
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு-19
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
என்னை இங்கே
வர செய்தாய் என்னனவோ
பேச செய்தாய் புன்னகைகள்
பூக்க செய்தாய் இன்னும் என்ன
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அன்று ஆபிஸ் சென்ற பூஜாக்கு கவலையாகவே இருந்தது. சாயங்காலம் எல்லோரும் ஹாஸ்பிடல் சென்று பார்க்க முடிவு செய்தார்கள். பூஜாவும் ஹாஸ்பிடல் சென்றாள்.
சத்யாக்கு பெரிதாக அடி படவில்லை என்றாலும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் இரண்டு மாதம் டாக்டர் ஓய்வு எடுக்க சொல்லி விட்டார்.நண்பர்கள் எல்லாம் பேசிவிட்டு செல்ல பூஜா மட்டும் நின்று கொண்டிருந்தாள்.
ஏன் நிக்குற பூஜா உக்காரு என்று சொன்னான் சத்யா. பூஜா அவன் அருகில் இருந்த சேரை எடுத்து போட்டு உட்கார்ந்தாள்.
சத்யா நான் நேத்து அப்படி பேசுனதுனாலதான கவனகுறைவா வண்டி ஒட்டி உங்களுக்கு ஆக்சிடண்ட் ஆச்சு. நான் பேசுனத நினைச்சு நீங்க ரொம்ப கஷ்ட பட்டுருப்பிங்கள்ல. உண்மைய சொல்லனும்னா எனக்கு உங்கள வேதனை படுத்தணும்ன்னு எண்ணம் இல்லை சத்யா. நீங்க மத்த பசங்க மாதிரி சும்மா பின்னாடி சுத்தி என்ன லவ் பண்ணு என்ன லவ் பண்ணுன்னு சொல்லி டார்ச்சர் பண்ணதே இல்லை. எனக்கு உண்மையா அந்த விசயத்துல உங்க மேல பெரிய மரியாதை இருக்கு சத்யா. ஆனால் என்ன பண்ண மரியாதை மட்டும்தான் இருக்கு. உங்களுக்கு நான் எல்லாம் செட் ஆக மாட்டேன் சத்யா உங்களுக்குன்னு ஒரு பொண்ணு இருப்பா. நீங்க என்ன நினைச்சு தேவை இல்லாம உங்க கற்பனை வளத்துகிட்டா உங்களுக்கு கஷ்டம்தான் அதிகம் ஆகும். அதான் நான் அந்த எல்லைக்கு போக விட கூடாதுன்னு நினைச்சு அப்படி பேசுன. ஆனால் உங்களுக்கு இப்படி ஆகும்ன்னு நான் கனவுல கூட நினைக்கல. ஐ ஆம் சாரி என்று சொன்னவள் அழ அவள் முகம் தக்காளி பழம் போல சிவந்தது
நீங்க எப்போவாது நம்ம ஆபிஸ்ல சிரிப்பிங்க அப்படி சிரிக்கிறப்போ உங்களோட முகம் சிவந்துடும். நான் எதாவது ஒரு மூலையில இருந்து அதை ரசிப்பேன் ஆனால் இப்போ உங்க முகம் சிவந்து இருக்கு ஆனால் எனக்கு உங்களை ரசிக்க முடியல. ப்ளீஸ் உங்களோட அழுகைய நிறுத்துங்க. எனக்கு ஒண்ணுமே ஆகல நான் ரொம்ப நல்லா இருக்கேன் எனக்கு எதாவது ஆகி அப்படி அழுதா கூட ஒரு நியாயம் உண்டு என்று சத்யா சொல்ல பூஜா அவனை இடைமறித்து பேசினாள்
சத்யா இப்படி பேசாதீங்க என்று கொஞ்சம் கோபமாக சொன்னாள் பூஜா.
சரி நான் அப்படி பேசல ஆனால் என்னோட மனசுல உள்ளத பேச ஆசை படுறேன் நான் பேசிக்கவா என்று கேட்டான் சத்யா .
நிச்சயமா பேசுங்க என்றாள் பூஜா
நான் நேத்து நீங்க பேசுனத நினைச்சு மனசு உடைஞ்சுதான் போனேன் ஆனால் அது நான் விபத்துல மாட்ட காரணம் இல்லை. ஒருத்தன் குடிச்சிட்டு வண்டி ஓட்டி வந்து என்ன இடிச்சிட்டான் அதான் காரணம். அதனால நீங்க அந்த விஷயத்தை பத்தி கவலை பட வேண்டாம். அப்புறம் உங்களுக்கு ஒரு குட் நியூஸ் என்றான் சத்யா.
என்ன குட் நியூஸ் என்று குழப்பதுடன் கேட்டாள் பூஜா
நான் வேலையை விட போறேன். எனக்கு நேத்து நீங்க பேசுனப்போவே புரிஞ்சிடுச்சு என்ன காதலிக்க மாட்டிங்கன்னு அதுக்காக நீங்க என்ன காதலிக்க மாட்டிங்கன்னு நினைச்சு நான் போறேன்னு என்ன தப்பா நினைக்காதீங்க. என்னோட காதல் உங்கள காயபடுத்த கூடாதுன்னுதான் போறேன். இந்த உலகம் உண்மையா ரொம்ப பெருசுங்க இதுல இனி நம்ம பாக்குறது ரொம்ப கஷ்டம். அதனால நான் கஷ்ட படுவேன் நினைச்சு நீங்க கஷ்ட பட வேண்டாம். இனி நான் உங்க முன்னாடி வரவே மாட்டேன். நான் நிச்சயம் கல்யாணம் பண்ணிப்பேன் எனக்குன்னு ஒரு வாழ்க்கை வாழ்வேன் ஆனால் எங்கேயோ உங்க கண்ணுக்கு தெரியாத இடத்துல இருப்பேன். என்ன பண்ண நில்லுன்னு சொன்னா வாழ்க்கை நிக்குறது இல்லையே. ஆனால் ஒண்ணு உண்மை நான் உங்கள லவ் பண்ணது அதை மட்டும் எண்ணைக்கும் தப்பா கூட நினைச்சிராதீங்க . இப்போ எனக்காக ஒரு ஹெல்ப் பண்ணுங்க என்று கேட்டான் சத்யா
சொல்லுங்க சத்யா என்றாள் பூஜா.
அழுகிறத நிறுத்திட்டு என்ன பாத்து சிரிச்சிட்டு குட் பை சொல்லிட்டு திரும்பி பாக்காம போங்க ப்ளீஸ் என்றான் சத்யா.அவன் அப்படி சொன்னதும் பூஜாக்கு அவ்வளவு கஷ்டமாக இருந்தது.இருந்தாலும் அவன் சொன்னதை செய்தாள். அவன் உடலை நன்றாக பார்த்து கொள்ள சொன்னவள் பிறகு குட் பை சொன்னவள் வெளியே வந்தாள். அவள் அங்கிருந்து செல்ல சத்யா நண்பன் ஜெகதீஸ் உள்ளே வந்தான்.
என்ன ஆச்சுடா மச்சா அந்த பொண்ணுகிட்ட நான் சொன்ன மாதிரி பேசுனியா சிம்பத்தி ஒர்க் அவுட் ஆச்சா என்று கேட்டான் ஜெகதீஸ்.
இல்லை நான் என்னோட மனசுல உள்ளத மட்டும்தான் பேசுனேன் என்றான் சத்யா.
என்ன சொன்ன என்றான் ஜெகதீஸ்.
என்ன திரும்பி பாக்காம போக சொல்லிட்டேன் என்று சொன்னான் சத்யா. அவன் சொன்னதை கேட்ட ஜெகதீஸ் அதிர்ச்சி ஆனான்.
டேய் மச்சான் என்ன சொல்ற. நீ மட்டும் கொஞ்சம் எமோஷனல்லா பேசி இருந்தா லவ் பண்ண ஒத்துருப்பா டா.
என்றான் ஜெகதீஸ்.
என்ன எமோஷனல் ப்ளாக் மெயில் பண்ண சொல்றியா என்று கேட்டான் சத்யா.
டேய் அப்படி சொல்லலடா ஆனால் நீ அவளை உண்மையா லவ் பண்ணதான அப்புறம் என்ன டா. இவ்ளோ லவ் பண்ண பொண்ண எப்படி போக விட்ட என்று கேட்டான் ஜெகதீஸ்
அவ்ளோ லவ் பண்ணுறதாலதான் போக விட்டேன். அவள கஷ்டபடுத்தி லவ் பண்ண வச்சி நான் என்ன பண்ண போறேன்.அதனாலதான் நான் போக விட்டேன் என்றான் சத்யா
உன்ன விட அந்த பொண்ண நல்லா பாத்துக்க யாராவது கிடைப்பாங்கன்னு நீ நினைக்குறியா நிச்சயம் கிடைக்க மாட்டாங்க. என்று சொன்னான் ஜெகதீஸ்.
ஏன் அப்படி எல்லாம் சொல்ற நீ.அவ என்ன தப்பு பண்ணா லவ் பண்ண தோணலன்னு சொன்னா அவ்ளோதான். நிச்சயம் அவளுக்கு நல்ல ஹஸ்பண்ட் கிடைப்பான்.சரி நீ வெளிய போ எனக்கு ரொம்ப டையார்ட்டா இருக்கு கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும் என்று சொன்னான் சத்யா.
ஏன் நான் இங்க இருந்தா உனக்கு தூக்கம் வராதா. நீ தூங்கு நான் சும்மா உக்காந்துருக்கேன் என்று சொன்ன ஜெகதீஸ் பழம் வெட்ட வைத்திருந்த கத்தியை கொஞ்சம் தள்ளி வைத்தான்.
அவனை பார்த்து சிரித்தான் சத்யா.
என்ன நான் தற்கொலை பண்ண ட்ரை பண்ணுவேன் நினைக்கிறியா அப்படி எல்லாம் பண்ண மாட்டேன். நீ வெளிய போ என்றான் சத்யா.
நீ அதுக்கு சரி பட்டு வர மாட்டன்னு எனக்கு தெரியும் இருந்தாலும் சும்மா நீ மனசு மாறுனா உன்னோட கடைசி நிமிசத்துல உன்கூட இருக்கலாம் பாத்தியா அதான். பேசுறான் பாரு பேச்சு. அப்புறம் எதாவது சொல்லிட போறேன் தூங்கு என்று சொன்னான் ஜெகதீஸ் அவன் சொன்னதை கேட்ட சத்யா சிரித்தான்.
சிரிக்காத கண்ண மூடி தூங்கு என்று சொன்னான் ஜெகதீஸ்.
என்னதான் சத்யா சாதாரணமாக பேசுவது போல இருந்தாலும் ஜெகதீஸ்க்கு தெரியும் அவன் எந்த அளவுக்கு வேதனையில் இருக்கிறான் என்று. சத்யா என்னதான் அவளை போ என்று சொன்னாலும் அவள் மீண்டும் ஒருமுறை வர மாட்டாளா என்று அவன் மனம் எதிர்பார்த்தது.அதை ஜெகதீஸ் கவனிக்கதான் செய்தது.
ஆனால் அவனிடம் அதை பற்றி கேட்காமல் அவன் அமைதியாக அமர்ந்திருந்தான்.சத்யா எதுவும் பேசாமல் கண்ணை மூடினான்
----
சத்யாவை பார்த்துவிட்டு வந்த பூஜா முகத்தில் கவலை என்பது அப்பட்டமாக தெரிந்தது. அவளுக்கு அழுகை வந்தது. அவள் வேதனையில் நடந்து வந்து கொண்டிருக்க கவனம் இல்லாமல் யார் மீதோ மோதி விட்டாள்..
ஐ ஆம் சாரி என்று சொன்னவள் நிமிர்ந்து பார்க்க ஜெய் நின்று கொண்டிருந்தான்.
ஹே பூஜா உங்கள இங்க பாப்பேன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பாக்கவே இல்லை. இங்க என்ன பண்ணுறீங்க என்று கேட்டான் ஜெய்.
என் கூட வேலை பாக்குறவருக்கு ஆக்சிடண்ட் ஆயிடுச்சு அதான் நான் பாக்க வந்தேன். என்றாள் பூஜா.
அவர் இப்போ எப்படி இருக்காரு என்று கேட்டான் ஜெய்
ம்ம்ம் நல்லா இருக்காரு என்று தன்னுடைய குரலில் வேதனை காட்டாமல் சொன்ன பூஜா
நீங்க இங்க எதுக்கு இங்க வந்திங்க என்று கேட்டாள்
அம்மாக்கு தெரிஞ்சவங்க பொண்ணுக்கு குழந்தை பிறந்துருக்கு அதான் பாக்க போயிருக்காங்க. நான் அவங்க திரும்பி வர்றதுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.என்று சொன்னான் ஜெய்.
ஓ சரி அப்ப நான் கிளம்புறேன் எனக்கு கொஞ்சம் டையார்ட்டா இருக்கு என்று சொன்னவள் அங்கிருந்து செல்ல போக அவளை அழைத்தான் ஜெய். அவள் என்ன என்பது போல பார்த்தாள்.
உங்க நம்பர் கிடைக்குமா என்று கேட்டான் ஜெய்
அவனை பார்த்து முறைத்தாள் பூஜா.
இப்போ எதுக்கு என்னோட நம்பர் உங்களுக்கு. என்னால எல்லாம் நம்பர் தர முடியாது என்று சொன்னவள் அங்கிருந்து செல்ல போக அந்த நேரம் பார்த்து ஜெய் அம்மா வந்து விட்டார்
டேய் ஜெய் யாருடா இந்த பொண்ணு என்று கேட்டபடி அவன் அருகில் வந்தார் ஜெயதாரணி.
அம்மா இது என்னோட பிரண்ட். நம்ம ஊருதான் பேர் பூஜா என்று தன்னுடைய தாய்க்கு அறிமுகம் செய்து வைத்தான் ஜெய்.
பூஜா மரியாதைக்கு அவரை பார்த்து புன்னகை செய்து வணக்கம் சொன்னாள்.
அவரும் அவளை பார்த்து புன்னகை செய்தார்.
அம்மா இவங்க கூட வேலை செய்யுறவருக்கு ஆக்சிடண்ட் ஆச்சுச்சு பாக்க வந்துருக்காங்க என்று சொன்னான் ஜெய்..
என்ன பேச விட மாட்ட போல. ஏன்டா உன் பிரண்ட் என்கிட்ட பேசுனா நான் அவள எதாவது பண்ணிடுவேனா என்ன. சும்மா இருடா என்றார் ஜெயதாரணி
அம்மா இல்லைம்மா அவங்களே ஒர்க் முடிச்சிட்டு ரொம்ப டையார்ட்டா வந்துருக்காங்க அவங்ககிட்ட போய் நீங்க இப்படி கேள்வி கேட்டா எப்படிம்மா அவங்க போகட்டும் நீங்க வேற எப்போவாது அவங்ககிட்ட பேசுங்க என்று சொன்னான் ஜெய்
ம்ம்ம் அப்படி சொல்றியா சரிம்மா. நம்ம அப்புறம் பேசுவோம் உன்னோட நம்பர் குடு என்று கேட்டார் ஜெயதாரணி. அவரை பார்த்த பூஜா ஜெய்யை மீண்டும் பார்த்தாள்.
அம்மா என்னம்மா நம்பர் எல்லாம் எதுக்கு உங்களுக்கு. அவங்க நம்பர் என்கிட்ட இருக்கு நான் உங்களுக்கு தர்றேன் என்று சொன்னான் ஜெய்.
யாரு நீ எனக்கு உன்னோட பிரண்ட் நம்பர் தருவியா.இப்படித்தான் சொல்லுவான் ஆனா ஒருமுறை கூட நம்பர் தந்தது இல்லை. நான்தான் எல்லார் கிட்டயும் கேட்டு வாங்குவேன். இப்போ உன்னோட நம்பர் எனக்கு தா என்றார் ஜெயதாரணி. பூஜா வேறு வழி இல்லாமல் தன்னுடைய நம்பரை ஜெயதாரணிக்கு கொடுத்தாள்.
சரி ஆன்டி எனக்கு லேட் ஆச்சு நான் கிளம்புறேன். என்று சொன்ன பூஜா அவர்கள் இருவரிடமும் விடைபெற்று விட்டால் போதும் என்று சென்று விட்டாள்.
அம்மா போலாமா என்றான் ஜெய்.
உன் பிரண்ட் ரொம்ப அழகா இருக்காடா. இந்த மாதிரி ஒரு பிரண்ட் இருக்கான்னு நீ என்கிட்ட சொல்லவே இல்லை.
ம்ம்ம் சொல்ல மறந்துட்டேன் . சரி போலாமா என்று கேட்டான் ஜெய்.
ம்ம்ம் போலாம் என்றார் ஜெயதாரணி. இருவரும் கிளம்பினார்கள்.
இங்கே சூர்யா அப்போதுதான் வேலை முடித்து வந்தவன். கொஞ்சம் நேரத்தில் பிரசாத் பார்க்க சென்று விட்டான்.
அவனும் பிரசாத்தும் மாடியில் நின்று பேச ஆரம்பித்தார்கள்.
என்ன விஷயம் சூர்யா நீ எதாவது முக்கியமான விஷயம் இருந்தாதான மாடிக்கு கூட்டிட்டு வருவ என்ன விஷயம் என்று கேட்டான் பிரசாத்.
இல்லை அது வந்து. நான் இப்போ எல்லாம் கொஞ்சம் மாறுன மாதிரி எனக்கு தோணுது. எப்படி சொல்லன்னு எனக்கு தெரியல ஆனால் நான் கொஞ்சம் மாறி இருக்கேன் அப்படிங்கிறது எனக்கு தெரியுது என்று ஆரம்பித்தான் சூர்யா பிரசாத் முகத்தில் புன்னகை தோன்றியது.
உனக்கே தெரியும் எனக்கு என்னோட வேலைய மத்தவங்க பண்ணா பிடிக்காது எனக்காக வெயிட் பண்ணா பிடிக்காது எனக்காக என்ன பண்ணாலும் எனக்கு கோபத்தைதான் வர வைக்கும் ஆனா எனக்காக தேவா வெயிட் பண்ணுறப்போ எனக்காக அவ எதாவது சமைக்கிறப்போ எனக்கு கோபம் வரல சந்தோசம்தான் வருது. இதெல்லாம் எனக்கு ரொம்ப புதுசா இருக்குடா. என்று சொன்னான் சூர்யா
அது ஒண்ணுமில்ல சூர்யா. நம்ம யார ரொம்ப நேசிக்கிறோமோ அவங்க நமக்காக சின்னதா ஒரு விஷயம் பண்ணா கூட ரொம்ப சந்தோசமா இருக்கும். அதனாலதான் நீயும் ரொம்ப சந்தோசப்படுற என்றான் பிரசாத்.
டேய் எனக்கு ஒரு விஷயம் புரியலன்னு கேட்டேங்குறதுக்காக நீ இல்லாத கதை எல்லாம் விடாத சரியா.ஒரு மாசம் கூட ஆகல அதுக்குள்ள அப்படி என்ன நேசம் வந்துட போகுது.என்று கேட்டான் சூர்யா.
ம்ம்ம் உன் மனசுல ஒண்ணுமே இல்லாமதான் நீ அந்த பொண்ண கல்யாணம் பண்ணியா அதை எல்லாம் யாராவது புயல் காத்துல உக்காந்து பொரி உருண்டை சாப்டுட்டு இருப்பான் அவன்கிட்ட சொல்லு. உனக்கு தெரியலடா நீ அந்த பொண்ண காதலிக்குறன்னு ஆனால் எனக்கு நல்லா தெரியுது என்று சொன்னான் பிரசாத்.
அப்படி எல்லாம் ஒண்ணுமில்ல என்றான் சூர்யா
இப்போ உனக்கு என்ன பிரச்சனை. நீ உன் பொண்டாட்டிய லவ் பண்ணுறேன்னு ஒத்துக்கிட்டா என்ன ஆகிட போகுது.ஏண்டா எல்லாரும் சுத்தி இருந்தாலும் தனி மரமாதான் நிப்பேன்னு அடம் பிடிக்கிற என்று கேட்டான் பிரசாத்.
டேய் நான் ஒரு குழப்பத்துல இருக்கேன்னு உன்கிட்ட தெளிவு படுத்திக்க வந்தா நீ என்ன இன்னும் குழப்புற என்றான் சூர்யா
சரி நான் குழப்பல அந்த பொண்ணு கூட ஒண்ணா சேர்ந்து வாழ உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டான் பிரசாத்.
பிரச்சனை அப்டின்னு ஒண்ணுமில்ல என்றான் சூர்யா.
அப்புறம் என்னடா. அந்த பொண்ணு கூட சந்தோசமா வாழு.என்றான் பிரசாத்.
பிரச்சனை இல்லை அப்டினா அங்க எல்லாம் சரியா இருக்குன்னு அர்த்தம் இல்லை பிரசாத். சேர்ந்து வாழுறது என்னோட தனிப்பட்ட விருப்பம் மட்டும் இல்லை தேவா விருப்பமும் கூட என்றான் சூர்யா
ஏன் அந்த பொண்ணு உன்ன பிடிக்காத மாதிரி எதாவது பண்ணாளா நீதான சொன்ன அவ உனக்காக வெயிட் பண்ணுறா. சாப்பாடு பண்ணுறான்னு அப்புறம் என்ன. உன்ன அவளுக்கு பிடிக்காமதான் இத்தனையும் பண்ணுறாளா என்றான் பிரசாத்.
இதெல்லாம் வச்சி முடிவு பண்ண முடியாது. எனக்கு தெரிஞ்சு அவளை யாராவது அடிச்சா கூட கையாலதான அடிச்சாங்க கட்டையால அடிக்கலயேன்னு அவங்க மேல கூட பாசம்தான் காட்டுவானு நினைக்கிறேன். அதனால உண்மையா அவ என்ன ஹஸ்பண்ட்ன்னு நினைக்கிறான்னா என்மேல கோவ படனும் அப்போதான் நான் அவ என்ன உண்மையா அவளோட உறவா நினைக்கிறான்னு ஏத்துப்பேன். அதுக்கப்புறம் வேணும்னா எனக்குள்ள காதல் இருக்கா கத்திரிக்கா இருக்கான்னு பாக்கலாம் என்று சொன்னான் சூர்யா.
டேய் அந்த பொண்ணு உன்கிட்ட கோப படுறதுக்குள்ள விடிஞ்சிடும்டா. நீதான் முயற்சி பண்ணனும் என்று சொன்னான் பிரசாத்.
எப்பா போதும்டா நிறுத்து இதுக்கு மேல எதுவும் பேசாத ஏற்கனவே ரொம்ப குழப்பமா இருக்கு நீ பேசுறதை எல்லாம் கேட்டா எனக்கு இன்னும் குழப்பம்தான் அதிகம் ஆகுது என்று சொன்னான் சூர்யா.
இல்லடா சொல்றதை கேளு என்று சொல்லும் போதே சஞ்சனா வந்து அவர்கள் இருவரையும் கீழே அழைப்பதாக சொன்னாள் . சூர்யா மற்றும் பிரசாத் கீழே சென்றார்கள் அங்கே தேவாவும் இருந்தாள். தேவா எதற்கு பிரசாத் வீட்டில் இருக்கிறாள் என்று பார்த்தவன் குளிம்பி போனான் அவளை தவிர எல்லோரின் கையிலும் மருதாணி இருந்தது
அது ஒண்ணுமில்லப்பா எல்லாரும் மருதாணி வச்சோம். இப்போ எல்லார் கையிலயும் மருதாணி இருக்கு. தேவாக்கு மட்டும் வச்சி விட ஆள் இல்லை. நீ கொஞ்சம் அவளுக்கு மருதாணி வச்சி விடேன் என்றார் பிரசாத் அம்மா.
நானா என்று ஆச்சர்யம் அடைந்தான் சூர்யா.
நீதான் வச்சி விடணும் வேற யார் பண்ணி விடுவா உரிமை உள்ள ஆள் நீதான இங்க வா என்று அழைத்தார் பிரசாத் அம்மா.
தேவா சூர்யாவை பார்க்க சூர்யா தேவாவை பார்த்தான்.
பார்த்ததும் போதும் வாடா என்று அழைத்தார் பிரசாத் அம்மா
அவரை மறுத்து பேச முடியாமல் தேவா அருகில் சேர் போட்டு அமர்ந்தவன் அவளுக்கு மருதாணி வைத்து விட ஆரம்பித்தான். அவனை எல்லோரும் கிண்டல் செய்தார்கள் பார்த்து பார்த்து வலிக்க போகுது என்றார்கள் அந்த அளவுக்கு தேவாக்கு பொறுமையாக வைத்து விட்டான் சூர்யா. ஒரு வழியாக வைத்து விட்டவன் அவளை பார்க்க அவளும் அவனை பார்த்து கொண்டிருந்தாள்.
அப்பாடா ஒரு வழியா வச்சி விட்டுட்டாரு நான் கூட நாளைக்கு ஆகுமோன்னு நினைச்சேன். வேண்டும் என்றே கலாய்த்தாள் அமிர்தா.
ம்ம்ம் வச்சது எல்லாம் சரிதான். தேவா நல்லா பாத்துக்கோ இந்த மருதாணி எந்த அளவுக்கு உன் கையில சிவக்குதோ அந்த அளவுக்கு சூர்யா அண்ணா உன்மேல பாசம் வச்சிருக்காருன்னு அர்த்தம். இனி நம்ம நாளைக்கு பாப்போம் எந்த அளவுக்கு உன் கை சிவந்துருக்குன்னு என்று சொன்ன அமிர்தா தேவாவை பார்த்து கண் அடித்தாள். அதே நேரம் அவள் சொன்னதை கேட்டு அதிர்ச்சி ஆன சூர்யா தேவா கையை பார்த்துவிட்டு அவள் முகத்தை பார்த்தான். தேவா அவனை பார்த்து புன்னகை செய்தாள்.
மருதாணி சிவக்குமா சிவக்காதான்னு அடுத்த பதிவில் பாப்போம்.அதுவரை உங்களிடம் இருந்து விடைபெறுவது அபிராமி G. N
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro