்டெர்வியூ. கொஞ்சம் கஷ்டமான இன்டெர்வியூதான் ஆனாலும் சமாளிச்சுடலாம்ன்னு ஒரு நம்பிக்கை வந்துருக்கு என்று சொன்னாள் அனு. அவள் சொன்னதை கேட்டு மகிழ்ச்சி அடைந்தாள்.
சூப்பர் அனு எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு.உனக்கு நிச்சயம் இந்த வேலை கிடைக்கும். உன்னோட வாழ்க்கையில இனி பிரச்சனையே இருக்காது எல்லாமே நல்லபடியாவே நடக்கும் நீ வேணா பாரு என்று சொன்னாள் அமிர்தா. அவள் சொன்னதை கேட்டு புன்னகை செய்தாள் அனு. ஆனால் அவள் புன்னகை நொடியில் மாறியது. அப்போது குழந்தை அழ ஆரம்பித்தது.
என்ன ஆச்சு அனு ஏன் உன்னோட பேஸ் டல் ஆகுது என்று கேட்டாள் அமிர்தா.
இல்லை எனக்கு ஒண்ணும் ஆகல. ஆனா என்றவள் நிறுத்த.
என்ன அனு என் குழந்தை அழுது நீ இப்படி சும்மா நின்னுட்டு இருக்க இதுதான் நீ குழந்தையை பாக்குற லட்சணமா என்று கேட்டான் ரகு. அவனை அனு குழப்பதுடன் பார்க்க அவன் பாட்டுக்கு உள்ளே வந்தான். அப்போது அறையில் இருந்து வெளியே வந்தார்கள் அனுவின் அம்மா அப்பா. அந்த நேரம் பிரசாத் வேறு வீட்டில் இல்லை.
என்ன அத்தை மாமா. உங்களோட ஆசைப்படி நான் என்னோட பொண்டாட்டியை என்னோட வீட்டுக்கு கூட்டிட்டு போறேன் என்று சொன்னான்
ரகு. அவன் சொன்னதை கேட்டு அனு அதிர்ச்சியாகி நிற்க ரகு கொஞ்சம் கூட அழட்டிக்கொள்ளாமல் சோபாவில் சென்று அமர்ந்தான்.
அதே நேரம் இங்கே தேவா வீட்டில் கதவு தட்டும் சத்தம் கேட்டது. அவள் யார் வந்திருப்பார்கள் என்று யோசித்துக்கொண்டு வெளியே சென்று பார்க்க அங்கே நின்றாள் புவனா.அவரை பார்த்து அதிர்ச்சி ஆனாள் தேவா.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro